June 21, 2007

வாடிப்பட்டி வாடிமா நகர் ஆனது!

மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி என்ற ஊர் இருக்கிறது. இந்த வாடிப்பட்டி கடைச்சங்க காலத்து பாண்டிய மன்னர்களின் வரலாறுகளுடன் பின்னிப் பிணைந்த ஒரு சிறு நகரமாகும். குலசேகரப் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சிக் கோயில் ஒன்று இந்த நகரில் உள்ளது. இந்தக் கோயிலின் அமைப்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அமைப்பைப் போன்று உள்ளது.
பாண்டிய மன்னர்கள் மதுரை மீனாட்சிக் கோயிலைப் போன்ற வடிவமைப்பைக் கொண்ட சிறு கோயில்களை மதுரையின் நான்கு புறமும் 25 கி.மீ. தூரத்தில் கட்டியிருக்கிறார்கள். மதுரைக்கு மேற்கே ஆனையூரிலும், தெற்கே திருமங்கலத்திலும், கிழக்கே திருப்புவனம் கொந்தகையிலும் இதே போன்ற மீனாட்சிக் கோயில்கள் உள்ளன. குலசேகரன் கோட்டை மீனாட்சிக் கோயிலுக்கும் பாண்டியர்களின் படை வீரர்கள் தங்கியிருந்த பாடி வீட்டிற்கு வாயில் கிராமமாக இருந்த ஊர் வாடிப்பட்டி ஆனதாக வரலாறு சொல்கிறது.
இப்படி வரலாற்றுப் பின்னணி கொண்ட வாடிப்பட்டிக்கு புதிய வரலாறு எழுதிக்கொண்டிருக்கிறார்கள் கிறிஸ்தவ பாதிரிகள். வாடிப்பட்டயில் பொன்பெருமாள் மலை என்ற மலை இருக்கிறது. இந்த மலையைச் சுற்றி மிகவும் தொன்மையான பிரசித்திப் பெற்ற செல்லாயி அம்மன் கோயிலும் ,பால தண்டாயுதபாணி கோயிலும் உள்ளன. இந்த பொன்பெருமாள் மலைக்கு அருகில் ஒரு பாறைமீது 6 ஆண்டுகளுக்கு முன்பு சிலுவை நட்டார்கள். வழக்கம் போலவே ஹிந்துக்கள் பெருந்தன்மையாக இருந்து விட்டார்கள். சில மாதங்களில் அந்தச் சிலுவையை மேரி மாதா என்றார்கள். அதற்கு பிறகும் ஹிந்துக்களின் பெருந்தன்மை தொடரவே அந்த இடத்தில் ஒரு சர்ச் கட்டினார்கள். அந்த சர்ச்சை மெயின்ரோட்டில் இருந்து கிழக்கு நோக்கி பழமையான பொன் பெருமாள் மலை வரை விரிவுபடுத்தி கட்டினார்கள்.
பிறகு அங்கு ஒரு நீரூற்று வருவதாகவும், அது எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை என்றும், அந்த நீரைப் பருகினால் பலவிதமான நோய்கள் குணமாகும் என்றும் திட்டமிட்ட செய்திகளைப் பரப்பினார்கள். இந்த நீரூற்று வாடிகனுக்கு இணையானது என்றும் பிரச்சாரம் செய்தார்கள். மதுரை மட்டுமல்லாது மற்ற மாவட்டத்து மக்களும் இங்கு வரத் தொடங்கினார்கள். ஆண்டுக்கு ஒருமுறை பால தண்டாயுதபாணி கோயிலில் பூப்பல்லக்கு நடக்கும். இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இந்த பூப்பல்லக்கு நடக்கும் இடத்திற்கு நேர் எதிரேதான் கிறிஸ்தவர்கள் சர்ச் கட்டியுள்ளனர்.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியாக மனிதனையும் கடித்து விட்டார்கள். ஆம்! வாடிப்பட்டி என்ற பெயரை வாடிமா நகர் என்று மாற்றி விட்டார்கள். இப்போது அவர்கள் பிரம்மாண்டமாக கட்டியுள்ள சர்ச் பெயர்ப் பலகையில் வாடிப்பட்டி என்பதற்கு பதிலாக, வாடிமாநகர் என்று எழுதியுள்ளனர். வாடிப்பட்டியில் உள்ள உணவு விடுதிகளின் பெயர்ப் பலகையிலும் வாடிமாநகர் என்ற பெயரே பல வண்ணங்களில் மின்னுகிறது. இதுவரை ஹிந்துக்களை மதம் மாற்றி வந்தவர்கள், இப்போது ஊரின் பெயரையே மாற்றி வருகிறார்கள்.
பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வாடிமாநகர் என்று எப்படி பெயர் மாற்ற முடியும்? பெயரை மாற்றிய சர்ச் நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளது. ஆனாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிரிகளின் இந்த அராஜகத்திற்கு அரசு துணை போகிறதா?
(குறிப்பு : வாடிப்பட்டி சர்ச் வளாகத்தில் பல இடங்களில் போர்வெல் போடப்பட்டுள்ளது. அதோடு இங்கு ஒரு மினரல் வாட்டர் ப்ளாண்டும் உள்ளது. இந்த ப்ளாண்ட் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர்தான் புனிதத் தீர்த்தமாக பாட்டில் பத்து ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சர்ச்சில் வழங்கப்படும் புனித தீர்த்தத்தின் ரகசியம் இதுதான். வேளாங்கண்ணியிலும் இதே கதைதான்.)

3 comments:

Anonymous said...

Please send it to Thinnai.

Please. Please. Please.

ஜடாயு said...

என்ன அக்கிரமம் இது! வாடிமா நகரிலி இருந்து வாடிகன் மாநகர் என்று இவர்கள் பெயர் மாற்றம் செய்யப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

மதுரை இந்துக்கள் விழித்துக் கொண்டு இந்த மலைமுழுங்கிகளின் மோசடியை முறியடிக்க வேண்டும்.

Unknown said...

An excaellent website. Incidentally are u from Puducherry? I am in Puducherry and would love to read more about Puducherry. SR