September 13, 2007

இதற்கு பெயர்தான் மதநல்லிணக்கமா?

நம் நாட்டில் சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ற பெயரில் ஒரு வாரியம் இருக்கிறது என்பதே விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் திருநாளின்போதுதான் தெரிகிறது. அதுவும் விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டால் இந்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு மாதத்திற்கு முன்பே சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்து விடுகிறது. களிமண்ணால்தான் சிலை செய்ய வேண்டும். 5 அடிக்கு மேல் உயரம் இருக்கக் கூடாது. பிளாஸ்டர் ஆப் பாரிசால் என்னென்ன தீமைகள் எற்படும் என்றெல்லாம் இத்துறை அதிகாரிகள் நட்சத்திர ஹோட்டல்களில் பிரஸ்மீட் வைத்து முழங்க ஆரம்பித்து விடுகிறார்கள். தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இதுபோன்ற தடைகள் எதுவும் இல்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவில் முஸ்லிம்கள் ராஜ்ஜியம் நடக்கும் ஹைதராபாத்தில்கூட 50 அடி உயரத்தில் சிலை வைக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள்கூட 20 அடி 30 அடி உயரத்தில் துர்கா பூஜையின்போது துர்கா சிலை வைக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் கடல்மாசுபடும் என்கிறார்கள்.

கடல்மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்பதில் அரசுக்கு அக்கறை இருந்தால் கூவம் நதி சுமந்து வரும் லட்சக்கணக்கான மக்களின் கழிவுகளை கடலில் கலக்காமல் தடுக்க வேண்டும். தீபாவளி வந்துவிட்டால் மாசுகட்டுப்பாட்டு வாரியம் பத்திரிகையாளர்களை கூட்டி இத்தனை டெசிபிள் ஒலி எழுப்பும் பட்டாசுகளைதான் வெடிக்க வேண்டும். காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரைதான் வெடிக்க வேண்டும் என்று ஒப்பாரி வைக்கிறார்கள். கிறிஸ்தவ அமைப்புகளும், கிறிஸ்தவ பள்ளிகளும் குழந்தை தொழிலாளர்களை வைத்துதான் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கிறார்கள். எனவே பட்டாசுகளை வெடிக்காதீர்கள் என இந்து குழந்தைகளை நடுரோட்டிற்கு அழைத்து வந்து ஊர்வலம் நடத்துகிறார்கள். பொங்கல் வந்துவிட்டால் போகி பண்டிகையின்போது அதை கொளுத்தக்கூடாது இதை கொளுத்தக்கூடாது என பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது.

எப்படியாவது இந்து பண்டிகைகளின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும். பண்டிகைகளின் மூலம் இந்துக்களின் மத உணர்வு நிலைத்துவிடக்கூடாது என்பதற்காக கிறிஸ்தவர்கள் அதிகார வர்க்கத்தை வளைத்து நடத்தும் நாடகங்கள்தான் இவை என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ள போகிறோமோ தெரியவில்லை. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் இந்துக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கி வருவதால் அதற்கு தனி கவனம் கொடுத்து இடையூறு செய்கிறார்கள். இதற்கு காவல்துறையும் துணை போகிறது. காவல் துறையால் குண்டு வைக்கும் முஸ்லிம்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் விநாயகர் சிலை வைக்கும் அப்பாவி இளைஞர்களை மிரட்டுகிறது.

மதுரை மாநகரில் விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடக்க வேண்டும் என்பதற்காக போலீஸ் கமிஷனர் நந்தபாலன் முஸ்லிம் ஜமாத்தார்களை அழைத்து ஒரு கூட்டம் நட்ததியுள்ளார். இந்த கூட்டத்தில் மேலமாசி வீதி, தெற்குமாசி வீதியில் உள்ள முஸ்லிம் ஜமாத் பிரமுகர்கள், டவுன் ஹாஜியார் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த செய்தியை மதுரை தினமலர்(14-09-2007) வெளியிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடக்க வேண்டும் என்று முஸ்லிம் ஜமாத்தார்களை அழைத்து பேசினால் என்ன அர்த்தம்? பேச்சு நடத்தாவிட்டால் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்பதை காவல்துறையே ஒத்துக் கொள்கிறதா? அல்லது பாவம் ஹிந்துக்கள் ஏதோ ஊர்வலம் நடத்த ஆசைப்படுகிறார்கள். நடத்திவிட்டு போகட்டும். கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று காவல்துறை முஸ்லிம்களிடம் கெஞ்சுகிறதா?இன்று முஸ்லிம் ஜமாத்தார்களை அழைத்துபேசியதைப்போல கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டு வைப்பவர்கள் அனைவரையும் அழைத்து நகரம் அமைதியாக இருக்க ஒத்துழைப்பு தாருங்கள் என போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொள்வாரா? இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டில் ஊர்வலம் நடத்த முஸ்லிம்களின் அனுமதியை காவல் துறையே கேட்டுபெறும் கொடுமையை எங்காவது கேள்விபட்டுள்ளீர்களா? நாளை முகரம் ஊர்வலத்தின்போதும், சந்தனக்கூடு ஊர்வலத்தின்போதும் இந்துக்களை அழைத்து இப்படி பேசுவார்களா? ஒரு மதத்தினரின் ஊர்வலத்தின்போதும் மற்ற மதத்தின் பிரநிதிகளை அழைத்து கலவரம் செய்யாமல் ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொள்வதற்கு பெயர்தான் மதநல்லிணக்கமா?

எத்தனை இடையூறுகள் வந்தாலும் எல்லாவற்றையும் மீறி விநாயகர் சதுர்த்தி விழா வருடம்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சென்னை அருகிலுள்ள எர்ணாவூரில் தயாராகி வரும் விநாயகர் சிலைகளைப் பாருங்கள்.














No comments: