December 08, 2007

முத்துப்பேட்டையில் சபரிமலைக்கு மாலைபோட்டிருந்த மாணவர்கள் மீது முஸ்லிம் மாணவர்கள் தாக்குதல்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை முஸ்லிம்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு சிறு நகரம். இது பற்றி தமிழகத்தின் காஷ்மீர் முத்துப்பேட்டை என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அடிக்கடி முஸ்லிம்கள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு முத்திரையர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முத்துப்பேட்டையில் கடை வைத்துள்ள முஸ்லிமிடம் சிம் கார்டு வாங்கினார். அந்த சிம் கார்டு குறிப்பிட்ட காலத்தை கடந்த பிறகும் ஆக்டிவேட் ஆகவில்லை. இதனால் அந்த சிம் கார்டை எடுத்துக்கொண்டு ஏன் இன்னும் ஆக்டிவேட் ஆகவில்லை என்று கேட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்த இளைஞரை முஸ்லிம்கள் பலர் சேர்ந்து அடித்து துவைத்து விட்டனர்.


ஒரு அப்பாவி இளைஞரை முஸ்லிம்கள் அடித்துவிட்டார்கள் என்பதை கேள்விபட்ட முத்துப்பேட்டை மர்றும் அருகிலுள்ள ஜாம்பவவானோடை கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தட்டிக் கேட்டிருக்கிறார்கள். ஆயுதம் எதும் இல்லாமல் சென்ற இந்து இளைஞர்களை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் முஸ்லிம்கள் தாக்கியிருக்கிறார்கள். இந்த திடீர் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட இந்து இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். ரோட்டில் கிடந்த பாட்டில்கள், கற்களைப் பயன்படுத்தி இந்து இளைஞர்கள் எதிர் தாக்குதல் நடத்தியதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதன் பிறகு வழக்கம்போல முஸ்ல்லிம்களின் பணபலமும், அரசியல் பலமும் விளையாட ஆரம்பித்தது. 30-க்கும் மேற்பட்ட இந்து இளைஞர்களை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துவிட்டனர். பெயருக்கு முஸ்லிம்களில் சிலரை கைது செய்து பிறகு ஜாமீனில் விட்டுவிட்டனர். கைது செய்யப்பட்ட இந்து இளைஞர்களில் 23 பேர் சென்னையில் தங்கி காலை மாலை இரு வேளையும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகின்றனர்.


முத்துப்பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் இந்து மாணவர்களில் சிலர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தனர். 4-12-2007-ம் தேதி மாலை போட்டிருந்த மாணவர்கள் நெற்றியில் சந்தனம் அணிந்து கழுத்தில் மாலையுடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களைக் கண்டதும் முஸ்லிம் மாணவர்கள் ஆத்திரத்துடன் அவர்களை தாக்கியிருக்கிறார்கள். இதில் இந்து மாணவர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது. உடனே போலீசார் 9-ம் வகுப்பு படிக்கும் அய்யப்பன், மும்மது யாசர், பிளஸ்-1 படிக்கும் சுரேஷ், பிளஸ்-2 படிக்கும் அகம்மது என நான்கு மாணவர்களைப் பிடித்து அவர்களது பெற்றோர்களிடம் `இனி இதுமாதிரி நடக்காது' என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டார்கள்.

முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் இந்து மாணவர்கள் மீது முஸ்லிம் மானவர்கள் தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. பல ஆண்டுகளாக சபரிமலைக்கு மாலை போட்டு வரும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு நான் முத்துப்பேட்டைக்கு சென்றபோது இந்த தகவலைச் சொன்னார்கள். முத்துப்பேட்டை இந்துக்களுக்கு என்று விடிவுகாலம் பிறக்கப் போகிறதோ தெரியவில்லை.


ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த மோதலில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்டு ஜாம்பவானோடையைச் சேர்ந்தவரும் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவருமான கருப்பு என்கிற முருகானந்தத்தை என்கவுன்டரில் போட்டுத்தள்ள முயன்றவர் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன். இவர் இப்போது அகிலா என்ற பெண் என்ஜினியர் தற்கொலை வழக்கில் சிக்கியிருக்கிறார். இதுபற்றிய விவரங்கள் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன.

No comments: