நெல்லை தி.மு.க இளைஞரணி மாநாடு : தி.மு.க எம்.பி புறக்கணிப்பு!
திருநெல்வேலியில் தி.மு.க இளைஞரணி மாநாடு இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் ஆடம்பரமாக நடந்து வருகிறது. இம்மாநாட்டில் தி.மு.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பயபக்தியுடன் பங்கேற்றுள்ளனர். கருணாநிதி, ஸ்டாலின் உட்பட அனைத்து தி.மு.கவினரும் திருப்புமுனை மாநாடு என்று வர்ணிக்கும் இம்மாநாட்டில் தற்போது தி.மு.க எம்.பியாக இருக்கும் ஒருவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? ஆனால் அவரது பெயரைச் சொன்னால் வந்த ஆச்சரியம் எல்லாம் பறந்து போய்விடும். யார் அந்த எம்.பி ? நம்ம கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் தான்.

2 comments:
Fentastic Saravanaa
ஆர்வத்தை தூண்டும் செய்தி.
உஙகள் வலைப்பூ மனம் வீச வாழ்த்துக்கள்.
அன்புடன் ஜோதிபாரதி
Post a Comment