September 06, 2007

ராமேஸ்வரத்தை கலக்கிய சாத்வி ரிதம்பரா தேவி

ஒரு எழுத்துகூட ஹிந்தி தெரியாத ஒருவரால் ஒரு மணி நேரம் ஹிந்தி உரையை ரசித்து கேட்க முடியுமா? அப்படி கேட்க முடிந்தால் அது ஒரு அதிசய நிகழ்வுதான். 26-8-2006 அன்று ராமேஸ்வரத்தில் நடந்த ராமர் பாலம் பாதுகாப்பு மாநாட்டில் இந்த அதிசயம் நிகழ்ந்தது. இந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் புகழ்பெற்ற பெண் துறவி சாத்வி ரிதம்பரா தேவி. சாத்வி ரிதம்பரா தேவியின் பேச்சைக் கேட்டு மகுடியின் இசைக்கு மயங்கிய பாம்புபோல ஆயிரக்கணக்கானோர் கட்டுண்டு கிடந்தார்கள்.அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்கம் மக்கள் இயக்கமாக மாற சாத்வி ரிதம்பராவின் வீர உரைகள் முக்கிய காரணம் என்பது வடக்கே உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கும். நான் இப்போதுதான் முதல் முறையாக சாத்வியின் பேச்சை கேட்கிறேன். அவர் பேச்சை எங்கும் நிறுத்துவதில்லை. இடைவிடாது அருவிபோல பொழிகிறார்.

இப்போது பலரிடம் டிஜிட்டல் கேமரா இருப்பதால் அவர் பேசும்போது பலர் போட்டோ எடுக்க குவிந்து விட்டதால், அவர்களை கூட்ட அமைப்பாளர்கள் வெளியேற்ற வேண்டியதாயிற்று. சாத்வி ரிதம்பரா பேசும்போது நான் எடுத்த சில படங்களை பாருங்களேன். அவரது முக பாவனை ஒரு இசை கச்சேரி நிகழ்த்துபவரைப்போல இருக்கிறது. சாத்வி ரிதம்பரா தேவி சுமார் 5 மணி நேரம் தான் ராமேஸ்வரத்தில் இருந்தார். ஆனால் அன்று ராமேஸ்வரத்தில் அவரை பற்றிதான் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.அதே நாளில் விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் பிரவின்பாய் தொகாடியாவுடன் சாத்வி ரிதம்பரா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட சில படங்களையும் இங்கே பதிந்துள்ளேன். இங்கே அவர் பேசவில்லை. பேசியிருந்தால் பத்திரிகையாளர்கள் சாத்வியின் பேச்சில் மயங்கி செய்தி சேகரிக்க மறந்துபோய் இருப்பார்கள். இனி சாத்வியின் புகைப்படங்கள்... உங்கள் தரிசனத்திற்கு....



























1 comment:

Anonymous said...

Sir

Thanks for this news update.

Can we have a recording of her speech, please?

Thanks

Jay