November 26, 2007

இஸ்லாமுக்கு மாற்றப்பட்ட நான்கு வன்னிய இளம்பெண்கள்!

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பசுபதிகோயில் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் லோகேஸ்வரி(22), அம்பிகா(20), சர்மிளா(19), பப்பி என்கிற சங்கீதா என்ற நான்கு மகள்களும் உள்ளனர். கலைச்செல்வன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவனை பறிகொடுத்துவிட்டு நான்கு மகள்களையும் சித்ரா கஷ்டப்பட்டு வளர்த்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவின் மூத்த மகள் லோகேஸ்வரி சக்கராப்பள்ளியில் உள்ள ரஜயா கிளினிக்கில் வேலைக்கு சேர்ந்தார். இந்த கிளினிக்கை டாக்டர் ரசாக் ஜானி நடத்தி வருகிறார்.

மதம் மாற்றப்பட்ட லோகேஸ்வரி, அம்பிகா, சர்மிளா ஆகியோரின் தாய் சித்ரா


லோகேஸ்வரியின் குடும்ப பின்னணியை அறிந்த டாக்டர் ரசாக் ஜானி லோகஸ்வரியை மூளை சலவை செய்து அவரின் மற்ற சகோதரிகளில் இருவரையும் தன் கிளினிக்கில் வேலைக்கு அமர்த்தி கொண்டார். என்னிடம் வேலைக்கு சேர்ந்தால் உங்கள் திருமணச் செலவை ஏற்றுக்கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைகூறி அவர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். இவரது கிளினிக்கிற்கு வரும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் திட்டமிட்டு இந்தப் பெண்களை மதம் மாற்றி இருக்கிறார்கள். அய்யம்பேட்டை அருகிலுள்ள மாகாளிபுத்தைச் சேர்ந்த கார் டிரைவர் முருகானந்தத்தின் மகள் கலைச்செல்வியையும்(20) இவர்களது வலையில் விழ வைத்துவிட்டார்கள். இந்த கலைச்செல்வி சித்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.


டாக்டர் ரசாக் ஜானி நடத்தும் ரஜயா கிளினிக்


4-11-2007 அன்று இந்த நான்கு பெண்களும் முத்துப்பேட்டைக்கு சுற்றுலா என்ற பெயரில் சென்றுள்ளனர். இவர்களோடு லோகேஸ்வரியின் கடைசி தங்கை பப்பி என்கிற சங்கீதாவையும் அழைத்துச் சென்றுள்ளனர். சங்கீதா 10 வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால் அவரை இப்போதைக்கு மதம் மாற்றினால் மூளை சலவை செய்தது வெட்டவெளிச்சமாகிவிடும் என்பதால் விட்டுவிட்டார்கள். சுற்றுலா சென்ற மகள்கள் நால்வரும் வீடு திரும்பவில்லையே என்று தாய் சித்ரா தவித்துக் கொண்டிருக்கும்போது லோகேஸ்வரி தனது தாய்க்கு போன் செய்துள்ளார். மகளிடம் இருந்து போன் என்றதும் ஆசையோடு சென்ற தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாங்கள் மூவரும் கலைச்செல்வியும் முஸ்லிமாக மாறிவிட்டோம் என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டதும் சித்ரா கதறி அழுதிருக்கிறார். அதன் பிறகு மெல்ல மெல்ல விஷயம் ஊர் மக்களுக்கு பரவ தங்கள் எதிர்ப்பைக் காட்டும்விதமாக கடையடைப்பு நடத்தியிருக்கிறார்கள்.

மதம் மாற்றத்திற்கு மூலகாரணமான டாக்டர் ரசாக் ஜானி


விஷயம் பெரிதாவதை உணர்ந்த முஸ்லிம் மதமாற்ற கும்பல் நான்கு பெண்களையும் சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இப்போது அந்த நான்கு பெண்களும் பாம்பாட்டியின் மகுடிக்கு ஆடும் பாம்பைப்போல தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் சொல்வதையே கேட்கின்றனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒரு நாடகத்தையும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் அரங்கேற்றி இருக்கிறார்கள்.

மதம் மாற்றப்பட்ட கலைச்செல்வியின் தந்தை முருகானந்தம்

கணவனும் இல்லை. கஷ்டப்பட்டு வளர்த்த நான்கு பெண்களில் மூவரை மதம்மாற்றிவிட்டார்கள். இந்த அதிர்ச்சியில் இருக்கும் சித்ராவிடம் நண்பர்கள் உதவியிடன் பேசினேன். அவரிடம் இருந்து அழுகைதான் பதிலாக வருகிறது. அந்த அளவிற்கு அதிர்ந்து போயிருக்கிறது அந்த தாயுள்ளம். 10 வகுப்பு படிக்கும் பப்பி என்ற சங்கீதாவிடம் நவம்பர் 4-ம் தேதி எங்கு சென்றீர்கள் என்றேன். முத்துப்பேட்டைக்கும் அதிராம்பட்டினத்திற்கும் சென்றோம் என்றார். முத்துப்பேட்டையும், அதிராம்பட்டினமும் இஸ்லாமிய ராஜ்ஜியம் நடக்கும் ஊர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மதம் மாற்றப்பட்ட உங்கள் மகள்களின் போட்டோ இருக்கிறதா என்று கேட்டோம். நிறைய போட்டோக்கள் இருந்தது. எல்லாவற்றையும் எடுத்துச்சென்றுவிட்டார்கள். பள்ளிச் சான்றிதழ்கள், ரேசன் கார்டின் நகல் உள்ளிட்ட தங்களைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் அவர்கள் துடைத்து எடுத்துச் சென்று இருப்பதை சித்ரா அழுகையோடு எங்களிடம் சொன்னார். லோகேஸ்வரியின் பெயரில் வங்கியில் ரூ 17,000 இருந்திருக்கிறது. அதற்கான பாஸ் புத்தகத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

மதம் மாற்றப்பட்ட லோகேஸ்வரி, அம்பிகா, சர்மிளா ஆகியோரின் தங்கை பப்பி என்கிற சங்கீதா

நான் அவரின் கடைசி மகள் சங்கீதாவிடம் பேசினேன். அவரின் பேச்சிலிருந்து அவரும் மற்ற சகோதரிகளுடன் செல்லவே விரும்புகிறார். சங்கீதாவுக்கு இஸ்லாம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. அக்காவுடன் செல்லவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருக்கிறது. ஆனால் 18 வயது ஆகவில்லை என்பதால் அவரை விட்டு வைத்திருக்கிறார்கள். 18 வயது ஆனதும் சங்கீதாவை விட்டு வைக்க மாட்டார்கள். முஸ்லிம்கள் மதம் மாற்றியதைக் கண்டித்து முழு அடைப்பு நடந்தபோது அய்யம்பேட்டை பேரூராட்சித் தலைவரான முஸ்லிம் காவல்துறையினருக்கு பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார்.

மதம் மாற்றத்திற்கு மூலகாரணமான டாக்டர் ரசாக் ஜானி தஞ்சையில் உள்ள ரோகிணி மருத்துவமனை என்னும் பிரபல மருத்துவமனையிலும் பங்குதாரராக இருக்கிறார். ரோகிணி மருத்துவமனையிலும் இதுபோன்ற மதம் மாற்றம் நடந்திருக்க / நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்துப்பெயரில் இருப்பதால் ஏமாந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


மதம் மாற்றப்பட்ட இந்த நான்கு பெண்களும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இன்று பசுபதிகோயில் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஏழை வன்னியத் தாய் அழுகிறாள். நாளை எத்தனை தாய் மகளை பறிகொடுத்துவிட்டு அழப்போகிறார்களோ. இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உங்கள் அன்பு மகள் உங்களுக்கு எதிரியாக மாறிவிடுவாள்.

4 comments:

ஜயராமன் said...

ஐயா,

நடந்திருக்கும் பயங்கரம் அந்த இளம் இளைஞிகளுக்கு விளைந்திருக்கும் பெறும் கொடுமை என்பதில் ஐயமில்லை.

இனி இவர்கள் உலகம் இந்த நடமாடும் கருப்பு கூடாரத்துக்குள் வெம்பி விடும். இது குறித்து இவர்களின் பெற்றோர்கள் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்கள் என்று நினைக்கவே மனம் பதறுகிறது.

இந்த பெண்கள் தங்களை வளர்த்து ஆளாக்கிய தங்கள் பெற்றோர்கள் கொடுத்தவற்றை சூரையாடி சென்றிருப்பது இவர்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பார்கள் என்று காட்டுகிறது. பணத்துடன்இவர்கள் ஓடியது ஒரு கிரிமினல் குற்றம். இதற்காக இவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.

இவர்கள் சென்னையில் காவலர்களிடம் அளித்துள்ள விளக்கம் மிகவும் நகைச்சுவையாய் இருக்கிறது. தாங்கள் வேலை பார்த்த கடையில் இரண்டு வருஷங்களாக குர்ஆன் படித்து அதனால் இஸ்லாத்துக்கு கவரப்பட்டோம் என்று சொல்கிறார்கள். இதை விட ஒரு அபத்தம் இருக்க முடியுமா. மனைவிகளை அடிக்க உரிமை சொல்லும் குர்ஆன், பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் பல்வேறு உரிமைகளை மறுக்கும் குர்ஆன், அடிமைப்பெண்களை வைத்துக்ககொள்ள அனுமதிக்கும் குர்ஆன், அடிமைப்பெண்களை வன்புணர உரிமை கொடுக்கும் குர்ஆன், சுவனத்தில் கட்டழிகிகளை வழங்குவேன் என்று சொல்லும் ஏக-இறைவன் என்று நூற்றுக்கணக்கான குர்ஆன் செய்திகளை இவர்கள் படித்திருப்பார்களா? உண்மையில் அதை அறிந்திருந்தால் இவர்கள் சுதந்திரம் கொடுக்கும் இந்துமதத்திலிருந்து ஓட விரும்புவார்களா? அறியா அபலைகளை சந்தர்ப்பம் வைத்து விலைக்கு வாங்கும் ஒரு பயங்கர கும்பலிடம் இவர்கள் மாட்டிக்கொண்டு விட்டார்களோ என்று ஐயமாய் இருக்கிறது.

இவர்களுக்காக வாதாடும் த.ஜ மற்றும் வழக்கறிஞர் சிராஜூதீன் அவர்கள் இது அவர்கள் பிறப்புரிமை என்கிறார்கள். நான் அவர்களைக்கேட்கிறேன். இந்த உரிமை உங்கள் மார்க்கத்தில் இருக்கும் முஸ்லிமாக்களுக்கு உண்டா. அதை ஏன் உங்கள் மதம் மறுக்கிறது. முஸ்லிம் பெண்கள் இந்துக்களை மணம் புரிவதை இவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் வரவேற்கிறோம் என்று சொல்லட்டும். இல்லையேல், இவர்களும் இவர்களின் மார்க்கமும் ஒரு பெரிய்ய புரட்டு என்றே நிரூபணம் ஆகும்.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

MR Ramdoss and Anbumani Ramdoss trying to woo mullah votebanks but loosing their own people.
What are they doing?

Anonymous said...

ISLAM growth not only TamilNadu,a world wide.

SEE the proof,

http://shafi4you.blogspot.com/2007/12/angela-collins-converted-to-islam.html

Anonymous said...

Dear Mr.Saravanan,

I read all ur comments & ur information abt islam. It seems u r totally against islam. I am hereby declaring you that if u or anybody else in ur RSS/Sanghparivar group can prove that islam is against the rights of womens or thier rights???If u or ur group proved that islam is against ladies's rights then i promise you that i will bring 1000muslims to u to convert in hindu religion. if possible please inform me in following mail id to have a open debate in tamil nadu itself infront of all ur people. Bring ur topmost RSS leaders to debate.If we proved that islam is not against women's rights, then do u have guts to accept islam is the perfect religion???I hope u will approve this matter to relaese in ur blog...

With regards,

Your's brother...
Mail id: mailfromprotector@yahoo.ca