December 26, 2006

காரைக்கால் : பயங்கரவாதிகளின் கூடாரம்


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு முக்கிய மாவட்டமான காரைக்காலில் மதுக்கடைகளுக்கு இணையாக மசூதிகள் உள்ளன. 10 வருடங்களுக்கு முன்பு சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருந்த முஸ்லிம்கள் பலர் கோவை குண்டு வெடிப்பிற்கு பிறகு திடீர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். முஸ்லிம் தெருக்களில் புதிது புதிதாக வாகனங்கள் பவனி வருகிறது. புதிய ஆட்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. தமிழக பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் இங்கு ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். தமிழகத்தில் குடியிருக்கும் முஸ்லிம்கள் பலருக்கு காரைக்காலில் ரேசன் கார்டு உள்ளதாம். ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளிலிருந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் கலந்து கொண்ட மூன்று நாள் `தப்ளீக் மாநாடு' காரைக்காலில் உள்ள நிரவியில் நடந்திருக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டதாக `ஜூனியர் விகடன்' 6-1-2002 இதழில் செய்தி வெளியிட்டுள்ளது. 2002ம் ஆண்டிலேயே விலை உயர்ந்த செல்போன்கள் காரைக்காலில் தாராளமாக புழங்கியிருக்கிறது. சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்த இஸ்லாமிய பயங்கரவாதி இமாம் அலி காரைக்காலில் 10 மாதம் தங்கி ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளான்.
காரைக்காலில் மாசிமக விழா மிகச்சிறப்பாக நடைபெறும். திருக்கண்ணபுரம் பெருமாள் கோயிலிலிருந்து சீனிவாசப் பெருமாள் ஊர்வலமாகப் புறப்பட, அருகருகில் உள்ள கோயில்களின் பெருமாள்களும் ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்கள். இந்த உற்சவர்கள் கடற்கரையில் தீர்த்தவாரி முடிந்து கோயிலுக்குத் திரும்பிச் செல்லும் அழகே அழகு. காரைக்கால் மக்களின் முக்கிய விழாவான இந்தத் தீர்த்தவாரி விழா முஸ்லிம்களின் தலையீட்டால் 1918ல் நின்றுபோனது.
ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற ஹிந்து அமைப்புகள் வலுப்பெற்ற பிறகு 60 ஆண்டுகள் நடக்காமல்போன தீர்த்தவாரி 1986லிருந்து நடக்க ஆரம்பித்தது. இந்த தீர்த்தவாரியை சீர்குலைக்க முஸ்லிம்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
காரைக்காலில் முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகளில் ஆகஸ்டு 14ம் தேதியே சுதந்திர தினத்தைக் கொண்டாடி விடுகிறார்கள். காரைக்கால் வட்டாரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் ஜம்மு- காஷ்மீர் மாணவர்கள் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட தினத்தன்று பார்ட்டி வைத்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.(6-1-2002 `ஜூனியர் விகடன்' செய்தி). காரைக்காலில் உள்ள பெண்கள் கல்வி நிறுவனம் ஒன்றில் மர்மமான காரியங்கள் நடப்பதாக உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. காரைக்கால் வட்டாரத்தில் உள்ள அம்பகரத்தூர், நல்லம்பல், கருக்கங்குடியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

காரைக்காலில் கடல் அலை மோதும் இடத்தில் அண்டர் கிரவுண்ட் மசூதி கட்ட முஸ்லிம்கள் திட்டமிட்டனர். இந்து முன்னணியின் எதிர்ப்பால் இது முறியடிக்கப்பட்டது. இந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்பதால் புதுச்சேரி அறநிலையத் துறை கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியது. நேரு நகரில் வீட்டுவசதி வாரியம் மூலம் விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் எட்டு வீடுகளை காலி செய்துவிட்டு மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர். தஞ்சைத் தரணியின் மற்ற நகரங்களைப் போலவே காரைக்காலிலும் 70 சதவீத வியாபாரம் முஸ்லிம்களிடம் உள்ளது. மொத்தத்தில் காரைக்கால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

No comments: