September 05, 2007

கொலைகாரனாக மாற்றிய மதமாற்றம்

குமார் பாண்டியனை கொலை செய்த முஸ்லிம் பயங்கரவாதிகளில் ஒருவன் அப்துல்லா. இவன் ஹிந்துவாக இருந்து முஸ்லிமாக மாற்றப்பட்டவன். தென்காசியிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள நெடுவயல் அச்சன் புதூரில் வசிக்கும் கருப்பையா பிள்ளை மாரியம்மாளின் நான்கு மகன்களின் ஒருவரான முருகேசன் தான் அப்துல்லாகவாக மாற்றப்பட்டுள்ளான்.


கருப்பையா பிள்ளையின் மளிகை கடை


அச்சன்புதூரில் முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். இங்கு மிகப்பெரிய மசூதி உள்ளது. முதல்முறையாக இப்போது மீ.அயூப் என்ற முஸ்லிம் பேரூராட்சித் தலைவராக உள்ளார். நாங்கள் கருப்பையா பிள்ளையை அச்சன்புதூரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். அவர் ஒரு சிறு மளிகை கடை நடத்தி வருகிறார். சாதாரண குடும்பம். நாங்கள் சென்றபோது அவரின் மகளும் வீட்டில் இருந்தார். மகளுக்கு திருமணமாகி விட்டது. முருகேசன் நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் முஸ்லிமாக மாற்றப்பட்டுள்ளான்.
"என் மகன் முஸ்லிமாக மாறிவிட்டான் என்பதை கேள்விப்பட்ட உடன் குற்றாலத்திற்குச் சென்று மொட்டை அடித்து இறந்தவர்களுக்கு செய்யும் காரியங்களை செய்து விட்டேன். இப்போது யார் கேட்டாலும் என் மகன் முருகேசன் இறந்து விட்டதாகவே கூறி வருகிறேன். என் மகன் மதம் மாறியதை கேட்டதும் நல்ல உடல் நிலையுடன் இருந்த என் மனைவி மாரியம்மாள் உடல் நலம் பதிக்கப்பட்டு திடீரென இறந்து விட்டாள்" மிகவும் வேதனையுடன் எங்களிடம் கூறினார் கருப்பையா பிள்ளை.

நெடுவயல் அச்சன்புதூரில் உள்ள மசூதி


கருப்பையா பிள்ளையின் மகள் எங்களிடம் "என் அண்ணன் நல்லாதான் இருந்தார். முஸ்லிம்களுடன் சேர ஆரம்பித்த பிறகு அண்ணனின் போக்கே மாறிவிட்டது. முஸ்லிம்கள் அவனை மதம் மாற்றி கொலை வெறியனாக மாற்றி விட்டார்கள்" என்று அழுது கொண்டே கூறினார். முஸ்லிம்களுடன் ஏற்பட்ட நட்பே என் மகனை இந்த நிலைக்கு ஆளாக்கி உள்ளது என்கிறார் கருப்பையா பிள்ளை. கருப்பையா பிள்ளை இல்லத்து பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர். கருப்பையா பிள்ளையின் உடல் நிலை இப்போது மிகவும் மோசமாக உள்ளது. எழுந்து நிற்கவே கஷ்டப்படுகிறார்.

கருப்பையா பிள்ளையின் வீடு அமைந்துள்ள இல்லத்தார் தெரு

மதமாற்றம் ஒரு குடும்பத்தையும், சமுதாயத்தையும் என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள். மதமாற்றத்தினால் ஏற்படும் கோரவிளைவுகளுக்கு இந்த குடும்பம் ஓர் உதாரணம். கருப்பையா பிள்ளை தன்னை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் எடுக்கவில்லை. ஆனாலும் அந்த ஊரில் சில படங்களை எடுத்தோம். அதனைப் பாருங்கள். மதமாறினால் என்ன ஆகிவிடும் என்று கேட்கும் அறிவு ஜீவிகளுக்கு இந்த சம்பவம் ஓர் பாடம்.

No comments: