December 26, 2006

முஸ்லிம்களின் கீழ்த்தரமான மதமாற்ற முயற்சிகள்!

கும்பகோணத்திலுள்ள மனித நீதி பாசறையின் (எம்.என்.பி) அலுவலகத்திலிருந்து விடுமுறை நாட்களில் ஒரு டெம்போ டிராவலர் வாகனம் புறப்படுகிறது. இந்த வாகனத்தில் பயணிக்கும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் அரிஜன காலனியில் இறங்குகிறார்கள். அங்குள்ள கோயில் அல்லது பள்ளிக்கூடத்தில் மக்களை அமர வைக்கிறார்கள்.
40 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெரியவர் ஒருவர் அங்கு கூடியிருக்கும் மக்களிடையே பேசுகிறார். "நீங்கள் அரிஜனங்கள். நீங்கள் ஒடுக்கப்பட்டவர்கள். உங்களை ஹிந்து மதத்தில் உள்ள மற்ற சாதியினர் ஒதுக்குகிறார்கள். என்னதான் அரசாங்கத்தில் இருந்து சலுகைகள் கிடைத்தாலும் உங்களுக்கு சமூகத்தில் மரியாதை இல்லை. உங்களுக்கு அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்க வேண்டுமானால் நீங்கள் இஸ்ஸாம் மதத்திற்கு மாற வேண்டும்" என்கிறார்.
அவரைத் தொடர்ந்து 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் எழுந்து, "நான் முஸ்லிமாக மதம் மாறியவன். முஸ்லிமாக மாறிய பிறகு என்னை எல்லோரும் `பாய்' என்று மரியாதையோடு அழைக்கிறார்கள். அதனால் நீங்களும் முஸ்லிமாக மாறுங்கள்" என்கிறார். "ஒரு அரிஜன் பேண்ட் அணிந்து கொண்டு சென்றாலும் ஏளனமாகப் பார்க்கிறார்கள். ஆனால் ஒரு முஸ்லிம் கோவணம் கட்டிக்கொண்டு சென்றாலும் `பாய் போகிறார்' என்று மரியாதையோடு சொல்கிறார்கள். எனவே நீங்கள் இஸ்லாத்திற்கு மாறினால் மரியாதை கிடைக்கும்" என்கிறார் மற்றொருவர்.
உடனே ஓரிருவரை அமர வைத்து சில அரபி வசனங்களைக் கூறி, அதனை மீண்டும் சொல்ல சொல்கிறார்கள். பின் அவருக்கு ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டி, `இனி இதுதான் உன் பெயர். இனி நீ முஸ்லிம்' என்று அறிவிக்கிறார்கள். இது சினிமாவில் வரும் ஒரு காட்சியல்ல. கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இந்தக் காட்சி தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

தாங்கள் மதமாற்றும் காட்சியை சி.டியாக தயாரித்து முஸ்லிம் நாடுகளில் போட்டுக் காட்டி கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்து வருகிறது எம்.என்.பி. அவர்கள் வெளியிட்ட ஒரு சி. டி நமக்கும் கிடைத்தது. இந்த சி.டியை கும்பகோணத்திலுள்ள ஹிந்து இயக்கப் பிரமுகர்கள் போலீசிடம் ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எம்.என்.பி தவிர மற்ற பல இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு வழிகளில் அப்பாவி ஹிந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றி வருகிறது. திருவாரூர் அழகிரி காலனியில் உள்ள அரிஜனங்களை மதம் மாற்றிய முஸ்லிம்கள், அவர்களின் பெயர்களை மட்டும் மாற்றவில்லை. ஹிந்துப் பெயரில் இருக்கும் இந்த மதம் மாற்றப்பட்ட அரிஜனங்கள் மூலம் பல சமூக விரோத காரியங்களை முஸ்லிம் அமைப்புகள் நிறைவேற்றிக் கொள்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் டெல்டா மாவட்டங்களில் திடீர் திடீரென குடிசை வீடுகள் பற்றி எரிந்தன. இதற்கு இந்த மதம் மாறிய ஹிந்துக்களையே அம்பாகப் பயன்படுத்தி உள்ளனர். அழகிரி காலனியில் மதம் மாற்றப்பட்ட அரிஜனங்கள் `தமிழர் தன்மானப் பேரவை' என்ற அமைப்பின் போர்வையில் இந்தக் காரியங்களைச் செய்கின்றனர் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

முஸ்லிமாக மதம் மாறியவர்கள் சுன்னத் செய்துகொள்ள ரூ.20,000 கொடுக்கிறார்கள். முஸ்லிம்கள் நடத்தும் மருத்துவமனையில் மதம் மாற்றப்பட்டவர்களுக்கு இலவசமாகவே சுன்னத் செய்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் ...புலிகள் பெயரில் ஒரு அமைப்பை நடத்திவரும் ஒரு அரிஜன பிரமுகர் மதமாற்ற ஏஜெண்ட்டாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு பிரபலமான ஹிந்து பிரமுகர்களுக்கு குரான் அனுப்பி வைத்து அதன் மூலம் மதமாற்ற முயற்சித்து வருவதாக கும்பகோணத்தில் பலர் எங்களிடம் தெரிவித்தார்கள். ஓர் ஊரில் எந்த சமூகம் செல்வாக்கோடு உள்ளதோ, அந்த சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அல்லது அவர்களின் வாரிசுகளை முஸ்லிமாக மாற்றவும் திட்டமிட்டு வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மதம் மாற்றுவதற்காக ஹிந்துப் பெண்களுக்கு காதல் வலையும் விரிக்கிறார்கள் (இதுபற்றி தனிக்கட்டுரை வெளியாகியுள்ளது). விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களையும் குறிவைத்து மதம் மாற்றி வருகிறார்கள்.
பல இடங்களில் முஸ்லிம்கள் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள். தங்களிடம் பஞ்சாயத்திற்கு வருபவர்களை மிரட்டி மதம் மாற்றுகிறார்கள். எப்படியாவது காவிரி டெல்டா மாவட்டங்களை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்ற சதித்திட்டத்தோடு முஸ்லிம் அமைப்புகள் காய் நகர்த்தி வருகின்றன. இனியாவது ஹிந்துக்கள் விழித்துக் கொள்ளப் போகிறார்களா? அல்லது தஞ்சைத் தரணி ஒரு காஷ்மீராக மாறும்வரை காத்திருக்கப் போகிறார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments: