October 06, 2007

போஸ்ட் கார்டு மூலம் மதமாற்றம்!

கிறிஸ்தவர்கள் மதமாற்றுவதற்காக எதையும் செய்ய துணிவார்கள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் அவ்வப்போதுதான் அவர்களின் மதமாற்ற மோசடிகள் பத்திரிகைகளில் அச்சேறி அம்பலமாகிறது. 7-10-2007 தினமலர் நாளிதழில் போஸ்ட் கார்டு மூலம் மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. குறைந்த செலவில் அடித்தட்டு மக்கள் செய்திகளை பரிமாறிக் கொள்வதற்காக அரசு மானியத்தில் போஸ்ட் கார்டுகள் அச்சிடப்படுகின்றன. ஆனால் இவற்றை கிறிஸ்தவர்கள் மதமாற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள். போஸ்ட் கார்டுக்கு அரசு மானியம் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தங்களது மதமாற்ற வியபாரத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம். இந்த தினமலர் செய்தியை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் மீது யாராவது வழக்கு தொடுத்தால் நல்லது.

தினமலர் கட்டுரை : பெரிதாக்கி பார்க்கவும்




No comments: