September 07, 2007

ராமேஸ்வரம் கோயிலில் தி.மு.க தொழிற்சங்கம்!


தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுளர்களையும் இழிவுபடுத்துபவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளர்கள் தி.மு.க சார்பில் `அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்' என்ற பெயரில் சங்கம் ஆரம்பித்துள்ளனர்.


தாங்கள் தொழிற்சங்கம் ஆரம்பித்தற்கு அடையாளமாக கிழக்கு கோபுர வாசலுக்கு அருகில் ஒரு விளம்பர பலகை வைத்துள்ளனர். அதில் சிவலிங்கத்தைப் பார்த்து கருணாநிதி புன்னகைக்கிறார்.இதில் தி.மு.க நிர்வாகிகளின் பெயர்களுடன் சில கோயில் குருக்களின் பெயர்களும் உள்ளன. தி.மு.கவினர் பக்தர்களை ஈர்ப்பதற்காக தொழிற்சங்கம் ஆரம்பித்தார்களா? அல்லது ஆளும் கட்சியின் தயவு வேண்டும் என்பதற்காக கோயில் பணியாளர்கள் சங்கம் ஆரம்பித்தார்களா? அல்லது தி.மு.கவினர் கோயில் பணியாளர்களுடன் சேர்ந்து கூட்டு கொள்ளை அடிப்பதற்காக இப்படி ஒரு சங்கம் ஆரம்பித்துள்ளார்களா? தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி மர்மமாகவே உள்ளது.


அதுசரி, ஈ.வே.ராவின் சீடர் கருணாநிதி இதற்கு என்ன சொல்ல போகிறார்?

No comments: