January 17, 2007

வழிபாட்டு நிலத்தைக் காப்பாற்ற போராடும் ஹிந்துக்கள்!

இராசாத்துபுரத்தில் புன்செய் சர்வே எண் 256/2ல் உள்ள 31.66 ஏக்கர் நிலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முந்திரித் தோப்பாக இருந்தது. இந்த இடத்தில்தான் வருடந்தோறும் இராசாத்துபுரத்திலுள்ள வன்னிய சமுதாயத்தினரும், அரிஜன மக்களும் காணும் பொங்கலை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். இங்கு பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.
பல நூறு ஆண்டுகளாக இந்துக்களின் வழிபாட்டுத் தலமாகவும் காணும் பொங்கல் கொண்டாடும் இடமாகவும் இருந்த இந்த முந்திரித் தோப்பின் மீது முஸ்லிம்களின் பார்வை விழுந்தது. இந்த முந்திரித் தோப்பில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்ட மிட்டனர். இதற்காக மேல்விஷாரம் நகராட்சியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.
நகராட்சி நிர்வாகம் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தீர்மானம் எளிதாக நிறைவேறியது. ஆனாலும் இராசாத்துபுரம் இந்துக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவர்களால் அமைக்க முடியவில்லை.
இதனால் திட்டமிட்டு படிப்படியாக அங்கிருந்த 7,000 முந்திரி மரங்களையும் வெட்டி, அந்த முந்திரித் தோப்பை இன்று வெறும் மைதானமாக மாற்றிவிட்டார்கள். இப்படி கொள்ளை போன முந்திரி மரங்களின் மதிப்பு சுமார் 10 கோடி இருக்கும் என்று உள்ளூர் மக்கள் மதிப்பிடுகிறார்கள். இந்த முந்திரித் தோப்பைப் பாதுகாப்பதற்காக சுமார் 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டிருந்த 7 அடி உயர முள் வேலியையும் மேல்விஷாரம் நகராட்சி இல்லாமல் செய்துவிட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையும் கடத்திச் சென்றுவிட்டார்கள். முஸ்லிம்களின் இந்த அராஜகத்தை எதிர்த்துப் போராடியும் பலன் இல்லை.
இந்த 31.66 ஏக்கர் நிலத்தையும் இராசாத்துபுரம் அரசு இந்து உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்கு மாற்றித் தருமாறு, பலமுறை இராசாத்துபுரம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. அந்த இடத்தை எப்படியாவது ஆக்கிரமித்துவிட வேண்டும் என்று வெறியுடன் இருக்கும் முஸ்லிம்கள், இப்போது பாதாள சாக்கடைத் திட்டம் என்ற பெயரில் அந்த இடத்தை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளனர். முஸ்லிம்களின் இந்த எல்லா சதித்திட்டங்களையும் முறியடித்து, எங்களின் வழிபாட்டுத் தலமான அந்த இடத்தைக் காப்பாற்றியே தீருவோம் என்கிறார்கள் இராசாத்துபுரம் இந்துக்கள்.

No comments: