August 16, 2007

உங்களுக்காக சில காட்சிகள்

வீட்டைவிட்டு வெளியே வந்தால் நமக்காக பல சுவாரஸ்யங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. பல நேரங்களில் ஒரு நிமிட ரசிப்போடு அந்த சுவாரஸ்யங்கள் நமக்குள் புதைந்து போகின்றன. அப்படிப்பட்ட சுவாரஸ்யங்களை சிலவற்றை இங்கே நீங்கள் ரசிக்கலாம்.
ஆடி மாதம் வந்துவிட்டாலே சென்னையில் ஒருவித உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அதுவும் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உற்சாகத்திற்கு கேட்கவே வேண்டாம். எல்லா அம்மன் கோவில்களிலும் கச்சேரி களை கட்டுகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க சந்திப்புகளில்கூட மேடை அமைத்து இசைக் கச்சேரிகள் நடத்துகிறார்கள். எல்லா இடங்களிலும் மின்விளக்குகளால் ஆன அம்மனின் கட் அவுட்டுகள் மின்னுகின்றன. சென்னை சேத்துப்பட்டில் இரவு 11 மணிக்கு எடுக்கப்பட்ட சில படங்களை பாருங்களேன்.





ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட தன் மனைவி சீதா தேவியை மீட்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு ஷ்ரீ ராமபிரான் பாலம் அமைத்ததாக ஹிந்துக்கள் நம்புகிறார்கள். சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் இந்த ராமர் பாலத்தை மத்திய அரசு இடித்து வருகிறது. இதனை கண்டித்து ஹிந்து அமைப்புகள் தீவிரமாக போராடி வருகின்றன. உடுப்பி பெஜாவர் மடத்தின் அதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் இந்த ராமர் பாலத்தைக் காக்கும் போராட்டங்களில் ஆர்வமுடன் பங்கேற்கிறார். ஆகஸ்டு 12ம் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இந்து அமைப்புகள் நடத்திய உண்ணாவிரதப்போராட்டத்தில் பெஜாவர் மடாதிபதி தனது சீடர்களுடன் பங்கேற்றார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண் ஒரு
காதை அடைத்துக் கொண்டு செல்லில் கதைக்கிறார்



மொபைல் போனில் பேசுகிறார் 77 வயது பெஜாவர் மடாதிபதி


உண்ணாவிரதப் போராட்டத்தில் பெஜாவர் மடாதிபதி பேசுகிறார்


உண்ணாவிரதப் பந்தலில் செய்தியாளர்களிடம் பேசுகிறார்

வி.இ.ப தலைவர் எஸ்.வேதாந்தம்



இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அவர் ஆகஸ்டு 10ம் தேதி நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு மாம்பழம் கொடுத்து ஆசி வழங்கினார். ஒருசில நிருபர்களைத் தவிர மற்றவர்கள் காலில் அணிந்திருந்த ஷூக்களை கழற்றி விட்டு பயபக்தியுடன் சுவாமியிடமிருந்து பழங்களை பெற்றுக்கொண்டனர். இந்த நேரத்தில் அருகில் இருந்த இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் பழம் பெரும் பத்திரிகையாளர்கள் என்று கமெண்ட் அடிக்க எல்லோருடைய கவனமும் அவர் பக்கம் சென்றது. பெஜாவர் மடாதிபதியின் சம்ஸ்க்ருதம் கலந்த இந்தி உரையை இராம.கோபாலன் தமிழில் மொழிபெயர்த்தார். பத்திரிகையாளர் சந்திப்பிலும், உண்ணாவிரதப் பந்தலிலும் எடுக்கபப்ட்ட சில புகைப்படங்களை பாருங்கள். உங்கள் கமெண்ட்களை பின்னூட்டம் இடுங்கள்.

'பழம்' பெரும் பத்திரிகையாளர்கள்


உண்ணாவிரதப் போராட்ட மேடையில் ரிலாக்ஸாக
ராமாயணம் படிக்கிறார் பெஜாவர் மடாதிபதி
செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசுகிறார்
பெஜாவர் மடாதிபதி

No comments: