December 10, 2007

கேரள கம்யூனிஸ்டு அலுவலகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு

கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் மாவட்டம் மார்க்கிஸ்டுகளின் வன்முறைக் களம். நீங்கள் பாகிஸ்தானுக்குகூட சுலபமாக சென்று வந்துவிடலாம். கண்ணூர் மாவட்டத்திற்குள் யாரும் அவ்வளவு சுலபமாக சென்று வந்துவிட முடியாது. வானத்து நட்சத்திரங்களைக்கூட எண்ணிவிடலாம். கண்ணூரில் மார்க்கிஸ்டுகளால் கொன்று குவிக்கப்பட்டவர்களை யாரும் எண்ணிவிட முடியாது. நான் மிகைப்படுத்திக் கூறவில்லை. கண்ணூரை பற்றி அறிந்த அனைவருக்கும் இந்த உண்மையை அறிவார்கள். ஆர்.எஸ்.எஸ்க்கு மாறிவிட்டார்கள் என்பதற்காக மிக நெருங்கிய உறவினர்களைக்கூட கம்யூனிஸ்டுகள் கொன்று குவித்திருக்கிறார்கள்.

9-12-2007 அன்று கண்ணூர் மாவட்டம் கோளாரி என்ற இடத்தில் உள்ள கம்யூனிஸ்டு அலுவலகத்தில் மார்க்கிஸ்ட் தொண்டர்கள் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது. இதில் தலசேரியைச் சேர்ந்த ஷஜில்(29)மார்க்கிஸ்ட் தொண்டர் உடல் சிதறி உயிரிழந்தார். பிரபீஷ்(27), தீலிப்(28),ரஜீஷ்(27) ஆகிய மூன்று மார்க்கிஸ்ட் தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குன்டு வெடிப்பின் மூலம் கேரள கம்யூனிஸ்டு அலுவலகங்கள் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக செயல்படுவது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

Source : Maalai Malar(Tamil evening daily) 10-12-2007

1 comment:

Anonymous said...

ஐயா,

என் தூரத்து உறவினர் ஒருவர் ஆர் எஸ் எஸ்ல் சேர்ந்துவிட்டார் என்பதற்காகவே குத்தி கொல்லப்பட்டார். வீட்டு வாசலில் வைத்து. திருவனந்தபுரத்தில் நடந்தது இது.

வயதான பெற்றொருக்கு அவர் ஒரே பிள்ளை. அவர்களுக்கு வேறு குழந்தைகள் இல்லை.

அவரது பெற்றோர்கள் முன்னிலையில், அவர்கள் கதற கதற குத்தி கொல்லப்பட்டார். கொன்ற கம்யூனிஸ்ட் காம்ரேட் வீட்டின் அருகில் இருந்த குளத்தில் நிதானமாய் இறங்கி கத்தியை கழுவிவிட்டு, பின் அங்கே இருந்த ஒரு டீக்கடையில் காசு தராமல் டீ குடித்துவிட்டு சென்றுவிட்டான்.

இன்றுவரை அவனுக்கு தண்டனை கிடைக்கவில்லை.