October 27, 2007

தென்னிந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி : முதலா? கடைசியா?

கர்நாடக அரசியலில் மீண்டும் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் (குமாரசாமி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர்) டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்தித்து பேசியதும் தேவகவுடாவுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது. பிரகாஷ் காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராகிவிட்டால் தான் கர்நாடகத்தில் செல்லாக்காசாகி விடுவோம் என்ற பயத்தில் இப்போது பா.ஜ.கவிடம் அடைக்கலமாகி இருக்கிறார் துரோகத்திற்து பெயர் பெற்ற தேவகவுடா.

பா.ஜ.க ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் கொடுத்து கவர்னர் மாளிகைக்கு வெளியே போஸ் கொடுக்கும் குமாரசாமி



குமாரசாமி ஒப்பந்தப்படி அக்டோபர் 3-ம் தேதி பா.ஜ.கவிடம் ஆட்சியை ஓப்படைத்திருக்க வேண்டும். ஆனால் எப்படியாவது காங்கிரஸ் தயவில் ஆட்சியைத் தெடரலாம் என்ற நப்பாசையில் ஆட்சியை ஒப்படைக்க மறுத்து விட்டார். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே தேவகவுடாவின் துரோக அரசியலால் பாதிக்கப்பட்ட அனுவபம் இருந்ததால் குமாரசாமிக்கு கைகொடுக்கவில்லை. பா.ஜ.கவிடம் ஆட்சியை ஒப்படைக்காததால் குமாரசாமியின் இமேஜ் சரிந்து துரோகத்திற்கு ஓர் உதாரணமாய் அவர் சரித்திரத்தில் இடம்பெற்றார். இதனால் பா.ஜ.கவின் செல்வாக்கு உயர்ந்தது. கர்நாடக அரசியல் பல ஆண்டுகளாகவே ஜாதி அரசியலாக மாறிப்போனது. லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராவதை தடுத்தவிட்டார் என்பதால் லிங்காயத்து மக்கள் தேவகவுடாவையும். குமாரசாமியையும் துரோகியைப்போல பார்க்க ஆரம்பித்தனர். இதனால் லிங்காயத்து சமூகமே பா.ஜ.க பக்கம் திரும்பியது.

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னரிடம் கோரிக்கை விடுத்து திரும்பும் பா.ஜ.க தலைவர்கள்

தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு பிரதமரிடம் முறையிட்டுவிட்டு திரும்பும் பா.ஜ.க தலைவர்கள்.(31-10-2007)

இப்போது எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது. தன் கட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக தேவகவுடாவும், குமாரசாமியும் நடத்தும் நாடகத்திற்கு பா.ஜ.க உடன்பட்டதன் மூலம் பா.ஜ.க தனக்கிருந்த மரியாதையை இழக்கப்போகிறது. எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்தால் தென்னகத்தில் முதன்முதலாக ஆட்சியை பிடித்த பெருமை பா.ஜ.கவுக்கு கிடைக்கும். தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதல்வர் என்ற பெருமை எடியூரப்பாவுக்கு கிடைக்கும். ஆனால் இந்த முதல் பெருமையே இறுதியான பெருமையாக இருந்து விடக்கூடாதே.


வேறுவழியில்லாமல் போனபிறகு ஆதரவு கொடுக்க முன்வந்த தேவுகவுடா மற்றும் குமாரசாமியின் ஆதரவை பா.ஜ.க ஏற்றிருக்க கூடாது. அப்படி ஏற்க மறுத்திருந்தால் தேர்தல் வந்திருக்கும். தேர்தலில் பா.ஜ.க தனித்து ஆட்சியை பிடித்திருக்கும். ஆனால் முன்பு ஒரு முறை எடியூரப்பா பா.ஜ.கவை உடைத்துக் கொண்டு வெளியேற தயாராக இருந்ததை மறந்துவிட முடியாது. பா.ஜ.க மேலிடம் ஒருவேளை தேவகவுடாவின் ஆதரவை நிராகரித்திருந்தால் எடியூரப்பா தனி ஆவர்த்தனம் பாடியிருந்தாலும் பாடியிருப்பார். தேவகவுடாவின் ஆதரவோடு ஆட்சி அமைவது எடியூரப்பாவுக்கு நல்லது. பா.ஜ.கவுக்கு நல்லதல்ல. இதனால் பா.ஜகவின் எதிர்காலம் நிச்சயம் பாதிக்கப்படும்.

October 26, 2007

தம்மம்பட்டி : தடியடிக்காக நாமக்கல் எஸ்.பி ஜான் நிக்கல்சன் நடத்திய நாடகம்!

தம்மம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் அமானுல்லாகான் என்பவர் ஷ்ரீ வெங்கடேஸ்வரா என்ற பெயரில் அசைவ ஹோட்டல் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து ஒருவரிடம் இருந்து இந்த ஹோட்டலை வாங்கிய அமானுல்லாகான் பெயரை மட்டும் மாற்றவில்லை. அதோடு இந்த ஹோட்டலின் கல்லாபெட்டிக்கு பின்பு திருப்பதி வெங்கடாஜலபதி படமும் உள்ளது. ஆனாலும் இதனை ஊள்ளூர் ஹிந்துக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தம்மம்பட்டியில் விநாயகர் சதுர்த்திக்கு(15-09-2007) இரு வாரங்களுக்கு முன்புதான் `தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்'(த.மு.மு.க) ஆரம்பிக்கப்பட்டது. ஷ்ரீ வெங்கடேஸ்வரா ஹோட்டலின் உரிமையாளர் அமானுல்லாகானின் மகன் சம்சுதீன் தான் தம்மம்பட்டி த.மு.மு.க கிளையின் தலைவர்.


தம்மம்பட்டி கன்னிகாபரமேஸ்வரி வாசவி மஹாலுக்கு எதிரே விநாயகர் சிலையை நாகரஜன் என்பவர் வைத்தபோது மசூதியில் இருந்து மண்வெட்டி வாங்கிதான் சிலை வைக்கும் இடத்தை சீரமைத்திருக்கிறார். அந்த அளவுக்கு இணக்கமாக இருந்த முஸ்லிம்களை தூண்டிவிட்டு பிரச்சினை செய்தவர்களில் சம்சுதீன் முக்கியமானவர். காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் தம்மம்பட்டி ஜாமியா மஸ்ஜித்தின் முன்னாள் முத்தவல்லியுமான கே.ஏ.ஜப்பாரின் மகன் ஜாபர் சாதிக் அலியும், சம்சுதீனும்தான் மசூதி ஒலிபெருக்கியில் இருந்து, "மானமுள்ள முஸ்லிம்களே வீதிக்கு வாருங்கள்..." என்று அழைப்பு விடுத்தவர்கள். ஜாபர் சாதிக் அலி தம்மம்பட்டி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார்.

கன்னிகாபரமேஸ்வரி கோவிலையொட்டி கட்டப்பட்டுள்ள மசூதி( கோயில் 300 ஆண்டுகள் பழமையானது, மசூதி 50 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது)



விநாயகர் சிலையைப் பார்த்தால் வயிறு எரிகிறது

விநாயகர் சிலையை அகற்றக்கோரி முஸ்லிம்கள் சாலை மறியல் செய்ததும் ஹிந்து - முஸ்லிம் இரு தரப்பினருக்கிடையே பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் த.மு.மு.க தலைவர் சம்சுதீனும், தம்மம்பட்டி கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தின் செயலாளர் ஜாபர் சாதிக் அலியும் பங்கேற்றனர். இவ்விருவரும்தான் "நாங்கள் தொழுகை முடித்து வரும்போது விநாயகர் சிலையை பார்த்தால் வயிறு எரிகிறது" என்று கூறியிருக்கிறார்கள். விநாயகர் சிலையை பார்த்தால் வயிறு எரிகிறது என்று கூறுபவர் எதற்காக தனது அசைவ ஹோட்டலுக்கு எதற்காக ஷ்ரீ வெங்கடேஸ்வரா என்று ஹிந்து பெயரை வைக்க வேண்டும்? பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் ஹிந்து கடவுள் வேண்டும். மற்றபடி ஹிந்து கடவுள்களைப் பார்ததால் வயிறு எரிகிறதா? ஷ்ரீ வெங்கடேஸ்வரா என்ற பெயரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று ஹிந்துக்கள் அவர்களிடம் கொதிப்புடன் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 16-09-2007 அன்று நடந்த 36 ஜாதி சங்கங்களின் பிரதிநிதிகள் பங்றே்ற கூட்டத்திலும் ஷ்ரீ வெங்கடேஸ்வரா என்ற பெயரை மாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னிகாபரமேஸ்வரி கோவிலும், மசூதியும் அமைந்துள்ள வண்ணாரத் தெரு. (நீண்ட மசூதியின் மேற்கு முனையில் இருந்து எடுக்கப்பட்ட படம். இந்த முனையில்தான் ஓராண்டுக்கு முன்பு மசூதியின் வாயில் இருந்தது)


17-09-2007 அன்று உண்ணாவிரதம் ஹிந்து இளைஞர்களிடம் தம்மம்பட்டி சப் - இன்ஸ்பெக்டர் பழனிவேல் "இதுதான் சரியான சந்தர்ப்பம். ஷ்ரீ வெங்கடேஸ்வரா ஹோட்டல் பெயர்பலகையை அகற்றி விடுங்கள்" என்று உசுப்பி விட்டிருக்கிறார். சப் - இன்ஸ்பெக்டர் இப்படி சொன்னதும் அதன் உள்நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் கூட்டமாக ஷ்ரீ வெங்கடேஸ்வரா ஹோட்டலை நோக்கி ஓடியிருக்கிறார்கள். இதனால் கூட்டத்தில்
திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே இதற்காவே காத்திருந்த கிறிஸ்தவரான நாமக்கல் எஸ்.பி ஜான் நிக்கல்சன் தடியடி நடத்த உத்திரவிட்டார். உடனே போலீசார் வெறிபிடித்தவர்களைப்போல ஹிந்துக்களை அடித்து நொருக்கினார்கள். இதில் கர்ப்பிணி பெண்கள் உட்பட பல பெண்கள் பலத்த காயமடைந்தனர்.

போலீசாரால் தாக்கப்பட்டு காயமடைந்த தமிழரசி( சுருட்டு சுற்றி பிழைக்கும் இவருக்கு வயதுக்கு வந்த பெண் உட்பட 3 குழந்தைகள் உள்ளனர்)


தம்மம்பட்டியைச்சேர்ந்த ரவி என்பவரின் மனைவி தமிழரசியை போலீசார் அடித்து நொருக்கியதில் அவருக்கு முதுகு மற்றும் விலா பகுதிகளில் பலமான உட்காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்றார். தமிழரசி சுருட்டு சுற்றி பிழைப்பு நடத்தி வருபவர். தமிழரசி மீதும் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் முன் ஜாமீன் பெற்று ஆத்தூரில் தங்கி அங்குள்ள காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்துப்போட்டு வருகிறார். தமிழரசிக்கு வயதுக்கு வந்த ஒரு பெண் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். தமிழரசியின் கணவர் மாலத்தீவில் இருக்கிறார். இதனால் இவரது குழந்தைகள் மூவரும் தாய், தந்தையைப் பார்க்க முடியாமல் தனியாய் தவித்து வருகின்றனர். ஹிந்துக்கள் மீது தடியடி நடத்த வேண்டும் என்பதற்காக நாமக்கல் எஸ்.பி ஜான் நிக்கல்சன் சப் - இன்ஸ்பெக்டர் பழனிவேல் மூலம் நடத்திய நாடகம் தான் இது. ஜான் நிக்கல்சனின் ஆலோசணையின்படிதான் எஸ்.ஐ பழனிவேல் ஹிந்து இளைஞர்களைத் தூண்டி விட்டார்.

கன்னிகாபரமேஸ்வரி கோயிலுக்கு அருகில் ஓராண்டுக்கு முன்பு மாற்றப்பட்ட மசூதியின் நுழைவு வாயில்.


போலீசார் தடியடி நடத்தி முடிந்ததும் விநாயகர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த தகர தடுப்பை அகற்றச் சென்ற கோட்டாட்சியர் பாஸ்கர பாண்டியன் அங்கு வந்தார். அவரிடம் காரணமில்லாமல் போலீசார் தடியடி நடத்தி கர்ப்பிணி பெண்களை தாக்கியது பற்றி புகார் தெரிவித்தனர். இந்த தடியடிக்கு காரணமானவர்கள் மீது புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்தார். இதனால் நம்பிக்கையோடு ஹிந்துக்கள் புகார் மனு எழுதி கொடுத்தனர். ஆனால் அதன்பிறகு போலீசாரின் நடவடிக்கை மோசமாக அமைந்தது. தாங்கள் காரணமில்லாமல் நடத்திய தடியடிக்கு காரணம்தேடி அலைந்தார்கள். தம்மம்பட்டியில் கண்ணுக்கு தென்பட்டவர்களை எல்லாம் கைது செய்தார்கள். சேலத்தில் இருந்த பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷை பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என அழைத்து நள்ளிரவில் சட்டப்பிரிவின் 307( கொலை முயற்சி) கீழ் கைது செய்தனர். 500க்கும் அதிகமானோர் மீது 307 பிரிவின் கீழ் வழக்குத் தொடுத்தனர்.

October 25, 2007

முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ரசித்த குத்தாட்டம் : சில காட்சிகள்


முன்பெல்லாம் அரசு விழாக்ககள் தூங்கி வழியும். அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் பேசுவார்கள். வேறு வழியின்று இருந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பவர்கள் மட்டுமே அரங்கில் இருப்பார்கள். இதையெல்லாம் சினிமாவுக்கு வசனம் எழுதிய முதல்வர் கருணாநிதி புரிந்து கொண்டார்போலும். இப்போதெல்லாம் அரசு விழாக்களில் நடிகைகளின் குத்தாட்டத்தைப் பார்க்க முடிகிறது. 84 வயது முதல்வரும் இதையெல்லாம் ரசிப்பதால் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரே கொண்டாட்டம். அதிகாரப்பூர்வமாகவே குத்தாட்டத்தை ரசிக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா விருது வழங்கும் விழாவில் முதல்வரும் கவர்னரும் ரசித்த சில குத்தாட்டக் காட்சிகளை இங்கே நீங்கள் பார்க்கலாம்.

இதே குத்தாட்ட காட்சிகளை ஹோட்டலிலோ அல்லது தனி இடத்திலோ நடத்தினால் போலீசார் அவர்களை கைது செய்கிறார்கள். ஆபாச நடன அழகிகள் கைது! என்று மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வருகிறது. ஆனால் பகிரங்கமாக சில ஆயிரம் பேர் கூடியிருக்கும் அரங்கில் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் என அதிகார வர்க்கம் முழுவதும் பார்க்க நடந்தால் அது குற்றமில்லையா? இதையெல்லாம் கலைஞரிடம் கேட்டால் சூத்திரன் நடனம் பார்க்க கூடாதா? அதற்கு தானே பெரியாரும் அண்ணாவும் எங்களுக்கு பகுத்தறிவை ஊட்டினார்கள் என்பார்.
நமக்கெதற்கு இதெல்லாம்....
முதல்வரோடு குத்தாட்டத்தை ரசித்தவர்கள்





October 23, 2007

ஞானிக்கு எதிரான கண்டனக் கூட்டம்

நேற்று மாலை(20-10-2007) நான் வாணி மஹாலில் பத்திரிகையாளர் ஞாநி எழுதிய `விருப்பப்படி இருக்க விடுங்கள்' என்ற கட்டுரைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த கண்டனக் கூட்டத்தில் பங்கேற்றேன் . ஆனந்த விகடனில் ஞாநி எழுதிய இந்தக் கட்டுரை பற்றி
ஏற்கனவே மிகப்பெரிய விவாதமே நடந்து முடிந்து விட்டது. அந்த விவாதத்தை படித்த ஆர்வமே என்னவோ எனக்கு அந்த நிகழச்சிக்கு செல்லும் ஆர்வம் ஏற்பட்டது. அழைப்பிதழில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று இருந்ததால் நான் மாலை 5.45 மணிக்கு வாணி மஹாலுக்கு சென்று விட்டேன். ஆனால் கூட்டம் திராவிடக் கலாச்சாரத்தை காப்பாற்றும் பொருட்டு தாமதமாக மாலை 6.40க்கு தான் துவங்கியது.


மேடையில்பேச வந்திருந்த பிரபலங்களைவிட பார்வையாளர்களில் வரிசையில் அமர்ந்திருந்த பிரபலங்களின் எண்ணிக்கை அதிகம். இந்தக் கூட்டம் ` தீம்புனல்' என்ற எழுத்தாளர்கள் அமைப்பின் சார்பில் நடப்பதாக அழைப்பிதழில் இருந்தது. மேடையின் பின்னே வைக்கப்பட்டிருந்த திரையிலும் தீம்புனல் என்ற பெயர் இருந்தது.( கம்யூனிஸ்டுகள் எத்தனை அமைப்புகள் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை). வாணி மஹாலின் முகப்பில் கம்யூனிஸ்டுகள் கடை பரப்பி இருந்தார்கள். தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தங்கச்சி கவிஞர் தமிழச்சி, இரண்டாம் ஜாமங்களின் நாயகி கவிஞர் சல்மா , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ ரவிக்குமார், பேராசிரியர் வீ.அரசு , பத்திரிகையாளர், ஏ.எஸ் . பன்னீர்செ்லவம், கவிஞர் கரிகாலன், எழுத்தாளர் இமயம், கவிஞர் அறிவுமதி, ஏ.எஸ்.எஸ் மணி இவர்களைத் தவிர வழக்கம்போல மார்க்ஸ், மகேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

மேடைக்குகீழே கலைஞரின் செல்ல மகள் கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு , டாக்டர் பூங்கோதை, திரைப்பட இயக்குனர் சீமான், நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ், கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி , மாஃபா பாண்டியராஜனின் மனைவி லதா ராஜன், தொலைக்காட்சிகளில் அடிக்கடி முகம் காட்டும் பர்வீன் சுல்தானா, சென்னை தூர்தர்ஷனின் செய்தி ஆசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன்... என பல பிரபலங்கள் அமர்ந்திருந்தனர்.

மாஃபாபாண்டியராஜனின் மனைவி லதா பாண்டியராஜனும் கனிமொழியும் காட்டிய நெருக்கத்தை பத்திரிகை புகைப்படக்காரர்கள் சுட்டுத் தள்ளினார்கள். கேமரா கண்கள் பட்டதும் அவர்களின் கொஞ்சல் அதிகமாகிப்போனது. அமைச்சர் டாக்டர் பூங்கோதையும் அந்த கொஞ்சலில் இணைந்து கொண்டார்.

நான்கவிஞர் சல்மா பேசிக் கொண்டிருக்கும்போதே நான் எழுந்து வந்து விட்டேன். அதன் பிறகு ஏ.எஸ் .பன்னீர்செல்வம், மகேந்திரன் பேசியிருப்பார்கள் . தான் கவிஞர் என்பதை நினைவு படுத்துவதற்காகவோ என்னவோ தமிழச்சி நன்னூலில் இருந்து சில வரிகளைப் படித்தார். அவ்வப்போது சில ஆங்கில வரிகளையும் உச்சரித்தார்( அப்போதுதான் அறிவு ஜீவி என்று ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்தாரோ என்னவோ)
விடுதலை சிறுத்தைகளின் தமிழ் மண் பத்திரிகையில் `பார்ப்பன வாத்தியார்கள்' என்ற கட்டுரை எழுதிய கவிஞர் அறிவுமதி பேச்சை நிறுத்துங்கள் என்ற துண்டு சீட்டு கொடுத்தும் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். அவரது பார்ப்பன வாத்தியார்கள் கட்டுரை நம் சிந்தனை குழுமத்திலும் விவாதிக்கப்பட்டது நினைவிருக்கும். தனது இந்த கட்டுரை இணையத்தில் பெரிய தாக்கத்தை எற்படுத்தி இருப்பதாக அறிவுமதி பெருமிதப்பட்டுக்கொண்டார். அந்தக் கட்டுரைக்கு வந்த ஆதரவான பதில்களை எல்லாம் அவர் ஒரு புக்லெட்டாக தயாரித்து எடுத்து வந்திருந்தது ஒரு சுவாரஷ்யம். இனி எங்களுக்கு கவலை இல்லை. பெரியாரின் பிள்ளைகள் இணையத்திலும் போர் தொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஞாநி போன்ற பாப்பான்களுக்கு சவால் விட ஆரம்பித்து விட்டார்கள். அறிவை அறிவால் வெல்ல ஆரம்பித்து விட்டார்கள் என்று பேசிக் கொண்டே இருந்தார்.

பெரியார்பிராமணர்களை எதிர்த்ததால் அவர்கள் மயிலாப்பூர், மாம்பலம் என்று குடியேறி விட்டார்கள். இன்று பிராமணர்கள் நகரங்களில் வசதியான வாழ்க்கை வாழ்வதற்கு பெரியார்தான் காரணம் என்று ஒரு அரிய கண்டுபிடிப்பையு்ம அவர் வெளியிட்டார்.
மார்க்ஸ்பேசும்போது பெரியார் பெண் பித்தர் என்று காலச்சுவடு பத்திரிகையில் கட்டுரை எழுதினார்கள் என்று மேடையில் இருந்த எம்.எல்.ஏ ரவிக்குமாரை குறிவைத்து பேசினார்.( பெரியார் பெண்களுக்கு எதிரி என்று காலச்சுவட்டிலும், தமிழ் மண்ணிலும் கட்டுரை எழுதியவர் ரவிக்குமார் தான்) காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருப்பவர்களில் மூன்று பேர் இங்கே இருக்கிறார்கள் . அவர்கள் ஏன் இதனை எதிர்க்கவில்லை.( கனிமொழி, சல்மா, ரவிக்குமார் ஆகியோர்தான் அந்த மூவர் ) ஞாநிக்குள் ஒளிந்திருக்கும் சோவை 6 ஆண்டுகளுக்கு முன்பே தான் கண்டுபிடித்து விட்டதாக அவர் அறிவிக்க சிலர் கைதட்டினார்கள்.


ஒருபத்திரிகையாளர் எழுதிய கட்டுரைக்கு மாநிலத்தில் உள்ள பிரபலங்கள் எல்லாம்கூடி ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்துவதுவதைவிட அந்த எழுத்தாளருக்கு பெரிய அங்கீகாரத்தை யாரும் கொடுத்துவிட முடியாது . அந்த வகையில் ஞாநி கொடுத்து வைத்தவர். கூட்டத்தில் பேசியவர்களில் கவிஞர் தமிழச்சி மட்டுமே நரேந்திர மோடியின் பெயரை உச்சரித்தார். இப்போதெல்லாம் மோடியின் பெயரை உச்சரிக்கமால் நம் நாட்டில் எந்தக்க கூட்டமும் நடப்பதில்லை . இங்கு அந்தக் குறையை போக்கிய தமிழச்சிக்கு நாம் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம் . இந்தக் கூட்டத்திற்கு சென்று வந்த பிறகு எனக்கு ஒரு கவலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பேச்சாளர்கள் இல்லாமல் போய்விட்டார்களே என்ற கவலைதான் அது .

ஜெயலலிதா - சு.சுவாமி சந்திப்பு : தமிழக அரசியலில் மாற்றம் வருமா?

சுப்பிரமணியசுவாமி இந்திய அரசியலில் நீண்ட காலமாக ஒரு அதிர்வை ஏற்படுத்தி வருபவர். அவர் சொல்லும் பல விஷயங்கள் நம்ப முடியாதவையாக இருக்கும். கடந்த 2006 மார்ச்சில் ஈரோட்டில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநாடு நடந்தபோது அதற்கு சு.சுவாமி வந்திருந்தார். அவர் தங்கியிருந்த வீட்டில் விஜயபாரதத்திற்காக அவரைச் சந்தித்தேன். அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் ஷ்ரீகுருஜி கோல்வல்கரின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்த மாநாடு நடக்கிறது. உங்களுக்கு ஷ்ரீகுருஜி கோல்வல்கர் பற்றி ஏதாவது தெரியுமா? என்று கேட்டேன். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? நானும் ஷ்ரீகுருஜி கோல்வல்கரும் நெருங்கிய நண்பர்கள். அவர் டில்லி வரும்போதெல்லாம் என்னை அழைப்பார். அவருடன்தான் நான் தேநீர் அருந்துவேன் என்றார். இது நடந்தது எந்த வருடத்தில் என்றேன். 1973 என்றார். ஷ்ரீகுருஜி 1973ல் இறந்தார். ஆனால் அந்த வருடம் அவர் டில்லியில் இருந்த நாட்கள் குறைவுதான். சிகிச்சைக்காக அவர் மும்பை மற்றும் நாக்பூரில்தான் இருந்தார். சு.சுவாமி ஷ்ரீகுருஜியை சந்தித்து இருக்கலாம். ஆனால் ஷ்ரீகுருஜியும் நானும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் இப்படிகூட பேசாவிட்டால் சு.சுவாமிக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமே.


1996ல் தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடித்ததற்கு சு.சுவாமி ஜெயலலிதா மீது தொடர்ந்த வழக்குகள் ஒரு காரணம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அடுத்த ஆண்டே அவர் ஜெயலலிதாவுடன் இணைந்து மதுரையில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அப்போது அவருக்கு ஜெயலலிதா மத்திய அமைச்சர் பதவி கேட்க பா.ஜ.க(வாஜ்பாய்) கொடுக்க மறுக்க... ஜெ. தனது சுயத்தை பா.ஜ.கவுக்கு புரிய வைத்த தருணங்கள அவை. அதன்பிறகு சோனியா, ஜெயலலிதா கலந்து கொண்ட ஒரு டீ பார்ட்டி நடத்தி வாஜ்பாய் ஆட்சியை முடிவுக்கு கொண்டு ஜெயலலிதாவுக்கே ஆப்பு சீவியர் சு.சுவாமி. ஜெ.வும் அதை புரிந்து கொண்டார். அதனால்தான் இதுவரை அவர் சு.சுவாமியை அண்ட விடவில்லை. அதன்பிறகு பா.ஜ.க ஆட்சியில் இருந்தவரை சு.சுவாமி பா.ஜ.க எதிர்ப்பு அணியில்தான் இருந்தார். 2004 தீபாவளி இரவு ஜெ. காஞ்சி சங்கராச்சாயாரை கைது செய்ததும் சு.சுவாமி விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார். அதன்பிறகு வி.ஹி.பரிஷத் மேடைகளில் சு.சுவாமி தவிர்க்க முடியாத ஓர் நபராகிப்போனார்.


வி.ஹி.பரிஷத் ராமர் பாலம் விவகாரத்தை கையெடுத்ததும் சு.சுவாமி அதற்காக சுப்ரீம் கோர்ட்டில் ஓர் வழக்கைத் தொடுத்து தன் பங்கை ஆற்றத் தொடங்கினார். இந்நிலையில் சு.சுவாமி நேற்று(22-10-2007) போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்துள்ளார். அதே நாளில் ஜெ.வைச் சந்தித்த மற்றொரு பிரபலம் வை.கோ. சு.சுவாமி - ஜெ. சந்திப்பு தமிழக அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா? 21-10-2207 தூத்துக்குடியில் ஓரு நிகழ்ச்சியில் பேசிய வருங்கால மத்திய அமைச்சர் கனிமொழி சு.சுவாமி, சோ, ஜெ. ஞாநி ஆகியோர் ஒரு அணியில் திரண்டு விட்டார்கள் என்று பேசியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. மந்திரி பதவி என்ற கற்பக விருட்சத்தை கருணாநிதியாலும், ராமதாசாலும் ஒருபோதும் துறக்க முடியாது. இவர்கள் பதவிக்காக எதையும் துறக்க தயாராக இருப்பதால் சு.சுவாமி - ஜெயலலிதா சந்திப்பு தமிழக அரசியலில் மாற்றம் எதையும் ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன். தமிழக அரசியலில் மாற்றம் வர வேண்டுமானால் இரண்டு விஷயங்களில் ஒன்றாவது நடக்க வேண்டும். ஒன்று மத்திய அரசியலில் மாற்றம் வர வேண்டும். மற்றொன்று உங்களுக்கே தெரியும்.

விருப்ப வழிபாடா? விளம்பர வழிபாடா?

இந்தி நடிகர் சல்மான்கான் விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகரை வழிபட்டபோது எழுந்த சர்ச்சை ஒருவழியாக இப்போதுதான் முடிந்திருக்கிறது. ஆனால் சல்மான்கான் இப்போது மும்பையில் வைக்கப்பட்டிருந்த துர்கா தேவியின் சிலையை வழிபட்டு இருக்கிறார். இது விருப்ப வழிபாடா? அல்லது விளம்பரத்திற்கான வழிபாடு என்பது தெரியவில்லை. இப்போதெல்லாம் பிரபலம் ஆவதற்கு பல வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். அந்த வழிமுறைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சல்மான்கான் ஹிந்து கடவுளை வழிபட்டதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ராமேஸ்வரம் கோவிலுக்குள் ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஹசன் அலி சென்ற போது ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்துக்கள் தவிர வேறு யாரும் இதற்கு மேல் செல்லக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை உதாசினப்படுத்திவிட்டு அவர் சென்றதால் இந்து அமைப்புகள் ஹசன் அலிக்கு கண்டனம் தெரிவித்தன. ஹசன் அலி பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகரை வழிபட்டிருந்தாலும் ஹிந்து அமைப்புகள் வாழ்த்து தெரிவித்திருக்கும். ஹசன் அலிக்கு கண்டனம் எழுந்தபோது அதை கண்டித்தவர்கள் இப்போது சல்மான்கானுக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கும்போது அமைதியாய் இருக்கிறார்கள்.

குமரி மாவட்டம் தக்கலையில் வசிக்கும் எழுத்தாளர் ஹெச்.சி.ரசூல் குரான் பற்றி மனுஷ்யபுத்திரனின் உயிர்மை இதழில் எழுதிய கட்டுரைக்காக ஜமாத்தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டார். ஒரு படைப்பாளிக்கு நேர்ந்த இந்தக் கொடுமை பற்றி பெரிய அளவில் கண்டனம் எழவில்லை. இப்படி முஸ்லிம்கள் எதை செய்தாலும் ஆதரிக்கும் போக்கு இருப்பதால்தான் கோவையில் குண்டு வைத்து நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்தவர்களுக்குகூட விடுதலை கிடைக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இனி என்னவெல்லாம் நடக்குமோ...?

October 22, 2007

நேற்று ஓமலூர் சுகன்யா! இன்று கடலூர் ஆனந்தவள்ளி! நாளை....?

கடந்த 18-11-2006 அன்று சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த சுகன்யா என்ற மாணவி பாதிரிகளால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கிணற்றில் பிணமாக மிதந்தார். இந்தச் சம்பவத்தால் கொதித்துப்போன பொதுமக்கள் பாத்திமா பள்ளியை முற்றுகையிட்டு தாக்கினார்கள். போலீஸ் விசாரணையிலும், பிரேத பரிசோதணையிலும் மாணவி சுகன்யா கற்பழித்துக் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும் சம்பந்தப்பட்ட பாதிரிகள் மீது அந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக பொதுமக்களின் ஆவேசத்தால் சேதமான பள்ளியை சீரமைக்க கருணாநிதி அரசு நிதி உதவி அளித்தது. இப்படி ஒர் இளம் பிஞ்சை கற்பழித்துக் கொன்றவர்களுக்கு கருணை காட்டியதன் விளைவு இன்று கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவு ஆனந்தவள்ளி மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். ஆனந்தவள்ளி கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடி சமுட்டிக்குப்பத்தை சேர்ந்த முந்திரி ஏற்றுமதியாளர் ராதாகிருஷ்ணின் மகள்.

தினந்தந்தி சென்னை பதிப்பில்(23-10-2007) வந்த செய்தி. பெரிதாக்கி படிக்கவும்


தினமலர் புதுச்சேரி பதிப்பில்(23-10-2007) வந்த செய்தி பெரிதாக்கி படிக்கவும்


ஓமலூர் சுகன்யாவைப் போலவே ஆனந்தவள்ளியும் விடுதியில் தங்கி படித்துள்ளார். சுகன்யா கிணற்றில் பிணமாக மிதந்தார். ஆனந்தவள்ளி பள்ளி வகுப்பறையில் தூக்கில் தொங்கினார். இதுபற்றி முழுவிவரங்கள் தெரியவில்லை. முழு விவரங்கள் சேகரித்ததும் இங்கே பதிவிடுகிறேன். இந்த நேரத்தில் சேலம் ஓமலூர் சுகன்யா படுகொலை பற்றி 8-12-2006 விஜயபாரதம் இதழில் நான் எழுதிய கட்டுரையை இங்கே பதிவிட்டுள்ளேன். கிறிஸ்தவ பாதிரிகளால் நம் இந்து மொட்டுகள் கருக்கப்படுவதைப் பாருங்கள்.


தூக்கில் பிணமாத மாணவி ஆனந்தவள்ளி(தினகரன், பாண்டிச்சேரி (23-10-2007))








பள்ளி நிர்வாகத்தை(பாதிரிகளை) கண்டித்து சாலை மறியல் செய்யும் பொதுமக்கள்(தினகரன், பாண்டிச்சேரி(23-10-2007)


மாணவிக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் பள்ளிக்கு பாதுகாப்பு


சக மாணவி கொல்லப்பட்ட அதிர்ச்சியில் பள்ளி வாயில் முன்பு மாணவிகள்


நேற்று ஓமலூர்! இன்று கடலூர் ! நாளை?ஓமலூர் மாணவி சுகன்யா படுகொலை - முழு விவரம்

ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி சுகன்யா பாதிரிகளால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். அதுபற்றி 8-12-2006 அன்று விஜபாரதத்தில் நான் எழுதிய கட்டுரை.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கிறது கிறிஸ்தவப் பாதிரிகள் நடத்தும் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி. கடந்த நவம்பர் 18-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி சுகன்யா இப்பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தாள். இந்தச் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தோளூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள்தான் சுகன்யா. ஓமலூர் பாத்திமா பள்ளி விடுதியில் தங்கி, அங்கு படித்துவந்த சுகன்யாவின் மர்ம மரணம் கிறிஸ்தவப் பாதிரிகளின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டி யிருக்கிறது.

கற்பழித்துக் கொல்லப்பட்ட மாணவி 12-ம் வகுப்பு மாணவி சுகன்யா


பாதிரிகளால் மாணவி சுகன்யா கற்பழித்துக் கொல்லப்பட்டதாக செய்தி பரவியதை அடுத்து, பொதுமக்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதன்பிறகுதான் இந்தக் கொடூரம் வெளியில் வந்திருக்கிறது.

இந்தப் பள்ளியில் மாணவிகள் இறப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த 20 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட மாணவிகள், அதுவும் அழகான மாணவிகள் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள் என்று ஓமலூரில் மக்கள் சாதாரண மாகப் பேசிக்கொள்கிறார்கள். "இந்தப் பள்ளியில் பல மாணவிகள் இறந்ததாகப் பேசிக்கொள்கிறார்கள். நான் கேள்விப்பட்ட வரையில் பல வருடங்களுக்கு முன்னாடி சின்னம்மா..அப்புறம் இந்திரா, காவேரி, இப்ப சுகன்யான்னு நாலு மாணவிகள் மர்மமான முறையில் இறந்திருக்காங்க. இதே ஸ்கூலில் படிக்கும் எம் பொண்ணு, தேவையில்லாத ஆண்கள், ஸ்கூலுக்கு வந்து போறதா சொல்லியிருக்கா. இனி என் மகளை இந்தஸ்கூலுக்கு அனுப்பறதா இல்லை" என்று பத்திரிகையாளர்களிடம் கோபத்துடன் பொங்கி யிருக்கிறார் அபிராமி என்ற பெண்மணி(`நக்கீரன்' 25-11-06).

"15 வருஷத்துக்கு முன்ன எங்க மகள் சின்னம்மா அங்க படிச்சிக்கிட்டு இருந்தா. அவளை ஸ்கூல்ல ஒரு ரூமில் போட்டு அடிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டு ஓடினோம். கடைசியில் ஏரியில் பிணமாதான் கிடைச்சா. போலீஸில் அப்ப புகார் தந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை" என்கிறார் 15 வருடங்களுக்கு முன்பு இதே பள்ளியில் மர்மமான முறையில் இறந்த மாணவி சின்னம்மாவின் தாயார் பழனியம்மாள். இதேபோலவே கடந்த ஜூலை 29ம் தேதி காவேரி என்ற மாணவி தூக்கில் தொங்கினாள். "எந்தப் பிரச்சினையும் இல்லீங்க. திடீர்னு உங்க மகள் செத்துட்டான்னு சொன்னா எப்படி இருக்கும்? என்ன நடந்துச்சுன்னே தெரியலை. எங்க மகளை இழந்துட்டோம்" என கண்ணீருடன் பெருமூச்சு விட்டார் காவேரியின் அம்மா வளர்மதி.
நவம்பர் 16ம் தேதி வரை ஸ்கூலுக்கு வந்த சுகன்யா, அன்று மாலை ஹாஸ்டலுக்கு வரவில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அவள் ஹாஸ்டலுக்கு வரவில்லை என்ற தகவலை தோளூரில் உள்ள சுகன்யாவின் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு என்ன நடந்ததோ? ஸ்கூலுக்குப் பின்புறம் உள்ள கிணற்றில் சுகன்யாவின் உடல் மிதக்கறதா சொல்றாங்க என்கிறார்கள் பாத்திமா பள்ளி மாணவிகள்.

ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிரோத் மற்றும் பீர் பாட்டில்கள்

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்கூலுக்குள் இருக்கும் சர்ச்சில் பிரேயர் நடக்கும். அதில் வெளியிலிருந்து பல பாதிரிகள் வருவார்கள். பாதிரிகளுக்கு சேவை செய்தால் கடவுளின் கிருபை கிடைக்கும் என்று சிஸ்டர்ஸ்(கன்னியாஸ்திரிகள்) சொல்வாங்க. அதனால் அவங்களுக்கு டீ.,காபி டிபனெல்லாம் பரிமாறுவோம் என்கிறார்கள் மாணவிகள் அப்பாவியாக!
நவம்பர் 20ம் தேதி ஓமலூர் தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய 8ம் வகுப்பு மாணவி கிரிஜா, "ஒரு நாள் எங்க வகுப்பறை சுவர் முழுக்க ரத்தக்கறையும் பூவும் இருந்தது. அந்தக் கறையை மாணவிகளான எங்களைக் கழுவி சுத்தம் பண்ண வச்சு, அதுக்கு காசும் கொடுத்தாங்க" என்ற `பகீர்' குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பூட்டினாள்.

நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு பேட்டு அளிக்கும் அபிராமி

இவ்வளவு நடந்த பிறகும், `இது தற்கொலைதான். கொலை அல்ல. பெருச்சாளி எலியை கடித்ததால் ஏற்பட்டது தான் அந்த ரத்தக் கறை' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றுள்ளார் சேலம் மாவட்ட பிஷப் சிங்கராயன். கொலையை மறைக்க பல முயற்சிகளைப் பாதிரிகள் செய்து வருகின்றனர். இதற்காக போலீஸாரின் உதவியுடன் மாணவி சுகன்யாவின் உடலை சட்டத்திற்கு விரோதமாக எரிக்க வைத்துள்ளனர். `பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளியை வளர்க்க எங்கள் பள்ளிமீது அவதூறு பரப்புகிறார்' என ஆசிரியைகள்மூலம் வதந்தியைப்பரப்பி விட்டுள்ளனர்பாதிரிகள். "எங்கள்பள்ளி மெட்ரிகுலேஷன் பள்ளி. அவர்களது சாதாரண பள்ளி. நான் எதற்கு அந்தப் பள்ளியை போட்டியாகக் கருதுகிறேன்" என்று இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு.
இந்து முன்னணி நிறுவனத் தலைவர் இராம.கோபாலன் நவம்பர் 23ம் தேதி இந்தக் கொடூரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்நடத்தப் போவதாகஅறிவித்தார். ஆனால் சதாம் உசேனை விடுவிக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திற்குக் கூட அனுமதி தரும் போலீசார், இதற்கு அனுமதி தரவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளியை பார்வையிடவும் அனுமதிக்க வில்லை.போலீசார் பாதிரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதையே இது காட்டுகிறது.
இப்போது ஆளும் கட்சி உதவியுடன் தப்பித்துக் கொள்ளபாதிரிகள் திட்டமிடுவதாக பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பாதிரிகளுக்கு சாதகமாகவே வந்துள்ளது. மாணவி சுகன்யாவுக்குநீதி கிடைக்குமா? நீதி தேவதைக்கு வெற்றி கிடைக்குமா? அல்லது கிறிஸ்தவர்களின் ஓட்டுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

(குறிப்பு: மாணவி சுகன்யா ஹிந்துவாகப் பிறந்த குற்றத்தினால் அவருக்கு முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல்வாதிகள் யாரும் குரல் கொடுக்க வில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே அவர்கள் காட்டிக் கொள்ளவுமில்லை)


கன்னியாஸ்திரிகளுடன் பாதிரிகள் உல்லாசம்!

ஓமலூர் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பாதிரிகள் தங்கும் அறைகளில் வெளிநாட்டு மது பாட்டில்களும், காண்டம்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. இந்தப் பள்ளியில், வெளிமாநிலங்களிலிருந்து பாதிரிகள் வந்து வெள்ளிக்கிழமை இரவிலிருந்து சில நாட்களுக்கு தங்குவது வழக்கம். அந்த நேரத்தில் பாதிரிகள் கன்னியாஸ்திரிகளுடன் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருப்பார்களாம். இப்படி உல்லாசமாக இருக்கும் பாதிரிகளுக்கும், கன்னியாஸ்திரிகளுக்கும் விடுதியில் தங்கிப் படிக்கும் அழகான மாணவிகள்தான் உணவு உள்ளிட்ட பொருட்களை (?) எடுத்துச் சென்று பரிமாறுவார்களாம்.

பொதுமக்கள் எழுப்பும் கேள்விகள்?

பிளஸ் 1-ல் மாணவி சுகன்யா மூன்றாவது ரேங்க் எடுத்துள்ளார். ஆனால் சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் சுகன்யா சரியாக படிக்கமாட்டார் என்று பேட்டி அளித்துள்ளார். சிங்கராயன் ஏன் பொய் சொல்கிறார்?

மாணவி சுகன்யாவின் பெற்றோரிடம் ரூ.7 லட்சம் வரை பேரம் பேசியதாக செய்தி வந்துள்ளது. ஏற்கனவே மர்மமான முறையில் இறந்த மாணவிகளின் பெற்றோருக்கும் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

மர்ம மரணம் என்றால் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடலைப் புதைப்பதுதான் வழக்கம். ஆனால் மாணவி சுகன்யாவின் உடலை போலீசார் எரித்துள்ளனர். இதற்கு என்ன காரணம்?
பாத்திமா பள்ளியில் படிக்கும் மாணவிகள் பூ வைக்கவும், வளையல் அணியவும் அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் பெண்கள் பள்ளி என்றால் பூ, வளையல் இருக்கத்தான் செய்யும் என்று பாதிரி சிங்கராயன் பேட்டி அளித்துள்ளார். அவர் ஏன் உண்மையை மறைக்கிறார்?

ஓமலூர் பாத்திமா பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளில் 15 மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
அழகான மாணவிகள் மட்டும் இறப்பது ஏன் என்று மகளிர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பள்ளி நிர்வாகம், போலீசாரின் பதில் என்ன?

240 மாணவிகள் தங்கியுள்ள விடுதிக்கு வெளி மாநிலங்களிலிருந்து வந்து பாதிரிகள் பலர் இரவு தங்குகிறார்களே எதற்காக? இது சிறுபான்மை கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் பள்ளி. இது அரசுப் பள்ளி அல்ல. அதனால் இங்கு பணியிலிருக்கும் 86 பேரையும் மாற்றமுடியாது என்று சேலம் மறைமாவட்ட பிஷப் ஆணவமாக பேட்டி அளித்துள்ளார். எந்த தைரியத்தில் பிஷப் இப்படி பேசுகிறார்?

பொதுவாக குற்றம் நடந்த இடத்தில் குற்றவாளி எனக் கருதப்படுவோரை தங்க போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் கற்பழிப்பு குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதிரிகள், சம்பந்தப்பட்ட பாத்திமா பள்ளியிலேயே தங்கியுள்ளனரே ஏன்?

மாணவி சுகன்யா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளை இருதய நோயாளிகள் என்பதற்காக கைது செய்யவில்லை என்று சேலம் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இருதய நோயாளிகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பில் ஈடுபட்டால் போலீசார் அவர்களை கைது செய்யாமல் விட்டுவிடுவார்களா? இல்லை கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு மட்டும் இந்த சலுகையா?

பா.ஜ.க தவிர மற்ற அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் மௌனம் சாதிக்கின்றனரே ஏன்? கிறிஸ்தவர்களின் ஓட்டுகளுக்காக ஹிந்து மாணவி கற்பழிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்களா?

மாணவியர் விடுதியில் `கோஹினூர்' காண்டம், `மார்கோபோலோ' பீர் பாட்டில்

கிறிஸ்தவப் பாதிரிகளால் மாணவி சுகன்யா கற்பழித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஓமலூர் பாத்திமா மேல்நிலைப் பள்ளி விடுதியில் ஏராளமான கோஹினூர் `காண்டம்'களும், `மார்கோபோலா' பீர் பாட்டில் உட்பட வெளிநாட்டு மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஆங்காங்கே பீர்பாட்டில்களும் காலி வெளிநாட்டு மது பாட்டில்களும் குவியல் குவியலாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கன்னியாஸ்திரிகளுடன் பேட்டி அளிக்கும் பிஷப் சிங்கராயன்

பொதுமக்களின் எதிர்பார்ப்புகள்...

மாணவி சுகன்யா மட்டுமல்ல 15-க்கும் மேற்பட்ட அழகான மாணவிகள் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படும் பாத்திமா மேல்நிலைப் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

அரசு உதவியுடன் நடந்து வரும் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பாதிரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தங்குவதற்கு தடைவிதிக்க வேண்டும். அங்கு ஜெபம் என்ற பெயரில் நடக்கும் மதமாற்றத்தையும் தடுக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் இறந்துபோன 15-க்கும் மேற்பட்ட மாணவிகளின் மர்ம மரணம் பற்றி விசாரணை நடத்தி உண்மையை வெளி வரவழைக்க வேண்டும்.

இது கிறிஸ்தவப் பள்ளி. ஆசிரியர்களை இடமாற்றம் செய்யமுடியாது என்று ஆணவமாகப் பேசிய சேலம் மாவட்ட பிஷப் சிங்கராயன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டில்லியில் பிரியதர்ஷிணி மட்டூவை கற்பழித்து கொலை செய்ததற்காக வழக்கறிஞர் சந்தோஷ் சிங்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அதுபோல மாணவிகளைக் கற்பழித்து கொன்றதாகக் கூறப்படும் பாதிரிகளுக்கும் விசாரணை நடத்தி மரண தண்டனை விதிக்க வேண்டும்.

நாடுமுழுவதும் கிறிஸ்தவப் பாதிரிகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகளில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் அடிக்கடி வருகின்றன. எனவே நாடுமுழுவதும் உள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முழுமையாக ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஒருவர் உதவியுடன் பாதிரிகள் இந்த விஷயத்தை அமுக்கப் பார்ப்பதாக செய்திகள் வருகிறது. அதனால் இந்த வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.

October 20, 2007

"வேதனை தரும் அவலம்" - வீ. ரங்கசாமித் தேவர் 31- 03 - 1989 அன்று வெளியிட்ட அறிக்கை

23-03-1989 அன்று தம்மம்பட்டியில் ஹிந்துக்கள்மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்த துயர சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி நடந்த சம்பவங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்தான் காரணம் என்று அவதூறுகளை அள்ளி விட்டிருந்தார். கருணாநிதியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து அப்போதைய ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் வீ.ரங்கசாமித் தேவர் வெளியிட்ட அறிக்கையை 7-4-1989 விஜயபாரதம் இதழ் பதிவு செய்துள்ளது. அவற்றின் சுருக்கம்.

"மசூதி முன்பு இசை எழுப்புவது மரபுக்கு விரோதம் என்கிறார் முதல்வர் கருணாநிதி. இந்த மரபு தொடங்கியது எப்போது என்பதை அவர் ஆராய்ந்து பார்க்கட்டும். அன்னிய அடக்குமுறை ஆட்சியில் ஹிந்துக்கள் மீது திணிக்கப்பட்ட பழக்கம்தான் இது. இப்படிப்பட்ட ஒரு அவமானகரமான பழக்கத்தை அற்புதமான மரபு என்று கொண்டாடுவது ஹிந்துக்களின் உணர்வுகளைக் குத்திப் புண்ணாக்கும் செயல். அதுவும் ஹிந்துக்கள் தங்கள் சுதந்திர நாட்டிலேயே இப்படி அவமதிக்கப்படுவதா?
"அன்னிய அடிமைத்தனத்தின் இத்தகைய மிச்ச சொச்சங்களை ஆர்.எஸ்.எஸ் கடுமையாக எதிர்க்கிறது. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க தளர்வற்ற போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ் துவக்கி உள்ளது. அத்துடன் ஹிந்துக்கள் தங்கள் சொந்த நாட்டில் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பணியினையும் ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது. நாங்கள் மேற்கண்ட நிலை சரியானது என்பது தம்மம்பட்டி உள்பட பல ஊர்களில் நிரூபணமாகி உள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
"உள்ளது உள்ளபடி அனைவரும் உணரும் வகையில் கீழ்க்கம்ட விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். தம்மம்பட்டியில் நடந்தது பாரம்பரிய ஹிந்து சமயத் திருவிழா. இதுபோல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் நடப்பது சகஜம். இந்தத் திருவிழா முதலமைச்சர் வர்ணித்ததுபோல ஆர்.எஸ்.எஸ் நடத்திய நிகழ்ச்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ் பெயரை இதில் அவர் இழுத்தது அனாவசியமானது. ஆர்.எஸ்.எஸ்ஸை தூற்றுவதையே தொழிலாகக் கொண்ட முஸ்லிம் லீக், இடது கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் தந்த தகவல்களை ஆதாரமாக எடுத்துக் கொள்வது தீய அறிகுறி.

"அமைதியான முறையில் ஊர்வலமாகச் செல்லும் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் பொறுப்பு. அவ்வூர் மசூதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஏராளமான முஸ்லிம்கள் மிரட்டும் போக்கில் திரண்டதாக கூறப்படுகிறது. அவர்களை காவல்துறை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை செய்யத் தவறிய காவல்துறை பரிதாபத்துக்குரியதாகிறது.

"துப்பாக்கிச் சூடு நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹிந்துக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட எடுத்த ஆணித்தரமான நடவடிக்கைகளுக்கு பிறகு முஸ்லிம்கள் இறங்கி வந்தனர். இனி எந்த நாளிலும் எந்த நேரத்திலும் வாத்திய இசையுடன் மசூதிக்கு முன்னால் ஹிந்துக்கள் ஊர்வலமாகச் செல்வதை எதிர்க்கும் அறிவீனத்தை கைவிடப்போவதாக அறிவித்திருப்பது சுவாரஸ்யமானது. சுதந்திர பாரதத்தில் ஹிந்துக்கள் தங்களுடைய நியாயமான உரிமைகளை நிலை நாட்டுவதற்காக இரண்டு பேரின் இன்னுயிரை பலி கொடுக்க வேண்டியிருக்கிறது. இது வேதனை தரும் அவலம்"

தம்மம்பட்டி துப்பாக்கிச் சூடு பற்றி ஷ்ரீரங்கம் எம்.எல்.ஏ வெங்கடேஸ்வர தீட்சிதர் 30-03-1989 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆற்றிய உரை

30-03-1989 அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஷ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.வெங்கடேஸ்வர தீட்சிதர் தம்மம்பட்டயில் ஹிந்துக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு பற்றி பேசி அரசின் கவனத்தை ஈர்த்தார். இந்த துப்பாக்கிச் சூடு பற்றி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக்கோரி தீட்சிதர் ஆற்றிய உரை 7-4-1989 வியபாரதம் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் சுருக்கம்.
"மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே! திருச்சியிலிருந்து ஆர்.எஸ்.எஸ்காரர்களை ஏதோ ரயிலிலோ, ஹெலிகாப்டரிலோ ஏற்றிக் கொண்டுவந்து ஆத்தூர் பக்கத்தில் உள்ள தம்மம்பட்டியில் நான் இறக்கியிருப்பதாக லத்தீப் சொல்கிறார். லத்தீப் ஒரு தரப்பாக கூறியதை நீங்கள் அனுமதித்து இருக்கிறீர்கள். நாங்கள் இரண்டு பேரும் இங்கேதான் இருக்கிறோம். நானும் பத்திரிகையில்தான் பார்த்தேன். அவரும் பத்திரிகையில் பார்த்ததுதான். அவரும் கேட்டதைதான் சொல்கிறார். நானும் கேட்டதைத்தான் சொல்கிறேன். தம்மம்பட்டியில் மொத்தம் 5 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதாவது ஹிந்துக்கள். அதை நீங்கள் உணர வேண்டும். அங்கே என்ன நடந்தது? கலவரத்திற்கு காரணம் என்ன? போலீஸ் தலையிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டுமா? இதுபோன்ற பிரச்சினைகள் இருக்க ஏதோ ஆர்.எஸ்.எஸ்காரர்கள் எங்கிருந்தோ வந்து இறங்கினார்கள் என்று லத்தீப் கூறுகிறார்.


"பாதுகாப்பிற்காகத்தானே போலீசார் வருகிறார்கள். பிறகு எதற்கு அடிக்கிறார்கள்? மைனாரிட்டி என்ற பெயரை வைத்துக்கொண்டு சிலபேர் லாபம் அடைகிறார்கள். எங்கெங்கோ குடியேறுகிறார்கள். அந்தப் பக்கத்தில் மேளம் அடிக்கக் கூடாது என்கிறார்கள். எங்கே வேண்டுமானாலும் குடியேறுகிறார்கள். மேளம் அடிக்காமல் இருக்க முடியுமா? பங்குனி உத்திரத் திருவிழா என்பது இன்றைக்கு ஏற்பட்ட ஒன்றா? முருகன் கோயில் ஏற்பட்டது எத்தனையோ காலத்திற்கு முன்னால். அந்த உற்சவத்தில் மேளம் அடிக்கக் கூடாது என்கிறார்கள். அப்போதும் மேளம் அடிக்காமல் போனபோது வம்பு வந்துவிட்டது. துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. முதலில் இரண்டு ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இறந்திருக்கிறார்கள் என்று ஒருபத்திரிகை செய்தி வெளியிட்டது. மொத்தத்தில் ஹிந்துக்கள் இறந்திருக்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருக்கிறது. அதைப் பற்றி விரிவாக இந்த அவையில் பேசுவது நமது சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகத்தான்"

October 19, 2007

தம்மம்பட்டியில் 1989-ல் நடந்தது என்ன?

தம்மம்பட்டியில் மண்மலை முருகன் கோயில் என்ற புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழா அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்தப் பங்குனி உத்திரத் திருவிழாவின் இரண்டாவது நாள் நடக்கும் காவடி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி ஏந்திச் செல்வார்கள். இந்த ஊர்வலம் பல நூறு ஆண்டுகளாக கன்னிகாபரமேஸ்வரி கோயில் அமைந்துள்ள வண்ணாரத்தெரு வழியாகத்தான் உற்சாகத்தோடு பவனி வரும். அங்கு மசூதி வந்தபிறகும் அந்த வழியாகத்தான் ஊர்வலம் மேளதாளத்தோடு சென்று கொண்டிருந்தது. 22-03-1989ல் காவடி ஏந்தி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்றபோது, மசூதி வழியாக செல்லக் கூடாது என்று முஸ்லிம்கள் பிரச்சினை செய்தார்கள். ஆனாலும் காவடி ஊர்வலம் மசூதி வழியாகச் சென்றது. முஸ்லிம்கள் தடுத்து நிறுத்த முயற்சித்த போதும் அந்தத் தடுப்பு முயற்சிகளை எல்லாம் முறியடித்துவிட்டு காவடி ஊர்வலம் மேளதாளத்துடன் மசூதியைக் கடந்துச் சென்றது.

அப்போது தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் உற்சாகம் அடைந்த முஸ்லிம்கள் காவடி ஊர்வலம் முடிந்ததும் ஹிந்துக்களின்மீது குற்றம் சாட்டி போலீசில் புகார் செய்தனர். இதனால் அப்போது மிகப்பெரிய அளவில் பதட்டம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டது. "நாங்கள் கோயில் அருகில் பெருந்தன்மையாக மசூதி கட்ட அனுமதித்தோம். ஆனால் இன்று அந்த மசூதியைக் காரணம் காட்டி எங்கள் ஊர்வலம் வரக்கூடாது என்பதா?" என்று ஹிந்துக்கள் கொதித்துப் போனார்கள். ஹிந்துக்கள் போராட்டத்தில் குதித்தார்கள். கடைகள் அடைக்கப்பட்டன.

ஹிந்துக்கள் போராட்டத்திற்கு தயாரானதும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் ஹிந்துக்கள் சத்தாபரணம் நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் பேச்சுவார்த்தைக்கு வரமுடியும் என்று கூறிவிட்டனர். காவடி ஊர்வலம் முடிந்ததும் முருகன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவார். இந்நிகழ்ச்சிக்கு சத்தாபரணம் என்று பெயர். சத்தாபரண நிகழ்ச்சியின் போதும் சுவாமி மசூதி உள்ள தெரு வழியாகத்தான் வீதி உலா வருவார். அப்படி சுவாமி வீதி உலா வரும்போது மசூதி முன்பு மேளம் வாசிக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் பிரச்சினை செய்தனர். இதனால் தம்மம்பட்டி மீண்டும் பதட்டமான சூழ்நிலைக்கு திரும்பியது.
ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டெண்டு பாலசுப்பிரமணியம் தலைமையில் தம்மம்பட்டி காவல்நிலையத்தில் ஹிந்து - முஸ்லிம் பிரதிநிதிகளுக்கிடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஆடிட்டர் வி.ரமேஷ், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முழுநேர ஊழியர் ஜெகதீசன், மண்மலை முருகன் கோயிலின் தர்மகர்த்தா கந்தசாமி போன்றவர்கள் ஹிந்துக்களின் சார்பில் பங்கேற்றனர். தம்மம்பட்டியில் திராவிடர் கழகத்தினர் விநாயகர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாகச் சென்றனர். இதற்கு தம்மம்பட்டியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் பெரிதும் துணை புரிந்தார். எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தின் முடிவில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் பிரமுகரை ஒரு மாதத்திற்குள் தம்மம்பட்டியில் இருந்து வெளியேற்றி விடுவதாக ஜமாத் உறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த முஸ்லிம் நபர் ஊரைவிட்டு வெளியேற்றப் படவில்லை.பேச்சுவார்த்தை ஆரம்பமானதும் இந்தப் பிரச்சினையை எழுப்பி ஜமாத் அளித்த உறுதிமொழிப்படி அந்த முஸ்லிம் நபர் ஏன் வெளியேற்றப்படவில்லை என்று ஹிந்துப் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினார்கள். "இது பற்றி நான் விசாரிக்கிறேன். ஆனால் மசூதி முன்பு மேளம் அடிக்காமல் ஊர்வலம் செல்லுங்கள்" என்று டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம் கூறினார்.

"முன்பு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடந்தபோது மசூதிக்கு முன்பு பேண்டு வாத்தியம் வாசிக்கக் கூடாது என்றீர்கள். பிறகு இதனையே காரணம் காட்டி விநாயகர் ஊர்வலத்தின்போதும் மேளம் வாசிக்கக் கூடாது என்று தடை விதித்தீர்கள். `இம்முறை மட்டும் மேளம் அடித்துச் செல்ல வேண்டாம். அடுத்த முறை மேளம் அடித்துச் செல்லலாம்' என்று ஒவ்வொரு வருடமும் இதனையே சொல்கிறீர்கள். அதனால் இந்த முறை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். முஸ்லிம்கள்தான் விட்டுக் கொடுக்க வேண்டும்" என்று மண்மலை முருகன் கோயிலின் தர்மகர்த்தா கந்தசாமி பேசினார். மசூதி முன்பு மேளம் வாசித்துச் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பளித்துள்ளது என்று அந்தத் தீர்ப்பை மேற்கோள்காட்டி வாத்திய இசையுடன் ஊர்வலம் செல்ல அனுமதிக்குமாறு ஆடிட்டர் ரமேஷ் போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைப் படித்து விவரம் அறிவதற்கு காலஅவகாசம் தேவை என்று டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம் இதற்கு பதிலளித்தார்.

முஸ்லிம்கள் தொழுகை நடக்காத ஒரு நேரத்தைக் குறிப்பிட்டால் அந்த நேரத்தில் நாங்கள் ஊர்வலம் சென்று விடுகிறோம் என்று பிரச்சினைக்குத் தற்காலிகமான தீர்வு ஒன்றைச் சொன்னார் ஆடிட்டர் ரமேஷ். ஆனால் இதனையும் ஏற்க மறுத்த முஸ்லிம்கள், `24 மணி நேரமும் தொழுகை நேரம்தான். எனவே கால அவகாசம் தரமுடியாது' என்று மறுத்து விட்டனர். முஸ்லிம்களின் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தை இப்படி நீண்டு கொண்டிருப்பதைக் கண்ட டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண 01-04-2007 தேதி உதவி கலெக்டர், தாசில்தார் தலைமையில் அமைதிக் கூட்டம் நடக்கும். அதில் ஒரு முடிவு காணப்படும் என்று அறிவித்தார். மேளம் அடிக்காமல் ஊர்வலம் செல்வதாக இருந்தால் நான் இப்போதே அனுமதி அளிக்கிறேன். இல்லையெனில் சட்டப் பிரிவு 30(2)ன் கீழ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம் அறிவித்தார். சட்டப் பிரிவு 30(2) மத ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என்பதை ஜெகதீசன் எடுத்துக் கூறியும் டி.எஸ்.பி அதனை ஏற்காமல் நிராகரித்ததால் ஹிந்துப் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தனர். டி.எஸ்.பி வெளிநடப்பு செய்ய வேண்டாம் என்று வற்புறுத்தியதால் பொதுமக்களிடம் பேசி அவர்களின் கருத்தை அறிந்து கொண்டு வருகிறோம் என்று கூறிவிட்டு ஹிந்துப் பிரதிநிதிகள் வெளியேறினார்கள்.

பிறகு ஹிந்துப் பிரதிநிதிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மூன்று விதமான முடிவுகள் சொல்லப்பட்டு அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டது.

அவை.

1. உதவி கலெக்டர், தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் 01-04-1989 வரை ஊர்வலத்தை ஒத்திவைத்து பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஊர்வலம் நடத்துவது.

2. இன்றைக்கே(23-03-1989) மசூதி முன்பு மேளதாளத்துடன் ஊர்வலம் செல்வது. தடுக்கப்பட்டால் அதே இடத்தில் சப்பரத்தை விட்டுவிட்டு வந்துவிடுவது

3. இன்றைக்கே(23-03-1989) மசூதி முன்பு மேளம் அடிக்காமல் ஊர்வலம் நடத்துவது.

இதில் இரண்டாவது முடிவை பொதுமக்கள் ஏற்று இன்றைக்கே மேளதாளத்துடன் ஊர்வலம் நடத்துவோம். தடுத்தால் சப்பரத்தை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுவோம் என்று முடிவு செய்தனர். பொதுமக்கள் தம்மம்பட்டி காவல்நிலைய்ததிற்கு வந்து இந்த முடிவை டி.எஸ்.பியிடம் தெரிவித்தனர். ஆனால் டி.எஸ்.பி இன்று ஊர்வலம் நடத்த அனுமதிக்க முடியாது என்று மறுத்தார். ஆனால் பொதுமக்கள் அனைவரும் ஒரே குரலில் இன்று மசூதி முன்பு மேளதாளத்துடன் ஊர்வலம் நடந்தே தீரும் என்று கூறிவிட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார்கள். உடனே ஆடிட்டர் ரமேஷ் அவர்களும், ஜெகதீஷ் அவர்களும் ஊர்வலம் துவங்கும் மண்மேடு பகுதிக்கு வந்தனர். அங்கு வந்த டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம், தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் ஜெகதீஷிடம், "நீங்கள் இருவரும் தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையில் தலையிடுகிறீர்கள். உள்ளூர் மக்கள் ஒத்துக் கொண்டாலும் நீங்கள் தூண்டி விடுகிறீர்கள். எனவே உங்கள் இருவரையும் கைது செய்யப் போகிறோம்" என்று மிரட்டல் விடுத்தனர். போலீஸ் அதிகாரிகள் இருவரையும் மிரட்டுவதைக் கண்ட பொதுமக்கள் இது நாங்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. இதற்காக அவர்களைக் கைது செய்யக் கூடாது என்று ஒரே குரலில் கோஷமிட்டனர்.
ஆனால் பொதுமக்கள் கூறியதைக் கண்டுகொள்ளாத காவல்துறையினர் ஊர்வலம் துவங்கினால் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் ஜெகதீஷ் இருவரையும் கைது செய்வோம் என்றனர். "நாங்கள் இருவரும் இந்தப் பிரச்சினைக்காகப் போராடி வருகிறோம். இதற்காக கைது செய்யப்பட்டால் மிகவும் பெருமை அடைவோம்" என்று இருவரும் கூற, போலீஸ் அதிகாரிகள் இருவரின் முகவரிகளைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்துச் சென்றனர். திட்டமிட்டபடி 23-03-1989 அன்று சத்தாபரண ஊர்வலம் மேளதாளத்துடன் அலங்கரிக்கப்பட்ட விளக்குகளுடன் இரவு 9.30 மணிக்கு துவங்கியது. பக்தர்கள் எழுப்பிய"அரோகரா" "அரோகரா" என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. ஊர்வலம் துவங்கும்போது சுமார் 700 பேர் இருந்தனர். நேரம் செல்லச் செல்ல 2,000க்கும் அதிகமானோர் ஊர்வலத்தைப் பின்தொடர்ந்தனர். பஸ்நிலையம் அருகே சாலை மறிக்கப்பட்டு போலீஸ் ஜீப்புகள் நிறுத்தப்பட்டன. ஊர்வலம் நெருங்க நெருங்க தடுப்புகள் நீக்கப்பட்டு ஜீப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

அமைதியாகச் சென்று கொண்டிருந்த ஊர்வலம் குறுகலான ஒரு தெரு வழியாக வந்து கொண்டிருந்தபோது துப்பாக்கிகளுடனும், தடிகளுடனும் போலீசார் வழிமறித்தனர். அவர்களுக்கு முன் டி.எஸ்.பி, தாசில்தார், தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். ஊர்வலத்தின் முன் அணியில் வந்து கொண்டிருந்த ஆடிட்டர் ரமேஷ் மற்றும் ஜெகதீஷ் இருவரையும் பேச்சுவார்த்தைக்கு டி.எஸ்.பி அழைத்தார். இருவரிடமும் என்ன செய்யப் போகிறீர்கள் என்று தாசில்தார் கேட்டார். " ஊர்வலம் திட்டமிட்டபடி நடக்கும்" என்றார் ஆடிட்டர் ரமேஷ். மசூதி முன்பு மேளம் அடிக்காமல் சென்றால் அனுமதிக்கிறேன். இல்லையெனில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று தாசில்தார் மிரட்டினார்.

"மக்களிடம் உணர்ச்சி பொங்கும் இந்த நேரத்தில் எங்களுடன் ஒத்துழையுங்கள். இந்த நேரத்தில் மேளம் அடிக்காமல் செல்லுங்கள் என்று மக்களிடம் வேண்டுகோள் வைப்பது சாத்தியமல்ல. வேண்டுமானால் எங்களில் 10 பேரை கைது செய்யுங்கள். ஊர்வலத்தை ரத்து செய்து விடுகிறோம்" என்று ஆடிட்டர் ரமேஷ் கூறினார். இதனைக் கேட்ட டி.எஸ்.பி, "நாங்கள் உங்களை கைது செய்ய வரவில்லை. சுட வந்திருக்கிறோம்" என்றார். "அப்படியானால் சுடுங்கள். அதனை சந்தோஷமாக ஏற்கிறோம்" என்றார் ஜெகதீசன். அப்போது தாசில்தார் ஆடிட்டர் ரமேஷிடம், "உங்களில் 10 பேரை கைது செய்தால் ஊர்வலத்திற்கு வந்திருப்பவர்களை திரும்பிப் போகச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார். முடியும் என்று கூறி கூட்டத்தினரை நோக்கி ஊர்வலத்தை விட்டு கலைந்துச் செல்லுமாறு வெண்டுகோள் விடுக்க முயற்சிக்கும்போது ஆடிட்டர் ரமேஷ், ஜெகதீஷ் இருவரையும் போலீசார் கீழே தள்ளி தடியால் அடித்தனர்.
ஆடிட்டர் ரமேஷ் மற்றும் ஜெகதீஷ் இருவரையும் போலீசார் அடிப்பதைக் கண்ட ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் செல்வராஜ், பொதுமக்களை போலீசார் அடிக்காமல் தடுப்பதற்காக போலீசார் முன்பாக வந்து நின்றார். அப்போது தம்மம்பட்டி காவல்நிலையத்தில் எழுத்தராக இருக்கும் முஸ்லிம் போலீஸ்காரர் துப்பாக்கியின் முனையில் இருக்கும் கத்தியால் செல்வராஜின் வயிற்றில் குத்திக் குடலை உருவினார். துடித்துக் கொண்டிருந்த செல்வராஜ் பிழைத்துக் கொண்டுவிடுவோரா என்று அவரது நெஞ்சில் சுட்டார் அந்த முஸ்லிம் எழுத்தர். செல்வராஜ் துடிதுடித்து உயிர் துறந்தார். செல்வராஜைக் கொன்றதோடு அந்த முஸ்லிம் எழுத்தரின் வெறி அடங்கவில்லை பழனிச்சாமி என்பவரையும் அவர் சுட்டுக் கொன்றார். இந்தச் சமயத்தில் போலீசார் ஊர்வலத்தில் திரண்டிருந்த ஹிந்துக்கள்மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். மக்களைத் துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலர் பலத்த காயமடைந்தனர். இந்த நேரத்தில் போலீசாரால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 5 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேரின் உடல்களை போலீசார் ரகசியமாக அப்புறப்படுத்தி விட்டதாகவும் பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.(30-03-1989ல் சட்டப்பேரவையில் பேசிய ஷ்ரீரங்கம் எம்.எல்.ஏ வெங்கடேஸ்வர தீட்சிதர் 5 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார்) போலீசார் தாங்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்காக தங்கள் ஜீப் கண்ணாடியை தாங்களாகவே உடைத்துக் கொண்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.


அத்தோடு போலீசாரின் வெறி அடங்கவில்லை. அன்று நள்ளிரவு வீடுவீடாகச் சென்று ஹிந்துக்களை மிரட்டி கைது செய்தனர். யார் யார் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தையும் போலீசார் வெளியிடவில்லை. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதும், பலர் படுகாயம் அடைந்ததும், பலர்மீது பொய் வழக்குகள் போடப்பட்டதும் தம்மம்பட்டி ஹிந்துக்கள் கொதித்துப் போனார்கள். உடனே அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றுகூடி முஸ்லிம்களுடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்தனர். அவர்களுக்கு பால் உட்பட எந்தப் பொருளும் விற்பதில்லை. அவர்களிடம் இருந்து எந்தப் பொருளையும் வாங்குவதில்லை என்று முடிவு செய்தனர். முஸ்லிம்களுக்கு சவரம் செய்ய எந்த சவரத் தொழிலாளியும் முன்வரவில்லை. துணி வெளுக்க, சலவை செய்ய சலவைத் தொழிலாளர்கள் மறுத்து விட்டனர். ஊரே முஸ்லிம்களைப் புறக்கணிக்க முடிவு செய்து அதனைச் செயல்படுத்த ஆரம்பித்ததும் அரசு நிர்வாகம் பணிந்தது. பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

தம்மம்பட்டி ஹிந்துக்கள் முஸ்லிம்களை புறக்கணித்த ஆரம்பித்ததும் சேலம் ஆர்.டி.ஓ ஜக்மோகன் சிங் ராஜூ இரு தரப்பினரிடையே அமைதியை எற்படுத்தப் போகிறேன் என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்த ஆர்.டி.ஓ ஜக்மோகன் சிங் ராஜூவை முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினார்கள். இனி எக்காலத்திலும் சுவாமி ஊர்வலம் மேளதாளத்துடன் மசூதி வழியாகச் செல்லலாம் என்று எழுத்து மூலமாக அவரிடம் உறுதி அளித்தனர். முஸ்லிம்கள் எழுத்து மூலமாக உறுதி மொழி அளித்ததால் இப்பிரச்சினை அப்போது முடிவுக்கு வந்தது.

இந்தப் பிரச்சினையில் ஆடிட்டர் ரமேஷ், விஸ்வ ஹிந்து பரிஷத் முழுநேர ஊழியர் ஜெகதீசன், மண்மலை முருகன்கோயில் தர்மகர்த்தா கந்தசாமி உட்பட 22 பேர் போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த 22 பேரையும் விடுதலை செய்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். "ஹிந்துக்களின் மத சம்பிரதாயப்படி மேளதாளத்துடன் தாரை தப்பட்டை முழங்க மத ஊர்வலங்கள் நடப்பதை போலீசார் தடை செய்ய முடியாது. அப்படி மத சம்பிரதாயங்களுடன் ஊர்வலங்கள் நடப்பதற்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இப்படி நடக்கும் ஊர்வலத்தை தடுப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 22 பேர் மீது போலீசார் தொடுத்த பொய் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதும், அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பும் ஹிந்துக்களின் நியாயமான போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

October 13, 2007

தம்மம்பட்டி ஹிந்துக்கள் நிறைவேற்றிய தீர்மானங்கள்!

தம்மம்பட்டி ரெட்டியார் மண்டபத்தில் 36 ஜாதிகளைச் சேர்ந்த 135க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருமனதாக எட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் சுருக்கம்.

தம்மம்பட்டி வாசவி மஹால் அருகில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை மறைத்து முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகளால் வைக்கப்பட்டுள்ள திரைச்சீலையையும், தகரத் தடுப்பையும் உடனடியாக அகற்ற வேண்டும். அது வரை தம்மம்பட்டி நகரத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விநாயகர் சிலைகளையும் விசர்ஜனம் செய்யப் போவதில்லை.

15.09.2007 அன்று கமிஷனர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தம்மம்பட்டி கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தின் செயலாளராக இருக்கும் ஜாபர் சாதிக் அலி ஹிந்துப் பெரியவர்களை நோக்கி "உங்கள் நாடு நேபாளம். அங்கு சென்று பிழைத்துக் கொள்ளுங்கள். நேபாளத்திற்குச் சென்று விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளுங்கள்" என்று பேசியிருக்கிறார். அரசு ஊழியரான ஜாபர் சாதிக் அலியின் இந்தப் பேச்சை, இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் அரசு பணியாற்ற தகுதியற்றவர்.

வாசவி மஹால் அருகில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை மறைத்து வைக்கப்பட்டுள்ள தகரத் தடுப்பினை உடனடியாக அகற்றாவிட்டால் கடையடைப்பு, உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். 17.09.2007 காலை 8 மணிக்கு பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரதம் நடைபெறும்.

மைனாரிட்டி மக்களுக்காக பெரும்பான்மை ஹிந்து சமுதாயத்தைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது.

முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை அவர்களிடம் இருந்து உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் நிலையத்தின் முன்பு வெங்கடேஸ்வரா ஹோட்டல் என்ற பெயரில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் ஹோட்டல் நடத்துவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இந்தப் பெயரை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விநாயகர் சிலையை மறைத்து வைக்கப்பட்டுள்ள தகரத் தடுப்பு அகற்றப்படாவிட்டால் ஹிந்துக்களாகிய நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றி நமது எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும்.

வாசவி மஹால் அருகே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு தினசரி பூஜைகள் சிறப்பாக நடத்தப்படும். ஹிந்துக்கள் தங்களால் இயன்றவரை பிரசாதங்கள் வினியோகம் செய்து விநாயகரை வழிபட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தம்மம்பட்டியில் நடந்தது என்ன?

15.09.2007 அன்று வாசவி மஹால் அருகே வழக்கம்போல விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

15.09.2007 காலை பத்துமணிக்கு தம்மம்பட்டி மசூதியில் இருந்து, "மானமுள்ள முஸ்லிம்கள் உடனடியாக ரோட்டிற்கு வரவேண்டும். ஹிந்துக்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக் கூடாது" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.


மசூதி ஒலிபெருக்கியில் இருந்து அழைப்பு வந்ததும் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 15.09.2007 மாலை 3 மணிக்கு 3,000க்கும் அதிகமான ஹிந்துக்கள் தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் குவிந்தனர். யாரும் அழைப்பு விடுக்காத நிலையில் தாங்களாகவே ஹிந்துக்கள் அனைவரும் கடையடைப்பு நடத்தினார்கள்.

15.09.2007 இரவு 7 மணிக்கு கமிஷனர் கோபாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி செண்பகராமன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தம்மம்பட்டி கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தின் செயலாளராக இருக்கும் ஜாபர் சாதிக் அலி ஹிந்துப் பெரியவர்களை நோக்கி "உங்கள் நாடு நேபாளம். அங்கு சென்று பிழைத்துக்கொள்ளுங்கள். நேபாளத்திற்கு சென்று விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளுங்கள்" என்று பேசினார். இதனால் பேச்சுவார்த்தை முறிந்தது.

15.09.2007 இரவு 9 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பா.ஜ.கமாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.சி.தண்டபாணி, பா.ஜ.க மாவட்டப் பொறுப்பாளர் பி.கந்தசாமி உள்ளிட்ட 10 பேர் ஹிந்துக்கள் தரப்பில் பங்கேற்றனர். ஹிந்துப் பிரதிநிதிகள் வன்முறையைத் தவிர்ப்பதற்காக விநாயகர் சிலைக்கு முன்பு திரைச்சீலை அமைக்க வேண்டும். தொழுகை நேரத்தில் பூஜை கூடாது போன்ற போலீசாரின் நிபந்தனைகளுக்கு உடன்பட்டனர். இதனை பொதுமக்கள் ஏற்கவில்லை.

16.09.2007 அன்று 36 ஜாதிகளைச் சேர்ந்த 135 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் 8 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊர்க் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மறுநாள் 17.09.2007 அன்று பஸ்நிலையத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

அமைதியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள்மீது நாமக்கல் எஸ்.பி.நிக்கல்சன் தடியடி நடத்த உத்தரவிட்டார். அவரது உத்தரவை ஏற்று நடந்த தடியடியில் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் தாங்கள் நடத்திய தடியடிக்குக் காரணம் காட்டுவதற்காக பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உட்பட 500 க்கும் அதிகமான அப்பாவி ஹிந்துக்கள்மீது கொலை முயற்சி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற கடுமையான பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.ராஜேந்திரன் தம்மம்பட்டிக்கு வந்து விசாரணை நடத்தினார். அதன் பிறகு தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜகந்நாதன் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு காத்திருப்பவர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

தம்மம்பட்டியில் உண்ணாவிரதம் இருந்த ஹிந்துக்கள் மீது போலீசார் தடியடி - பொய் வழக்கு!


கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் உள்ள மசூதியின் ஒலிபெருக்கி திடீரென அலறியது. "மசூதியின் வாசல் எதிரே விநாயகர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிலையை அகற்றப் போராட்டம் நடத்த வேண்டும். இனி ஹிந்துக் கடைகளில் பொருள்கள் வாங்கக்கூடாது. மானமுள்ள முஸ்லிம்கள் உடனடியாக ரோட்டிற்கு வரவேண்டும்" என்று அந்த ஒலிபெருக்கியிலிருந்து கட்டளை, காற்று வழியாக பறந்து வந்தது. உடனே 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தம்மம்பட்டி - திருச்சி நெடுஞ்சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் செய்தனர். இந்த மறியலில் குறிப்பிடத் தக்க அளவில் முஸ்லிம் பெண்களும் பங்கேற்றனர்.


சாலை மறியலில் ஈடுபட்ட முஸ்லிம்கள் தம்மம்பட்டி காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபடும் செய்தி பரவியது. தம்மம்பட்டியில் பதட்டம் ஏற்பட்டது. இதனால் இந்து முன்னணி போன்ற ஹிந்து இயக்கத் தலைவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றனர். ஹிந்து இயக்கத் தலைவர்கள் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தி பரவியதும், ஹிந்துக்கள் அனைவரும் வீதிக்கு வரத் தொடங்கினர். மாலை 3 மணி அளவில் யாரும் எந்த அழைப்பும் விடுக்காத போதும் ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு வீதியில் குவிந்தனர்.

ஹிந்துக் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள் என்றும் மானமுள்ள முஸ்லிம்கள் வீதிக்கு வரவேண்டும் என்றும் மசூதி ஒலிபெருக்கியில் அறிவித்தது ஹிந்துக்களைக் கொதிப்படையச் செய்தது. 1989 இல் தம்மம்பட்டியில் முருகன் கோயில் ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் நடத்திய கலவரமும் அதில் இரண்டு ஹிந்துக்கள் கொல்லப்பட்டதும் மக்களின் மனதில் மறையாத வடுவாக இருந்ததால் இந்த முறை ஹிந்துக்கள் விழிப்புடன் போராடத் தயாரானார்கள்.


செப்டம்பர் 15 ஆம் தேதி தம்மம்பட்டியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. தம்மம்பட்டி - திருச்சி நெடுஞ்சாலையில் 3000 க்கும் அதிகமான ஹிந்துக்கள் கூட்டமாகத் திரண்டிருந்தனர். இந்தச் சூழ்நிலையில் இரவு 7 மணிக்கு கமிஷனர் கோபாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி.செண்பகராமன் தலைமையில் ஹிந்து - முஸ்லிம் பிரதிநிதிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் பிரதிநிதிகள், குறிப்பாக வீட்டு வசதி சங்கச் செயலாளர் ஜாபர் சாதிக் அலி, "பாகிஸ்தான் ஜிந்தாபாத்! இது முஸ்லிம்கள் நாடு. நீங்கள் நேபாளத்திற்கு போங்கள். அங்கு போய் சிலை வையுங்கள்" என்று ஆணவமாகப் பேசியதால் பேச்சு வார்த்தை முறிந்தது.

ஹிந்துக்களை `நேபாளத்திற்குப் போங்கள்' என்று முஸ்லிம்கள் பேசிய தகவல்கிடைத்ததும் நடுரோட்டில் திரண்டிருந்த ஹிந்துக்களின் உள்ளம் கொதித்தது. ஹிந்து இயக்கத் தலைவர்கள் அவர்களை அமைதிப்படுத்தினார்கள். இந்த நிலையில் கோட்டாட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் இரவு 9 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைத் துவங்கியது. ஹிந்துக்கள் தரப்பில் பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.சி.தண்டபாணி, பா.ஜ.க மாவட்டப் பொறுப்பாளர் பி.கந்தசாமி உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டனர். அப்போது விநாயகர் சிலை ஏன் மசூதி வாசல் அருகில் வைக்கப்பட்டது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. "மசூதி வாசல் சில ஆண்டுகளுக்கு முன்புதான் இடமாற்றம் செய்யப்பட்டது. முன்பு மேற்குப் புறத்தில் இருந்த வாசல் இப்போது கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தின் முன்பு மாற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில்தான் ஆண்டுதோறும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் மசூதி வாசலை மாற்றிவிட்டு சிலை வைக்கக்கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?" என்று ஹிந்துக்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனை தம்மம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் அம்சவள்ளி அவர்களும் உறுதிப்படுத்தினார்.
விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டதா? என்ற கேள்விக்கு, "பல வருடங்களாக எங்கு விநாயகர் சிலை வைக்கப்பட்டாலும் காவல்துறைக்கு தகவல் கொடுத்து விட்டே வைக்கிறோம். இந்த ஆண்டும் தகவல் கொடுக்கப்பட்ட பிறகே சிலை வைக்கப்பட்டது. முஸ்லிம்கள் பிரச்சினை செய்யும் கன்னிகா பரமேஸ்வரி கோயில் அருகிலும் அனுமதி பெற்றே சிலை வைத்தோம். காவல்துறை எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை" என்பதை ஹிந்துப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினார்கள்.


ஹிந்துக்கள் தரப்பில் நியாயம் இருந்ததால் பேச்சுவார்த்தை ஹிந்துக்களுக்கு சாதகமாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் காவல்துறையின் பெரும்பகுதியினர் விநாயகர் சிலையை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். ஆளும் கட்சி மற்றும் காவல்துறையின் ஹிந்து விரோதப் போக்கின் காரணமாக கையெழுத்துப் பெற்று சிலையை அகற்றுவது அல்லது ஹிந்துப் பிரதிநிதிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துவிட்டு, சிலையை அகற்றுவது என்று போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதற்காக வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் மீது தடியடி நடத்திடவும் போலீசார் திட்டமிட்டிருந்த செய்தியினை அவர்களின் நடவடிக்கையின் மூலம் ஹிந்துப் பிரதிநிதிகள் அறிந்து கொண்டனர்.

எக்காரணத்தை முன்னிட்டும் கலவரம் ஏற்பட்டுவிடக் கூடாது. இந்தப் பிரச்சினையால் எந்த ஒரு ஹிந்துவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது' என்பதில் ஹிந்துப் பிரதிநிதிகள் உறுதியாக இருந்தனர். இதனால் போலீசாரின் ஒரு சில நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்தனர். அதன்படி மசூதி மற்றும் விநாயகர் சிலை இவற்றிற்கு நடுவே திரைச்சீலை அமைப்பது என்றும், தொழுகை நேரத்தில் மேளதாளங்கள் ஒலிப்பதில்லை என்றும் விருப்பம் இல்லாவிட்டாலும் ஹிந்துக்கள் பொது அமைதி கருதி இவற்றிற்கு ஒப்புக்கொண்டனர். இது நடந்த போது இரவு 11.30 மணி. அந்த நேரத்தில் ஹிந்துப் பிரதிநிதிகள் வெளியே வந்து, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் நிலைமையை எடுத்துக் கூறினர். அவர்களிடம், சிலையை ஏன் மறைக்க வேண்டும்? பூஜை நேரத்தை ஏன் மாற்றவேண்டும்? என்று சரமாரியாக மக்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனால் பதட்டம் அதிகரித்தது. இந்தப் பதட்டம் கலவரமாக மாறிவிடக் கூடாது என்பதால், "உடனடியாகக் கலைந்து செல்லுங்கள். நாளை (செப்டம்பர் 16) காலை 10 மணிக்கு பஸ்நிலையம் அருகில் உள்ள ஊராட்சித் துவக்கப்பள்ளிக்கு அனைவரும் வாருங்கள்" என்று கூறி சூழ்நிலையை சுமூகமாக்கினார்கள்.


செப்டம்பர் 16 ஆம் தேதி ஞாயிறன்று தம்மம்பட்டி நகரமே மயான அமைதியில் ஆழ்ந்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.பொதுமக்கள் அனைவரும் பஸ்நிலையம் அருகில் உள்ள ஊராட்சி துவக்கப்பள்ளியில் திரண்டனர். திரைச்சீலை வைப்பதற்கு ஒப்புதல் பெற்ற போலீசார், விநாயகர் சிலையைச் சுற்றி தகர சீட்களை வைத்து அடைத்தனர். திரைச்சீலை வைத்து மறைப்பதையே ஏற்றுக்கொள்ளாத ஹிந்துக்கள் காவல்துறையின் இந்த முறைகேடான செயலால் கொதிப்படைந்தனர். இதனால் சூழ்நிலை மேலும் மோசமாகியது. ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சித் துவக்கப்பள்ளியில் குவிந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய இந்து முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.சி.தண்டபாணி செப்டம்பர் 15 ஆம் தேதி பேச்சுவார்த்தையின் போது நடந்தது என்ன என்பதையும், எந்த ஒரு ஹிந்துவும் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாது என்பதற்காகவும், ஹிந்துக்களின் உடைமைகளுக்கு சேதம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் விருப்பம் இல்லாத போதிலும் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கினார். ஆனால் போலீசார் ஒப்புக்கொண்ட படி நடந்து கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். அதனால் இனி ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் இந்து முன்னணி மற்றும் இந்து இயக்கங்கள் உடன்படும் என்று தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஊர்மக்கள் இனி நாமே முடிவு செய்வோம் என்றனர். இங்குக் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாலை 3 மணிக்கு ரெட்டியார் மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் என அறிவித்தனர். மாலை 4 மணிக்கு ஜாதிக்கு மூன்று பேர் என 36 ஜாதிகளை சேர்ந்த 135 க்கும் மேற்பட்டோர் கூடி விவாதித்தனர். அப்போது மண்டபத்தில் 2,000 க்கும் அதிகமான பொதுமக்கள் கூட்டம் நடந்த உணவுக் கூடத்திற்கு வெளியே காத்திருந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (பார்க்க : பெட்டிச் செய்தி) இந்தத் தீர்மானங்களில் அனைத்து ஜாதிப் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர். இரவு 8 மணிக்கு இந்தத் தீர்மானத்தின் நகலைக் காவல்துறையிடம் ஒப்படைப்பது என முடிவு செய்தனர். அதற்குள் பொதுமக்களின் இரண்டு நாள் தொடர் போராட்டம், 3,000 க்கும் அதிகமான மக்களின் கூட்டம் இவற்றைக் கண்ட காவல்துறை விநாயகர் சிலைக்கு முன்பு இருக்கும் தகரத் தடுப்பை மட்டும் அகற்றியது.


தகரத் தடுப்பு அகற்றப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட மக்கள் அந்தச் சிலையை வழிபட ஊர்வலமாகச் சென்றனர். காவல்துறையினர் ஹிந்துக்களுக்கு விரோதமாக இருக்கும்போது ஆயிரக் கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றால் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். காவல்துறையினர் ஹிந்துக்களின்மீது தடியடி நடத்தலாம் என்பதால் ஹிந்து இயக்கப் பொறுப்பாளர்களும், ஊர்த்தலைவர்களும் மக்கள் ஊர்வலமாகச் செல்வதை தடுத்தனர். மக்களை சிறிது சிறிதாகக் கலைத்து வீட்டுக்கு அனுப்பினர். ஆனால் மண்டப வாயிலில் கூடியிருந்த மக்கள் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் பேருந்து நிலையத்தில் கூடினார்கள். அந்த இரவிலும் 2,000 க்கும் அதிகமான பொதுமக்கள் அங்கு திரண்டிருந்தனர். சூழ்நிலை மிகவும் அபாயகரமாக இருந்தது. திரண்டிருந்த 2,000 ஹிந்துக்களைச் சுற்றி காவல்துறையினர் ஒரு வளையம் அமைத்தனர். இதனால் ஹிந்து இயக்கத்தினர் உதவியுடன் இளைஞர்கள் தனித்தனியாக பேசி மக்கள் அனைவரையும் அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பினார்கள்.
இந்நிலையில் இரவு 11 மணிக்கு கோட்டாட்சியாளர் பாஸ்கரபாண்டியன் ஹிந்துக்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது சேகர் என்ற தனிநபர் காவல் துறையினரின் கைப்பாவையாக மாறி ஊர்த் தலைவர்கள் எடுத்த முடிவுக்கு எதிராக சில கருத்துக்களைக் கூறி நிலைமையைக் குழப்பினார். ஊர்த் தலைவர்கள் சேகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காவல் துறையினர் கூட்டம் முடிந்து விட்டது என்று அவசர அவசரமாக வெளியேறிவிட்டார்கள்.


செப்டம்பர் 16 ஆம் தேதி காலை நடந்த ஊர்க் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி மறுநாள் (செப்டம்பர் 17) ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றினார்கள். கருப்பு பேச் அணிந்து பஸ்நிலையத்தில் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்தனர். இதனால் மூன்றாவது நாளும் மயான அமைதியுடனே விடிந்தது. மூன்றாவது நாளாக அன்றும் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த மூன்று நாளும் கடைகளை அடைக்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. மக்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு சுமார் 750 க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பேச் அணிந்து பஸ் நிலையத்தில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. சுமார் 12 மணி அளவில் 500 பெண்கள் உட்பட 2,000 க்கும் அதிகமானோர் உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்திருந்தனர். இந்த உண்ணாவிதரம் கலவரத்தில் முடிந்துவிடக் கூடாது என்பதற்காக ஹிந்து இயக்கப் பொறுப்பாளர்களும், ஊர்த்தலைவர்களும் மைக்கில் பேசுவதைக் கூட தவிர்த்தனர். ஹிந்து மக்களின் ஒற்றுமையையும் போராட்ட வேகத்தையும் கண்ட அரசு பணிய ஆரம்பித்தது. கோட்டாட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஒரு அரசு அதிகாரிகள் குழு முஸ்லிம்களிடம் பேச்சுவார்த்தைக்குச் சென்றது. 12.30 மணிக்கு பஸ் நிலையத்தில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த இடத்துக்கு வந்த கோட்டாட்சியர் பாஸ்கர பாண்டியன் ஹிந்துப் பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று அழைத்தார். எதுவாக இருந்தாலும் பொதுமக்கள் முன்னிலையில் தான் பேசவேண்டும் என்று ஹிந்துப் பிரதிநிதிகள் கூறிவிட்டனர். செப்டம்பர் 16 ஆம் தேதி இரவு பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேச வாய்ப்பளிக்காததைச் சுட்டிக்காட்டி கோட்டாட்சியர் பாஸ்கரபாண்டியனின் அழைப்பை ஹிந்துப் பிரதிநிதிகள் நிராகரித்தனர்.


"நான் முஸ்லிம்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்கள் ஹிந்துக்கள் இல்லாமல் நாங்கள் வாழ முடியாது. ஹிந்துக்களுடன் இணக்கமாகவே வாழ விரும்புகிறோம். எங்கள் சமூகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் வழி தவறிப்போய் அரசியல் ஆதாயத்திற்காக பிரச்சினை செய்துவிட்டனர். அவர்கள் விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளட்டும். திரையை எடுத்து விடலாம் என்றும் முஸ்லிம்கள் கூறினார்கள். எனவே என்னுடன் வாருங்கள். திரையை அகற்றிவிடலாம் " என்று கோட்டாட்சியர் பாஸ்கர பாண்டியன் அவராகவே முன்வந்து ஹிந்துப் பிரதிநிதிகளிடம் கூறினார். உடனடியாக ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.சி.தண்டபாணி தலைமையில் சிலர், கோட்டாட்சியர் பாஸ்கர பாண்டியனுடன் சேர்ந்து திரையை அகற்றி விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
தம்மம்பட்டி பஸ் நிலையம் அருகே வெங்கடேஸ்வரா என்ற பெயரில் முஸ்லிம் ஒருவர் கடை நடத்தி வருகிறார். `ஹிந்துக் கடவுளின் பெயரில் முஸ்லிம் கடை நடத்தக் கூடாது. பெயரை மாற்றவேண்டும்' என்று உண்ணாவிரதப் பந்தலில் இருந்த மக்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்தனர். உண்ணாவிரதம் இருந்த சில இளைஞர்கள் இப்போதே வெங்கடேஸ்வரா என்ற பெயர்ப் பலகையை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இந்த நேரத்தில் நாமக்கல் எஸ்.பி.நிக்கல்சன் ஹிந்துக்கள்மீது தடியடி நடத்த உத்தரவிட்டார். எஸ்.பி.உத்தரவிட்டதும் போலீசார் காட்டுமிராண்டித்தனமாக ஹிந்துக்களை தாக்கத் தொடங்கினார்கள். போலீசாரின் இந்த மனிதாபிமானமற்ற தடியடியில் கர்ப்பிணிப் பெண் உட்பட 9 தாய்மார்கள் பலத்த காயமடைந்தனர். ஹிந்து இயக்கத் தலைவர்களும், ஊர்த் தலைவர்களும் கோட்டாட்சியர் பாஸ்கர பாண்டியனுடன் விநாயகர் சிலையை வழிபடச் சென்றிருந்த 20ஆவது நிமிட நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. உண்ணாவிரதம் நடந்த இடத்திற்கு திரும்பிய ஹிந்து இயக்கத் தலைவர்கள் எஸ்.பி.யிடம் "ஏன் தடியடி நடத்தினீர்கள்? கர்ப்பிணிப் பெண்களை ஏன் தாக்கினீர்கள்" என்று வாக்குவாதம் செய்தனர். தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள்மீது ஹிந்துக்கள் போலீசில் புகார் அளித்தனர். இவ்வளவு சம்பவமும் மதியம் 1.30 மணிக்குள் நடந்து முடிந்தது.

தேவையில்லாமல் ஹிந்துக்கள்மீது நடத்திய தடியடிக்கு காரணம் தேடியும், முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்காகவும் காவல்துறை மதியம் 2.15 மணிக்கு மேல் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியது. 3 நாள் தொடர் பந்த் நடத்தியும் எந்த வித வன்முறையிலும் ஈடுபடாமலும் அமைதி காத்த ஹிந்துக்கள்மீது காவல்துறை தனது சுய முகத்தை காட்டத் துவங்கியது. காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் தம்மம்பட்டியில் பொதுமக்கள் காவல்துறையினருக்கு எந்த வசதியும் அளிக்க மறுத்துவிட்டனர். மூன்று நாட்களும் கடையடைப்பு நடந்ததால் போலீசாருக்கு தம்மம்பட்டியில் உணவுக்கும் வழியில்லை. 1989 ஆம் ஆண்டு கலவரத்தின்போது முஸ்லிம்கள் ரெட்டியார் மண்டபத்தில் தங்கியிருந்தனர். அப்போது போலீசார் ஹிந்துக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ரெட்டியார் சமூகத்தினர் போலீசாருக்கு மண்டபம் தரமுடியாது எனக் கூறி மண்டபத்தை மூடிவிட்டனர். அதனால் போலீசார் தம்மம்பட்டி உடையார்பாளையம் ஷ்ரீனிவாசா திருமண மண்டபத்தில் தங்கினார்கள். செப்டம்பர் 15-ம் தேதியிலிருந்து போலீசாரின் நடவடிக்கைகளால் வெறுத்துப்போன மண்டப உரிமையாளர் ஊர்மக்களுடன் ஒத்துப்போக வேண்டும் என்று கூறி மண்டபத்தைக் காலி செய்யுமாறு போலீசாரிடம் கூறிவிட்டார். ஆனாலும் காவலுக்கு வந்த பெண் போலீசாருக்கு மட்டும் தங்கள் வீடுகளில் தங்க அனுமதித்தனர்.

இதனால் கோபமடைந்த காவல்துறையினர் ஹிந்துக்களை வேட்டையாடத் தொடங்கினார்கள். செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 89 அப்பாவி ஹிந்துக்களைக் கைது செய்தனர். அதோடு போலீசாரின் வெறி அடங்கவில்லை. கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள். தம்மம்பட்டியில் பல இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அவர்களையெல்லாம் மிரட்டி நாளைக்குள் (செப்டம்பர்18) அனைத்து விநாயகர் சிலைகளையும் எடுத்துவிட வேண்டும் என்று மிரட்டத் தொடங்கினார்கள். போலீசார் தங்கள் கண்ணில் தென்படும் ஹிந்துக்களை எல்லாம் கைது செய்தனர். பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷை ஐ.ஜி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் என்று கூறி அழைத்துச் சென்று நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்த ஹிந்துக்கள் அனைவர் மீதும் 307(கொலை முயற்சி)பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் முஸ்லிம்கள் தரப்பில் கைது செய்யப்பட்ட 30 பேர் மீதும் சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்."கூட்டமாக நின்று மறியல் செய்தனர். கலைந்து செல்லுங்கள் என்று கூறியதும் கலைந்து சென்று விட்டார்கள்" என்று முஸ்லிம்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதே நேரத்தில் 30 ஹிந்துக்கள் மீது `கொன்று விடுவேன் என மிரட்டியது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது' எனக் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் மூன்று நாட்கள் தொடர் பந்த் நடந்தும் தம்மம்பட்டியில் எந்தவித வன்முறை சம்பவங்களும் நிகழவில்லை. இதனைக் காவல்துறையே ஒப்புக் கொண்டுள்ளது. காவல்துறை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த மனுவில், "1000க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டனர் என்றும் அதன்மூலம் ரூ.2,000 மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன" என்றும் கூறியுள்ளது. இதன்மூலம் ஹிந்துக்கள்மீது பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டதை காவல்துறையே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.

இவ்வளவு செய்தும் காவல்துறையினருக்கு வெறி அடங்கவில்லை. முஸ்லிம்களைத் திருப்தி படுத்துவதற்காக தொடர் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். செப்டம்பர் 17 ஆம் தேதி இரவு ஹிந்து இயக்கப் பொறுப்பாளர்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார் பெண்களிடம் அநாகரிமாக நடந்துள்ளனர்.அவமானப்படுத்தியுள்ளனர். தேடிவந்த நபர் இல்லாதபோது வீட்டில் இருந்த தந்தை அல்லது தம்பியை அழைத்துச் சென்று 307வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஹிந்துக்களில் 22 நபரை தேடப்படும் நபர்களாக அறிவித்து மொத்தம் 525 பேர் மீது 307வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறையின் இந்த ஹிந்து விரோத நடவடிக்கையின் காரணமாக தம்மம்பட்டி பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

போலீசாரின் இந்த அராஜகத்தை எதிர்த்து ஹிந்துக்கள் போராட ஆயத்தமானார்கள். இதனால் கோவை! மேற்கு மண்டல ஐ.ஜி ராஜேந்திரன் தம்மம்பட்டிக்கு வந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் தம்மம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் ஜகந்நாதன் திடீரென டிரான்ஸ்பர் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர்மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை போலீசார் நடத்திய அராஜகத்தை உறுதிப்படுத்துகிறது. பேச்சுவார்த்தையின் போது `பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிட்டு, `நேபாளத்திற்கு போங்கள்' என்று கூறிய வீட்டு வசதி சங்க செயலாளர் ஜாபர் சாதிக் அலிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு பிரச்சினையைப் பெரிதாக்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க) நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ஹிந்துக்கள்மீது தடியடி நடத்திய நாமக்கல் எஸ்.பி.நிக்கல்சன் மீதும் கோட்டாட்சியர் பாஸ்கரபாண்டியன் கூறியவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தம்மம்பட்டி சகஜ நிலைமைக்குத் திரும்பாது என்கிறார்கள் அங்குள்ள ஹிந்துக்கள். ஆனால் ஆளும் கட்சியாக முஸ்லிம்களுக்குச் சாதகமான தி.மு.க அரசு இருப்பதால் காவல் துறையினர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். தமிழக அரசு காவல் துறை, முஸ்லிம்கள் ஆகியவற்றின் சதிகளையெல்லாம் மீறி தம்மம்பட்டியில் அமைதி ஏற்படுமா? தம்மம்பட்டி ஹிந்துக்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா? தம்மம்பட்டியில் போலீசார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடத்திய அட்டூழியங்களைப் பார்க்கும்போது இந்தியா ஒரு ஜனநாயக நாடுதானா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.