October 04, 2007

என் புகைப்படத் தொகுப்பிலிருந்து...


மேலே உள்ள படத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு உதவிப் பொருட்களை வழங்குபவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் தென்தமிழக அமைப்பாளர் திரு.கோ.ஸ்தாணுமாலயன். இந்தப்படம் சுனாமியின்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் அதன் சேவைப் பிரிவான சேவாபாரதியும் மக்களை எந்தவிதத்திலும் பிரித்துப் பார்ப்பதில்லை என்பதை இப்படம் நமக்கு உணர்த்துகிறது.


நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல என்பதை காட்டுவதற்காக இப்படி ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சிலர் வாதிடலாம். ஆனால் இப்படத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் எங்கும் வெளியிடவில்லை. அவர்கள் வெளியிடும் பத்திரிகைகளில்கூட இப்படத்தை பார்க்க முடியவில்லை. இதிலிருந்து விளம்பரத்திற்காக அளிக்கப்பட்ட உதவி அல்ல என்பதும், விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட படம் இதுவல்ல என்பதும் தெளிவாகிறது. என்னுடைய புகைப்படத் தொகுப்பை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது இந்தப் படம் கிடைத்தது. அதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

No comments: