December 26, 2006

கழிப்பிடமாக கம்பர் பிறந்த இடம்


கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்' என்பார்கள். ஆனால் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கவிச்சக்கரவர்த்தி பிறந்த தேரழுந்தூரில் இன்று அவரது வீடும் இல்லை. கவிபாட கட்டுத்தறியும் இல்லை. கம்பர் பிறந்த இடமாக இந்தியத் தொல்லியல் துறை முள்வேலியிட்டு அடையாளப்படுத்தி உள்ள இடம் குப்பைமேடாகவும் மலம், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கம்பர் மேடு என்று அந்தப் பகுதி மக்களால் அழைக்கப்படும் அந்த இடத்தைத் தவிர, மற்ற எல்லா இடங்களும் முஸ்லிம்கள் வசம் உள்ளது. கம்பர் பிறந்து, வாழ்ந்து, கவிதைகள் பல புனைந்த அவரது வீட்டிற்கு அருகில், மிகப்பெரிய மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி தவிர அந்த ஊரில் பல மசூதிகள் உள்ளன. அவற்றில் சில மிக பிரம்மாண்டமானவை.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான தேரழுந்தூர் பெருமாள் கோயில், மேலையூர், கீழையூர், தொழுதொழாங்குடி ஆகிய 4 பஞ்சாயத்துக்களைக் கொண்ட மிகப்பெரிய ஊராகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் தேரழுந்தூரில் ஷ்ரீரங்கநாதனாகவும், ஷ்ரீகோவிந்தராஜனாகவும், ஷ்ரீதேவாதி ராஜனாகவும் எழுந்தருளியுள்ள மூன்று திவ்ய தேச எம்பெருமான்கள் பற்றி 45 பாசுரங்கள் பாடியுள்ளார். இங்குள்ள ஆமருவியப்பன் என்ற பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரில் ஒரு கி.மீ. தொலைவில் ஒரு சிவன் கோயில் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் வழிபட்ட பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை ஒட்டி பிரம்மாண்டமான இரண்டடுக்கு அரபிக் கல்லூரி ஒன்று உள்ளது.
தேரழுந்தூரில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் இருப்பதால், கம்பர் மணிமண்டபத்தை அவர்கள் பொழுதுபோக்கிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். தேரழுந்தூரில் உள்ள முஸ்லிம் இளைஞர்களில் பெரும்பாலானோர் டிரைவர்களாக உள்ளனர். இவர்கள் இரவில் தங்களது வாகனத்தை மணிமண்டபத்தில் நிறுத்திவிட்டு மது அருந்துவது, விலை மாதர்களோடு சல்லாபிப்பது போன்ற இரவுக் களியாட்டங்களை தினந்தோறும் அந்தப் புனிதமான இடத்தில் அரங்கேற்றி வருகிறார்கள்.
நாங்கள் அங்கு சென்றபோது கம்பர் மணிமண்டபத்தில் திருமண மண்டபம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு இரவு காவலாளியாக பணிபுரியும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவரிடம் நாங்கள் பேச்சுக் கொடுத்தோம். "முன்பு இங்கு வாட்ச்மேன் கிடையாது. முஸ்லிம் டிரைவர்கள் இங்கு பண்ணாத அட்டூழியம் இல்லை. நான் இரவு வாட்ச்மேனாக வந்தவுடன் மணிமண்டபத்தை சுத்தம் செய்தேன். அங்கிருந்த காலி மது பாட்டில்களையும், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளையும்,பெண்களின் உள்ளாடைகளையும், அவர்கள் செய்த அசிங்கத்தையும் சுத்தம் செய்ய மூன்று நாட்கள் ஆகிவிட்டது" என்று வேதனையுடன் கூறினார்.


கம்பர் மணிமண்டபமும், அரபிக் கல்லூரியும் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவை முஸ்லிம்கள் மதரஸா தெரு என்றே அழைத்து வருகின்றனர். முஸ்லிம்கள் கடிதம் எழுதும் போதும், வீடுகளிலும் மதரஸா தெரு என்றே எழுதுகின்றனர். அதோடு தேரழுந்தூர் என்பதை தேரிழந்தூர் என்று எழுதுகின்றனர். அரபிக் கல்லூரி மற்றும் பள்ளிவாசல்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் தேரிழந்தூர் என்றே எழுதியுள்ளனர்.
பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள அக்ரஹாரத்திலுள்ள பெரும்பான்மையான வீடுகளை முஸ்லிம்கள் வாங்கிவிட்டனர். அழகு தமிழில் கம்ப ராமாயணமும், ஆழ்வார் பாசுரங்களும் ஒலித்த வீடுகளில், அரபி மொழியில் குரான் வசனங்கள் கேட்கின்றன.
அக்ரஹாரங்கள் எப்படி முஸ்லிம்கள் வசமாகியது என்று அங்குள்ள ஒரு பெரியவரிடம் விசாரித்தோம். அக்ரஹாரத்தில் ஒரு வீட்டை வாங்கிய முஸ்லிம்கள், அந்த வீட்டில் மாமிசங்களைச் சமைத்து பக்கத்து வீட்டில் கொட்டுவார்களாம். எதிர்த்துக் கேட்டால் அடிஉதைதான். தேரழுந்தூரில் ஹிந்துக்களை அக்ரஹாரத்திலிருந்து துரத்த வேறு ஒரு மோசமான வழியையும் முஸ்லிம்கள் பின்பற்றியுள்ளனர். அக்ரஹாரத் தெருவில் பெண்கள் வெளியே வரும் நேரங்களில் முஸ்லிம் இளைஞர்கள் நிர்வாணமாக நிற்பார்களாம். முஸ்லிம்களின் இந்த அட்டூழியங்களுக்குப் பயந்து அவர்களுக்கே வீட்டை விற்றுவிட்டு வெளியூர்களில் குடியேறிவிட்டனர். இன்று பெருமாள் கோயிலில் பூஜை செய்யும் ஓரிரு குடும்பங்களைத் தவிர அக்ரஹாரத்தில் ஹிந்துக்களே இல்லை.
நாங்கள் `விஜயபாரத'த்திற்காக அங்கு சென்ற போது அக்ரஹாரத் தெருவில் பெருமாள் கோயிலுக்கு அருகில் ஒரு முஸ்லிம் வீட்டில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. அருகில் சென்றபோது அசைவ வாசனை மூக்கைத் துளைத்தது. அங்கிருந்த முஸ்லிம் பெரியவர் ஒருவரிடம் என்ன விசேஷம் என்று மெதுவாக பேச்சுக் கொடுத்தோம்.அந்த வீட்டில் திருமண விருந்து நடப்பதாகக் கூறிய அவர் விருந்தில் ஆடு, மாடு, கோழி,
மீன், முட்டை என எல்லாம் உண்டு என்று பெருமையுடன் கூறினார். நாங்கள் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக நிற்கும்போதும் அசைவ வாசனை நம் நாசிகளைப் பதம் பார்த்தது.



பெருமாள் கோயிலுக்கு வந்திருந்த உள்ளூர்வாசி ஒருவரிடம், "கோயிலுக்குப் பக்கத்தில் அசைவ விருந்து நடக்கிறதே, நீங்கள் தட்டிக் கேட்கக் கூடாதா?" என்றோம். நம்மை மேலும் கீழும் பார்த்தவர், "நீங்கள் வெளியூரா" என்று கேட்டுவிட்டு, "முஸ்லிம்களை எதிர்க்கும் துணிவெல்லாம் ஹிந்துக்களுக்குப் போயாச்சு. இங்கு அவர்கள்தான் மெஜாரிட்டி. அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது. ஏன் பேசக் கூட முடியாது" என்று அடுத்த நாட்டிலிருந்து உயிர் பிழைக்க ஓடி வந்த அகதி போல புலம்ப ஆரம்பித்து விட்டார்.
இன்றும் தமிழ் செல்வாக்கோடு இருக்கிறதென்றால் அதற்கு காரணம் கம்பர்தான். ராமனையும், சீதையையும், அனுமனையும் தமிழனுக்கு அறிமுகப்படுத்தியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான். கம்பரின் சுவடு தொட்டு பாட்டெழுதாத தமிழ்ப் புலவர்களே இல்லை என்று சொல்லலாம். தமிழ், தமிழ் என முழங்கும் தமிழினத் தலைவர்களும், உலக தமிழினத் தலைவர் என போஸ்டர் அடித்துக் கொள்பவர்களும் ஒருமுறையாவது கம்பர் பிறந்த தேரழுந்தூருக்குச் சென்று அங்கு தமிழுக்கும் கம்பனுக்கும் இழைக்கப்படும் அநீதிகளையும் அவலங்களையும் பார்க்க வேண்டும்.

கம்பர் பிறந்த இடம் வருவோர் போவோர் எல்லாம் மலம், சிறுநீர் கழிக்கும் இடமாக இருப்பதற்கு ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் வெட்கப்பட வேண்டும். கம்பர் பிறந்த இடத்தில் அவருக்கு நினைவிடம் எழுப்பி பராமரிக்க வேண்டும். அதோடு கம்பர் வழிபட்ட பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவை மதரஸா தெரு என்று மாற்ற முயற்சிக்கும் முஸ்லிம்களின் சதித்திட்டத்தைத் தடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்த்தாய் நம்மை மன்னிக்க மாட்டாள்!

4 comments:

Anonymous said...

கழிப்பிடமாக கம்பர் பிறந்த இடம் பதிவு பார்த்தேன். கண்ணீர் வந்து விட்டது. தாய் தமிழுக்கு அழியாத அடையாளம் கொடுத்த கவிச்சக்கரவர்த்தி அவதரித்த இடம் கழிப்பிடமாக இருப்பதற்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டும். கவிச்சக்கரவர்த்தி பிறந்த அந்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்க யாராவது முயற்ச்சித்தால் நல்லது. உங்கள் பதிவில் உள்ள கட்டுரைகள் தஞ்சை தமிழ்மண் நம் கையைவிட்டு போய்விட்டதையே காட்டுகிறது. குறைந்த பட்சம் கம்பருக்கு நினைவுச் சின்னமாவது எழுப்புவோம்.

கடல் கடந்த தமுமுக said...

இந்த மசூதி தவிர அந்த ஊரில் 10க்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளன. அவற்றில் சில மிக பிரம்மாண்டமானவை.தேரழந்தூரில் மூன்று மசூதிகள் உள்ளன.தான் நீங்கள் நிரூபிக்க தயாரா

புதுவை சரவணன் said...

தேரழுந்தூர், தொழுதாழங்குடி, பெருமாள்கோவில், மேலையூர் ஆகிய நான்கு பஞ்சாயத்துக்களைக் கொண்ட தேரழுந்தூரில் மூன்று பிரமாண்டமான மசூதிகளும் மிக பிரமாண்டமான இரண்டடுக்கு மதரஸாவும் உள்ளன. பெருமாள் கோவில் தெருவில் உள்ள இந்த மதரஸாவே 10 மசூதிகளுக்கு சமம். மசூதி என்ற பெயரில் தேரழுந்தூரில் மூன்றுதான் உள்ளன. அதைத்தவிர பல மசூதிகள் என்பதற்கு பதிலாக அதைத்தவிர பத்திற்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளன என்று எழுதி விட்டேன்.

Anonymous said...

தமிழ்நாட்டில் இப்படி எத்தனையோ கொடுமைகளை நானும் பார்த்திருக்கிறேன். தமிழ், தமிழ்த்தாய், தமிழ்ப்பற்று என்று அரசியலுக்கு வந்து அரசியல் நடத்துபவர்களெல்லாம் வாக்குகளுக்காகத் தமிழை விற்கும் போது, இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.