August 08, 2007

இது கற்பனை அல்ல

3007ம் ஆண்டு அமெரிக்காவில் வசிக்கும் ஒரு மாணவனிடம் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது என்று எழுதச் சொன்னால் எப்படி எழுதுவான்.
இப்படிதான் எழுதுவான்.

21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியா என்று அழைக்கப்பட்ட நாடு மிக உன்னத நிலையில் இருந்தது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் பண மழை பொழிந்தது. குக்கிராமங்களில் வானம் பார்த்த பூமி கூட கோடிக்கணக்கில் விலை போனது. பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவாக இருந்ததால் முதிர் கன்னிகளுக்கும், அழகற்ற பெண்களுக்கும்கூட உடனே திருமணம் நடந்தது. குண்டு வைத்து அப்போது பெரும்பான்மையாக வாழ்ந்த ஹிந்துக்களைக் கொன்று குவித்தவர்கள் தியாகிகளாகப் போற்றப்பட்டனர். 20ம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நகராக விளங்கிய மும்பையை குண்டு வைத்து தகர்த்த தாவூத் இப்ராகிம் என்பவர் பாலிவுட் என்றழைக்கப்படும் மும்பை திரையுலகையே தன் பிடிக்குள் வைத்திருந்தார்.

ஒருமுறை இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அன்றைய பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சித் தலைவர் சோனியா உள்ளிட்டோர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி ஒளிந்து கொண்டார்கள். பயங்கரவாதிகளின் தாக்குதலை இந்திய ராணுவமும், தலைநகர் டெல்லி காவல்துறையினரும் வெற்றிகரமாக முறியடித்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நாடாளுமன்ற தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த ஜிலானி என்பவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். இன்னொரு முக்கிய குற்றவாளி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீதா தாக்குதல் நடத்தினார்? இந்திய நாடாளுமன்றத்தின் மீதுதானே தாக்குதல் நடத்தினார். அதற்காக எதற்கு தண்டனை? வேண்டுமானால் நாடாளுமன்றத்தை தகர்க்க முடியாமல் பாதியிலேயே தடுத்து உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு வேண்டுமானால் தண்டனை தரலாம் என்று அரசியல் கட்சிகள் பேசும் அளவிற்கு இந்தியாவில் அப்போது மதச்சுதந்திரம் இருந்தது.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஒருவர் எனக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் முடிந்து விட்டது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். 14 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழந்து போரடித்து விட்டது. எனவே நாங்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டு ஒரே வீட்டில் நண்பர்களாக வாழப் போகிறோம் என்று அறிவித்தார். 20ம் நூற்றாண்டின் இறுதியில் கோலிவுட் என்றழைக்கப்பட்ட தமிழ் திரையுலகை தன் இசையால் வசப்படுத்திய இளையராஜாவின் மகனும், மருமகளும் விவாகரத்து கேட்டு ஒன்றாக ஒரே காரில் நீதிமன்றம் சென்று ஒரே பேனாவால் விவாகரத்து மனு எழுதிக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் அன்று எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் சிரித்து பேசிக் கொண்டிருந்த செய்தி தமிழ் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்தது. இப்படி விவாகரத்து பெறும்போதுகூட பெண்கள் மகிழச்சியோடு இருந்தார்கள். கணவனை விவாகரத்து செய்துவிட்டு ஒரே வீட்டில் நண்பர்களாக வாழ முடியும் என்கிற அளவுக்கு பெண்களுக்கு சுதந்திரம் இருந்தது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த முக்கிய நகரமான கோயமுத்தூரில் குண்டு வைத்து 58 பேர் இறக்க காரணமான கேரளத்தைச் சேர்ந்த (இது தமிழகத்திற்கு பக்கத்தில் உள்ள ஒரு மாநிலம்) மதானி என்பவர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார். அவரை கேரள மாநில போலீசார் ராஜ மரியாதையுடன் அழைத்துச் சென்றனர். அவருக்கு மந்திரி பதவி கொடுக்க தயாராக இருப்பதாக அப்போது முதல்வராக இருந்த அச்சுதானந்தம் என்பவர் அறிவித்தார்.

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேரு என்பவரின் குடும்பம் இந்தியாவில் அப்போது மிகச் செல்வாக்கோடு இருந்தது. நேருவுக்கு பிறகு அவரது மகள் இந்திரா. இந்திராவுக்கு பிறகு அவரது மகன் ராஜீவ் என அவரது குடும்பத்தினரே பிரதமராக பதவி வகித்தனர். ராஜீவ் இங்கிலாந்திற்கு படிப்பதற்காச் என்றார். அங்கு இத்தாலியைச் சேர்ந்த சோனியா என்பவரை காதலித்து மணந்து கொண்டார். ராஜீவ் மறைவுக்கு பிறகு சோனியாவால் மட்டுமே 100 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை காப்பாற்ற முடியும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதை உடனடியாக மற்றவர்கள் ஏற்க மறுத்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு பலரும் ஏற்றுக் கொண்டனர். சோனியா பிரதமராக இல்லாவிட்டாலும் பிரதமரின் குடுமி சோனியாவின் கையில்தான் இருந்தது.(அப்போது இந்தியாவில் குடுமி வைக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் பிரதமராக இருப்பவர்கள் மட்டும் சோனியா பிடிப்பதற்கு வசதியாக குடுமி வைத்துக் கொண்டனர்.)

சோனியாவின் ஒரே மகள் பிரியங்காவிற்கு டெல்லியில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு தனக்கு அழைப்பு இல்லாதாபோதும்கூட அப்போது தமிழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த மூப்பனார் என்பவர் கூடை கூடையாக மல்லிகைப் பூக்களை அனுப்பி வைத்தார். அந்த அளவிற்கு பெருந்தன்மை மிக்கவர்களாக தமிழர்கள் இருந்தனர். மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ் படத்தில் நடிக்க வந்த நடிகைகளுக்கு தமிழர்கள் முக்கிய இடம் கொடுத்தனர். மும்பையில் இருந்த தமிழ் படத்தில் நடிக்க வந்த குஷ்பு என்பவர் பெயரை இட்லிக்கு(தமிழகத்தின் பிரபலமான ஒரு சிற்றுண்டி) வைத்து விட்டனர். குஷ்பு இட்லி சாப்பிடாதவர்கள் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

அந்த காலகட்டத்தில் இந்தியாவில் மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் பல அமைப்புகள் செயல்பட்டன. இவர்கள் ஹிந்துக்களை குண்டு வைத்தும், அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டும் கொன்று குவித்தவர்களை நீதிமன்ற வழக்குகளில் இருந்தும், காவல்துறையினரிடம் இருந்தும் காப்பற்றுவதை கடமையாகக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் எங்காவது ஹிந்துக்களின் இடங்களில் கட்டப்பட்ட சர்ச் அல்லது மசூதிக்கு சிறு சேதாரம் விளைவித்த ஒரு ஹிந்துவைக் கூட அவர்கள் தப்பவிட்டதில்லை. அவர்களுக்கு பல ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தனர். இப்படியாக 20ம் நூற்றாண்டின் இறுதியிலும் 21ம்நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியா ஓர் உன்னத இடத்தில் இருந்தது.

(குறிப்பு : கட்டுரை சுருக்கமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால் பல விஷயங்கள் விட்டுப்போய் விட்டது. மன்னிக்கவும்)

9 comments:

Anonymous said...

அய்யா சரவணன் அவர்களே,

3000 வருடத்தில் இந்தியா ஒரு இஸ்லாமிய குடியிறுப்பாக மாறியிருக்கும். ஷரிய்யா சட்டம்தான் அமலில் இருக்கும். அதன்படி, இந்தியாவின் இஸ்லாம் அல்லாத பழைய வரலாற்றுகளை சிறப்பாக சொல்பவர்களை கல்லால் அடித்துக்கொள்ளுவார்கள். ஜகீலியா என்ற இந்த 21ஆம் நூற்றாண்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஒரு அமெரிக்கன் கட்டுரை எழுத முடியாது. ஏனென்றால், அமெரிக்காவும் இஸ்லாமிய நாடாக ஆகியிருக்கும். எல்லாப்புகழும் அந்த ஏக இறைவனுக்கே!

நன்றி

ஜயராமன்

Anonymous said...

ஜிகாதிகள் ஒருவருக்கொருவரைக் கொன்று குவித்துக் கொள்ளும் வேகத்தைப் பார்த்தால் வரலாறு வேறு மாதிரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது..

"அரேபியப் பாலைவனத்தில் தோன்றி சில நூற்றாண்டுகள் உலகின் பல நாடுகளையும் ஆக்கிரமித்திருந்து பின்னர் சுவடே தெரியாமல் அழிந்து விட்ட இஸ்லாம் என்ற பயங்கரவாத மத்தைப் பின்பற்றுபவர்கள் 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பல இடங்களில் வன்முறைகளை நிகழ்த்தி வந்தார்கள்...... "

Anonymous said...

சரவணன்,


உங்களது நகைச்சுவையுணர்வை நினைத்து சிரிப்பதா, அல்லது இவற்றுக்குப்பின் இருக்கும் நிதர்சனங்களை நினைத்து அழுவதா என்று தெரியவில்லை.


***

இது ஒரு புறமிருக்கட்டும், சம்பந்தமில்லாத ஒரு விஷயம் என் நினைவுக்கு வந்தது, இதைப் படிக்கையில்:

//மும்பையில் இருந்த தமிழ் படத்தில் நடிக்க வந்த குஷ்பு என்பவர் பெயரை(தமிழகத்தின் பிரபலமான ஒரு சிற்றுண்டி) இட்லிக்கு வைத்து விட்டனர். குஷ்பு இட்லி சாப்பிடாதவர்கள் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
//

இந்த குஷ்பு இட்லியில் ஆமணக்கு விதை மற்றும் எதேதோ சேர்க்கிறார்கள்(வெண்மை நிறத்துக்கு, fermentatio nக்கு) அதனால் உடலுக்கு நல்லதல்ல என்று படித்தேன் - உண்மையா.

புதுவை சரவணன் said...

சுருக்கமாக எழுத வேண்டும் என்கிற கட்டாயம் இருந்ததால் 2007 வரை நடந்த விஷயங்கள் பற்றி மட்டுமே அந்த அமெரிக்க மாணவனால் எழுத முடிந்தது. 2007 க்கு பிறகு என்ன நடந்தது என்பதை அமெரிக்கா மாணவர்களாக கற்பனை செய்து கொண்டு இங்கு யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் இடலாம்.

புதுவை சரவணன் said...

குஷ்பு இட்லியில் ஆமணக்கு விதை சேர்க்கிறார்கள் என்பது உண்மைதான். ஆமணக்கு விதை வெண்மை நிறத்துக்காக மட்டும் சேர்க்கப்படவில்லை. இட்லி செலவில்லாமல் உப்பி அளவு
பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்காவும் சேர்க்கப்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு எதிரே இட்லிக் கடை வைத்திருக்கும் ஒருவர் கூற கேட்டிருக்கிறேன்.(இந்தக் கடையில் குஷ்பு இட்லி என்று தெரியாமலேயே அந்த இட்லியை பல நாட்கள் சாப்பிட்டிருக்கிறேன்) குஷ்புவின் கருத்துக்கள் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. குஷ்பு இட்லியில் சேர்க்கப்படும் ஆமணக்கு விதை உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.

கால்கரி சிவா said...

சரவணன், ஒரு பாவமும் அறியாத அப்பாவி ஒருவரை அவர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால் சிறையில் வைத்ததால், அதன் பாவ பிரயார்சித்தமாக கோயம்புத்தூர் என்ற நகரத்தின் பெயரை மதானிப்புத்தூர் என மாற்றி தம் மதச் சார்பின்மையை, அந்த காலத்தில் தமிழக முதல்வராக இருந்த, 64 கலையையும், அறிந்த மிக பிற்படுத்தப்பட்ட, சுமார் 2000 கோடிகளை மட்டும் சம்பாதித்த பரம ஏழையான கருணாநிதி நிலைநாட்டினார்

எதிரொலிகள் said...

இரண்டாயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்து பகீர் தகவல்களைப் படித்தபிறகு எனக்குத் தோன்றுவது...
ஒரு கணித மாணவனாக, புள்ளியியல் துறை மாணவனாக இருந்த எனக்குத் தோன்றுவது... போகிற போக்கைப் பார்த்தால், 3000 ஆண்டுகள் தேவையில்லை இந்த நிலையை அடைய... இன்னும் 100 அல்லது 200 ஆண்டுகள் போதும்...

எல்லாரையும் ஏற்றுக்கொண்டார்கள் அந்தக் காலத்தில்... அடிமைப்படுத்துவதற்கு இஸ்லாம் வாளேந்தி வந்தது. கிறித்துவம் ஒரு கையில் தொழில் நுட்பத் துப்பாக்கியும் மறுகையில் பிச்சைபோடுகின்ற வகையில் சில்லறைகளையும் கொண்டு வந்தது. சென்ற நூற்றாண்டுகளில் இருந்த இந்தியர்களுக்கு தன்மானம் ரத்தத்தில் இருந்தது. அவர்களுக்கு இந்த நாட்டைப் பற்றிய உணர்வை ஊட்டுவதற்கு எல்லாம் இருந்தது. அவர்களுக்கு இந்த அளவுக்கு ஆசைகள் இருந்ததில்லை. ஆனால் இன்று...?

எப்படிப்பட்ட வர்த்தக உலகத்தில், காசுக்காக ஈனச் செயல்களைச் செய்யும் நிலைக்கு வந்துவிட்ட மக்களுக்கு காசே பிரதானமாகி ஆகிவிடும் என்றே தோன்றுகிறது. கூடவே மதச்சார்பற்ற போக்கு என்ற பெயரில் பழமைக்கு வேட்டு வைத்து நாட்டைக் கூறுபோடும் போக்கு மிகுந்துவிட்டது.

இன்னும் 200 வருடத்தில் நீங்கள் எழுதியிருப்பது நடக்கலாம்...

- ஸம்பாதி

Anonymous said...

saravanan,ungal karppanai nandraga irundhadhu. aanaal india hindukkalin naadaagathan irukkum.yeanendral islaamiya naadukalum kiruththuva naadukalum nichiyam adithukkoondhu saagathan poogerathu. yeanedral adhuthan vidhium kooda.katturai supper.

Anonymous said...

Sambavaami Yuge, Yuge! Dharmo Rakshathi Rakshitha: Yes, this is going to be TRUE; but the time and opportunity will never slip. India, that is Bharat will survive for ever, despite the politicians mean mentality and naked greed for their power and money acts.

Dharmo Rakshathi Rakshitha!

Srimannarayanan