December 26, 2006

பாகிஸ்தானாகி வரும் காவிரி படுகை


கலைகள் பல பிறந்த இடம். காவியங்கள் பலவற்றின் களம். நாயன்மார்களும், ஆழ்வார்களும் அவதரித்த புண்ணிய பூமி. ராஜாதிராஜன் ராஜராஜ சோழன் ஆட்சி செய்த பிரதேசம். உலகம் வியக்கும் ஆலயங்கள் நிறைந்த பகுதி - இப்படி தஞ்சைத் தரணியின் சிறப்புகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இத்தனைச் சிறப்புகள் மிக்க தஞ்சைத் தரணி இப்போது மெல்ல மெல்ல இஸ்லாமிய மயமாகிக் கொண்டே வருகிறது.
தஞ்சைத் தரணியில் எங்களுக்கு பல அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருப்பது தெரியாமல், நாங்கள் தமிழக அரசுக்குச் சொந்தமான விரைவுப் பேருந்தில் ஒரு வியாழக்கிழமை காலை நாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தோம். நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் வரை குறுக்கும் நெடுக்குமாக பேருந்திலும், காரிலும், ஆட்டோவிலும், இரு சக்கர வாகனங்களிலும் நாங்கள் 10 நாட்கள் இடைவிடாது பயணித்தோம்.
காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நாங்கள் மேற்கொண்ட பயணத்தில் பார்த்த, கேட்ட, படித்த செய்திகள் அனைத்தும் அதிர்ச்சிகரமானவை. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான காவிரி பாயும் தஞ்சைத் தரணியில், இன்று அரபி மொழியின் ஆதிக்கம் எங்கும் பரவியுள்ளது. சிறு கிராமங்களில்கூட மிகப்பெரிய அரபிக் கல்லூரிகளும், மதரஸாக்களும் இருக்கின்றன.
8நாள் பயணத்தில் பூச்சூடி, குங்குமம் வைத்த மங்களகரமான பெண்களை எங்களால் அரிதாகவே பார்க்க முடிந்தது. கண்கள் மட்டுமே வெளியே தெரியும் அளவிற்கு ஆடையணிந்த பர்தா பெண்களும், தாடி, குல்லா, லுங்கி அணிந்த ஆண்களும்தான் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். வானுயர கோபுரங்களுடன் கூடிய கோயில்கள் நிறைந்த தஞ்சைத் தரணியில், இன்று உயர்ந்த மினார்களுடன் கூடிய மசூதிகள் நூற்றுக்கணக்கில் கட்டப்பட்டுள்ளன. ஹிந்து ஆலயங்கள் பல இடங்களில் பாழடைந்த மண்டபங்களாக மிக அற்புதமான ஹிந்து பூமியின் எச்சங்களாகக் காட்சி தருகின்றன. பல இடங்களில் ஹிந்து ஆலயங்கள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளி அக்ரஹாரம், பசுபதிநாதர் கோயில், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், பண்டாரவாடை, ராஜகிரி, பாபநாசம், திருப்பாலத்துறை, சுந்தரபெருமாள் கோயில், திருவலஞ்சுழி ஆகிய ஊர்களில் 80 சதவீதத்திற்கும்
அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இது தவிர தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், சோழபுரம், பட்டுக் கோட்டை, அதிராம் பட்டினம், மல்லிப் பட்டினம், மதுக்கூர், மீமீசல், கட்டுமாவடி, கோட்டைப் பட்டினம், பந்தர்பட்டினம், மானக்கோரை, கல்யாணபுரம், ஆவணியாபுரம், திருப்பனந்தாள், சேதுபுவசத்திரம், ஆடுதுறை, முருக்கங்குடி, நாச்சியார்கோயில், ஒரத்தநாடு போன்ற பல ஊர்களில் இஸ்லாமிய ராஜ்ஜியம்தான் நடக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், கொடிக்கால்பாளையம், அடியக்கமங்கலம், ஆழியூர், கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், குடவாசல், அபிவிருத்தீஸ்வரம், அடவங்குடி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, நன்னிலம், தேதியூர், விஷ்ணுபுரம் போன்ற பல ஊர்களில் முஸ்லிம்களை மீறி எதுவும் செய்ய முடியாது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர், தரங்கம்பாடி, கோடியக்கரை, கரியாப்பட்டினம், தேத்தாக்குடி, பூம்புகார், மயிலாடுதுறை, கிளியனூர், வடகரை, மணமந்தல், நீடூர், கடலங்குடி, குத்தாலம், வானாதி ராஜபுரம், தேரழுந்தூர், திருவாவடுதுறை, திருவலாங்காடு, சீர்காழி, தைக்கால், மேலச்சாலை, பொறையார் என பெரும்பாலான சிறு நகரங்கள், குக்கிராமங்களில்கூட முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

டெல்டா மாவட்டங்களில் அனைத்து ஊர்களிலும் முஸ்லிம்கள் 20 சதவீதத்தைத் தொட்டுவிட்டார்கள். நாங்கள் மேலே ஒரு சில ஊர்களைத்தான் பட்டியலிட்டுள்ளோம். இந்த ஊர்களில் முஸ்லிம்கள்தான் மெஜாரிட்டியாக இருக்கின்றனர். இதில் சில ஊர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். 100 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கும் கிராமங்கள்கூட எங்கள் பட்டியலில் இருந்து தப்பியிருக்கலாம்.
முஸ்லிம்களும் நம்மவர்கள்தானே அவர்கள் இருந்துவிட்டு போகட்டுமே என்று செக்யூலர் சிங்கங்கள் கேட்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு தெரியுமா? முஸ்லிம்கள் அதிகமாக உள்ள இடங்களில் அக்ரஹாரங்களையும், கோயில்களையும் குறிவைத்து அடையாளம் தெரியாதபடி செய்து விடுகிறார்கள். முற்றிலுமாக ஹிந்துக்களை டெல்டா மாவட்டங்களிலிருந்து விரட்டிவிட்டு, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கம். இந்த நோக்கத்தை வெளிப்படையாகவே சில முஸ்லிம் அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன. கோயில்களுக்கு அருகில், கோயிலுக்கு சொந்தமான இடத்திலேயே திட்டமிட்டு மசூதி கட்டுகிறார்கள்.

நாகை மாவட்டம் கடலங்குடியில் பெருமாள் கோயிலுக்குச் அருகில் மசூதி கட்ட பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
முஸ்லிம்களே இல்லாத ஊர்களில்கூட மதரஸாக்களைக் கட்டுகிறார்கள். திருநள்ளாறு அருகில் உள்ள சேத்தூரில் ஹிந்துக்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனாலும் இங்கு மதரஸா கட்ட திட்டமிட்டு, அடிக்கல் நாட்டு விழாவிற்கு புதுவை முதல்வர் ரங்கசாமியை அழைத்துள்ளனர். ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக முதல்வர் வர மறுத்துவிட்டார். மதரஸா கட்டுவதும் தடுக்கப்பட்டது.


தஞ்சைத் தரணி, காவிரி பாயும் வளமான பகுதி. அதோடு இங்கு இயற்கை எரிவாயுவும், பெட்ரோலிய பொருட்களும் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் முஸ்லிம்கள் டெல்டா மாவட்டங்களைக் குறிவைத்து அபகரித்து வருகிறார்கள். தஞ்சைத் தரணி கடலோரப் பகுதி என்பதால் இங்கு இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகுவது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய ஆபத்தாகும். கடந்த மாதம் மல்லிப்பட்டினத்தில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். மசூதிகள் பயங்கரவாதிகள் பதுங்கும் இடமாக உள்ளது. மசூதிக்குள் ஏராளமான ஆயதக் குவியல்கள் இருக்கலாம் என பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மசூதிகளில் வைத்து பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், மனித நீதி பாசறை போன்ற இஸ்லாமிய அமைப்புகள் வலுவாக உள்ளன. இந்த அமைப்புகள் இருக்கும் இடங்களில் தி.மு.க, அ.தி.மு.க கூட இருக்க முடியாது. முஸ்லிம்கள் அதிகமானால் மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகள்கூட இருக்க முடியாது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தஞ்சைத் தரணி நம்மை விட்டுச் சென்று கொண்டிருக்கிறது.யாராவது பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பினால் பாஸ்போர்ட், விசா எடுத்து பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியதில்லை. தஞ்சை, திருவாரூர். நாகை மாவட்டங்களுக்கு ஒரு விசிட் அடித்தால் போதும். பாகிஸ்தானுக்குச் சென்ற அனுபவத்தை உணர்வீர்கள்.
l

3 comments:

Anonymous said...

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமான அல்லாவின் திருநாமத்தால் தஞ்சாவூர் மட்டுமல்ல தமிழகத்தையே மார்க்க வழிக்கு திருப்புவோம்.

உலகமே மார்க்கத்திற்கு திரும்பும்போது தங்கள் கோயில்களைக்கூட காப்பாற்ற முடியாத கோழை இந்துவாய் இருப்பதை விட்டுவிட்டு மார்க்கத்திற்கு திரும்புங்கள்.

உண்மையில் தமிழகத்திலிருந்துதான் அரேபியர்கள் தோன்றினார்கள்.

அரவர்கள் என்றே தமிழர்களை அந்தக் காலத்தில் அழைத்து வந்தனர். அந்தத் தமிழர்கள் தற்போதுள்ள அரபி கண்டத்தில் குடியேறியபோது அரவர்கள் அரேபியர்களாய் அறியப்பெற்றனர். அரவர்களின் பரம்பரையில் தோன்றிய இறைத்தூதர் முகம்மது நபியவர்கள் (அவர்மேல் அமைதி உண்டாகட்டும்) இறுதிவேதமான குரானை அளித்தார்.

எனவே தமிழகம் அரபிகளுக்கு சொந்தமான நிலம்தான். இதனை ஆரிய பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து சிலைகளையும், மரங்களையும், மாதவிடாய் சுரக்கும் பெண்களையும் வணங்கவைத்தனர். தமிழர்களே, அரவர்களாக இருந்து பெருமை பெற்ற வாழ்வையே, உங்களின் முன்னோர் மதத்தையே தற்போது அரேபியர்கள் பின்பற்றுகின்றனர். அரேபியர்களின் புனித மார்க்கத்திற்கு மாறுங்கள். உங்கள் முன்னோரின் மார்க்கத்திற்குத் திரும்புங்கள்.

புதுவை சரவணன் said...

/மாதவிடாய் சுரக்கும் பெண்களையும் வணங்க வைத்தனர்//
மாதவிடாய் சுரக்கும் பெண்கள் என்றால் கேவலமா? அந்த மாதவிடாய் ரத்தத்தில்தான் ஒவ்வொரு மனிதனும் உருவாகிறான். இஸ்லாமியர்கள் எவ்வளவு தூரம் பெண்களை மதிக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்ட மார்க்கத்திற்கு மாறியவனுக்கு நன்றி! இஸ்லாமை புரிய வைத்து ஹிந்து மதத்திற்கு இவ்வளவு பெரிய சேவையை யாரும் செய்ய முடியாது.

Anonymous said...

your are correct but see the BJP now what they are doing for vice president candidate.

so who will take intiatives on this