September 05, 2007

முஸ்லிம் பயங்கரவாதிகளின் பிடியில் தென்காசி நகரம்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம். தென்காசி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து தென்காசி ரெண்டு என்று டிக்கெட் கேட்டால் கண்டக்டர் ஏற இறங்க பார்க்கிறார். பேருந்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருக்கிறது. ஆனாலும் பேருந்தில் ஒரு மயான அமைதி. பேருந்து வேகமெடுத்துச் செல்கிறது. இருபுறமும் செழிப்பான வயல்வெளிகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. ஆனாலும் எல்லோருடைய கண்களிலும் ஒருவித மிரட்சி தெரிகிறது. பொதிகை மலையின் சாரல் காற்று பேருந்தின் ஜன்னல் வழியே இதமாய் நம்மை தடவிச் செல்கிறது. ஆனாலும் மனதிற்குள் ஒரு இறுக்கம்.


காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பள்ளிவாசல்

காசி விஸ்வநாதர் அம்பாள் சன்னதிக்கு மிக அருகில் பள்ளிவாசல் இருப்பதை காட்டும் படம்


ஆகஸ்டு 14ஆம் தேதி தென்காசியில் ஒரே குடும்பத்தில் மூவர் கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவத்திலிருந்து 15 நாட்களுக்கும் பிறகும் அப்பகுதி மக்கள் மீளவில்லை என்பதைத் திருநெல்வேலியிலிருந்து கிளம்பும் தென்காசி பேருந்திலேயே பார்க்க முடிகிறது. தென்காசி வாய்க்கால் பாலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்று முன்னோக்கி நடைபோட்டால் பழமையான குலசேகரநாதர் கோயில் வருகிறது. அங்கிருந்து நாம் தென்காசி நகருக்குள் நடைபோட்டோம்.

தென்காசி நகரில் எங்கும் போலீஸ் பாதுகாப்பு

குமார் பாண்டியன் சகோதரர்கள் கொல்லப்பட்ட கூலக்கடை பஜார் சந்திப்பு


தென்காசி சுமார் 75,000 மக்கள்தொகை கொண்ட சிறு நகராக இருந்தாலும் சுற்றுப்புறத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்காக இங்கு வருவார்கள் என்பதால் நகரம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஆனால் இப்போது ஏதோ கிராமம்போல ஓரிருவர் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கடைகள் திறந்திருந்தாலும் வியாபாரம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது. நகரில் எங்கும் ஹாஜி முஸ்தபா என்ற ஜவுளிக்கடை மற்றும் நகை கடையின் விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன. போக்குவரத்து காவல் துறையின் டவர்களிலும், காவல் துறை வெளியிட்டுள்ள விளம்பர போஸ்டர்களிலும்கூட ஹாஜி முஸ்தபா விளம்பரம்தான் பிரதானமாக தெரிகிறது. இந்த ஹாஜி முஸ்தபாவின் உரிமையாளர் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும் பண உதவி செய்வதாக தென்காசி ஹிந்துக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் காவல்துறை அவர்களோடு நெருக்கமாக இருக்கிறது. ஹாஜி முஸ்தபா ஜவுளி ஸ்டோருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்யும் ஹாஜி முஸ்தபா ஜவுளிக் கடை


வி.டி.எஸ் ரகுமான் பாட்சாவுக்கு சொந்தமான இடத்தில் ஆர்.டி.ஓ அலுவலகம்


தென்காசி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 8 வார்டுகளில் முழுக்க முழுக்க முஸ்லிம்கள்தான் வசிக்கிறார்கள். மற்ற வார்டுகளிலும் முஸ்லிம்கள் பரவலாக வசிக்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 20 சதவீதம்தான் இருப்பார்கள். ஆனால் 80 சதவீத வியாபாரம் முஸ்லிம்களின் பிடியில் இருக்கிறது. மளிகை, ஜவுளி, மருந்து கடைகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஹோட்டல்கள், காய்கறி கடைகள் என அனைத்திலும் முஸ்லிம்களின் ஆதிக்கம். ஹிந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் கூலி வேலை செய்தும், பீடி சுற்றியும் பிழைப்பு நடத்துகிறார்கள். தென்காசி நகரில் பல இடங்களில் பெண்கள் பீடி சுற்றும் காட்சியைக் காண முடிகிறது. விவசாயம் செய்யும் ஹிந்துக்களின் எண்ணிக்கை சொற்பம்தான்.

தென்காசி நகரில் ஒரு முஸ்லிம் தெரு


நகரில் 15,000லிருந்து 20,000 வரைதான் முஸ்லிம்கள் இருப்பார்கள். ஆனால் அரபி பாடசாலை, மதரஸா, பள்ளிவாசல், மசூதி, தர்கா என 50க்கும் அதிகமாக இருக்கிறது. நகரில் எங்கு திரும்பினாலும் அங்கு ஒரு மதரஸாவையோ, மசூதியையோ அல்லது அரபி பாடசாலையையோ பார்க்கலாம். தென்காசி நகரின் அமைப்பே அது ஒரு பழமையான நகரம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆகஸ்டு 14 படுகொலைகள் நடந்து 15 நாட்களுக்கு பிறகும் நகரில் அனைத்து தெருக்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக உள்ளது.
குமார் பாண்டியன் மற்றும் அவரது சகோதர்கள் கொலைக்குக் காரணமானவர்கள் என ஹிந்துக்களால் குற்றம்சாட்டப்படும் பிரபல முஸ்லிம் தொழிலதிபர் வி.டி.எஸ்.ரகுமான் பாட்சாவின் வீட்டிற்கும் கடைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆகஸ்டு 14 படுகொலை வழக்கில் இவர் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். வி.டி.எஸ் ரகுமான் பாட்சா தலைமறைவாகி விட்டார். அவரை தேடிக் கொண்டிருக்கிறோம் என போலீஸ் கூறுகிறது. ஆனால் அவர் தினமும் வாக்கிங் செல்வதாக உளவுத் துறையினரும், ஆட்டோ டிரைவர்கள் சிலரும் எங்களிடம் கூறினார்கள்.

பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில்


முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்ட முயற்சிக்கும் இடத்தை பார்த்தோம். காசி விஸ்வநாதர் கோயில் அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரே உள்ள தெருவில் கோயிலில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் அந்த இடம் உள்ளது. அந்த சர்ச்சைக்குரிய இடத்தையொட்டி ஆனந்த பவன் என்ற ஹோட்டல் உள்ளது. பெயர்தான் ஆனந்த பவன். ஆனால் நடத்துவது முஸ்லிம். இந்த தெருவில் உள்ள சிலரிடம் விசாரித்தோம். இந்த இடத்தில் கார்த்திகை தீபத்தின்போது சொக்கப்பனை கொளுத்துவார்கள். முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்ட முயற்சிக்கும் இடத்தில் முன்பு அரசு ஆரம்ப பள்ளி இருந்தது. பிறகு ஐஸ் பேக்டரி இருந்தது. பிறகு கழிவறை இருந்தது என்று எல்லோரும் சொல்கிறார்கள். முஸ்லிம்களிடம் பணபலம் இருக்கிறது. அரசியல் செல்வாக்கு இருக்கிறது. அதனால் அவர்கள் ஆட்டம் போடுகிறார்கள் என்கிறார்கள் தென்காசி மக்கள்.


குமார் பாண்டியன் வீடு அமைந்துள்ள தென்காசி மலையான் தெரு


தென்காசியில் மன்னர் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரே உள்ள கோயில் சன்னதி தெரு முழுக்க முஸ்லிம்களின் கடைகள்தான் உள்ளன. கோயில் எதிரே உள்ள அனுப்பு மண்டபத்தை ஆக்கிரமிக்க முஸ்லிம்கள் பலமுறை முயற்சித்துள்ளனர். இப்போதும் முயற்சித்து வருகின்றனர் என்று சில பெரியவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.
இந்த ஊரில் முஸ்லிம்கள் வைத்ததுதான் சட்டம் என்று சொன்ன ஆட்டோ டிரைவர்களிடம் எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள் என்றோம். வி.டி.எஸ் ரகுமான் பாட்சா முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவரது இடத்தில்தான் ஆர்.டி.ஓ அலுவலகம் உள்ளது. மாலை நேரம் ஆனால் த.மு.மு.க, தவ்ஹித் ஜமாத், நஜ்ஜாத், மனித நீதிப் பாசறை போன்ற பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களும், முஸ்லிம் ஆட்டோ டிரைவர்களும் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கூடி விடுகிறார்கள். அங்குதான் பல சதி திட்டங்கள் தீட்டப்படுகின்றன" என்றார்கள்.
த.மு.மு.க, தவ்ஹித் ஜமாத், நஜ்ஜாத், மனித நீதிப் பாசறை போன்ற பயங்கரவாத அமைப்புகள் தனியாக ஆட்டோ ஸ்டாண்டுகள் வைத்திருக்கிறார்கள். இங்கு ஹிந்துக்கள் ஆட்டோக்களை நிறுத்த முடியாது. ஆனால் ஹிந்துகளின் ஆட்டோ ஸ்டாண்டுகளில் முஸ்லிம்கள் ஆட்டோக்களை நிறுத்துகிறார்கள். தென்காசியில் முஸ்லிம்கள் யாரும் ஹிந்துக்களின் ஆட்டோக்களில் பயணம் செய்வதில்லை. முஸ்லிம் ஆட்டோக்களைப் பார்த்துதான் ஏறுகிறார்கள். ஹிந்துக்கள் எந்த வேறுபாடும் பார்க்காமல் முஸ்லிம்களின் ஆட்டோக்களிலும் பயணம் செய்கிறார்கள்.
த.மு.மு.க தென்காசியில் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நட்ததுகிறது. இந்த ஆம்புலன்ஸில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தென்காசியில் சாதாரண மக்கள்கூட கூறுகிறார்கள். ஆனால் ஆகஸ்டு 14 படுகொலை நடந்த அன்றுகூட த.மு.மு.கவின் ஆம்புலன்ஸை போலீசார் செயல்பட அனுமதித்துள்ளனர். தென்காசிக்கு எந்த போலீஸ் அதிகாரி வந்தாலும் அவரை முஸ்லிம்கள் விலைக்கு வாங்கி விடுகிறார்கள். அதனால்தான் இந்த நிலை என்பது பீடி சுற்றும் சாதாரண பெண்ணுக்குக்கூட தெரிந்திருக்கிறது. முஸ்லிம்களால் வெட்டப்பட்ட குமார் பாண்டியனின் சகோதரர் செந்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது த.மு.மு.க ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி உள்ளனர். பின் அவர் செந்தில் என தெரிந்ததும் வெளியே இழுத்துக் கீழே வீசிவிட்டுச் சென்று விட்டனர். இதனைப் பொதுமக்களில் பலர் பார்த்துள்ளனர்.
ஆகஸ்டு 14 படுகொலைக்குப் பிறகு அமைதிக் கூட்டம் நடந்துள்ளது. கோயில் நிலத்தில் பள்ளிவாசல் கட்டுவதை எதிர்த்ததால் நடந்த கொலைக்கு தீர்வு காணவே கூட்டம் நடக்கிறது. ஆனால் இக்கூட்டம் முடிவுறும்போது ஒரு முஸ்லிம் பெரியவர் எழுந்து "எல்லோரும் இங்கு வந்துள்ளீர்கள். நாம் எல்லோருமாகச் சேர்ந்து அந்த பள்ளிவாசலை கட்டிவிடலாம்" என்று நக்கலாக கூறியுள்ளார். போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர் அப்படி கூறியது ஹிந்துக்களை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. ஆனால் போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.
தென்காசி டி.எஸ்.பி மயில்வாகனன் தென்காசி மற்றும் சுற்றுப்புறங்களில் ஹிந்து திருவிழாக்களில் ஆடல், பாடல், பொம்மலாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளார். ஆனால் முஸ்ஸிம் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தாராளம் காட்டி வருகிறார் என்று தென்காசி மக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள். மொத்தத்தில் காவல் துறையும் அரசும் முஸ்லிம்களுக்கு சாதகமாக இருப்பதால் தென்காசி ஹிந்துக்கள் அனாதைகள்போல தவிக்கிறார்கள். குளு குளு குற்றாலம் அமைந்துள்ள பொதிகை மலையின் சாரல் குற்றாலத்தில் வீசினாலும் முஸ்லிம் பயங்கரவாதிகளின் வெறிச்செயலால் ஹிந்துக்கள் அனலாய் தகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

No comments: